நிலவுப் பெண் வருகிறாள் -நமக்கு
நிறைந்த இன்பம் தருகிறாள்
உலவும் காற்றே வாகனம் -அவள்
உலகம் சுற்றும் மோகனம்
கால்கள் இன்றியே நடக்கிறாள் -என்றும்
கல்லையும் முள்ளையும் கடக்கிறாள்
ஆட்கள் இல்லாதக் காட்டினிலும் -இன்னும்
அழகாய் ஆட்சி செய்கிறாள்
பிள்ளைகளுக்கு இரவில் துணையாவாள் -நாம்
பேசும் தமிழிலும் வாழ்கிறாள்
கள்ளம் அறியாத நல்லவளாய் -நீள
கடலினைத் தாண்டியும் செல்கிறாள்
வானத்து வெளியில் வசிக்கிறாள் எங்கும்
வசந்தத்தை அள்ளியே தருகிறாள்
மோனத் தவத்து முனிவரிடையே -மாய
மோகனப் புன்னகை புரிகிறாள்
கவிஞர்கள் வாக்கினில் குடி புகுந்தாள் --நல்ல
காவிய ஓவியப் பொருளானாள்
புவியை மறந்திடும் காதலர்க்கு -செல்ல
புன்னகைத் தூதுகள் செய்கிறாள்
பௌர்ணமி நாளில் பரவசமாய் -இங்கு
பகலில் மட்டும் தெரியாமல்
உலகினில் வாழ்வது நிலவல்லவா -அதனை
உள்ளத்தில் நினைப்பது சுகமல்லவா
நிறைந்த இன்பம் தருகிறாள்
உலவும் காற்றே வாகனம் -அவள்
உலகம் சுற்றும் மோகனம்
கால்கள் இன்றியே நடக்கிறாள் -என்றும்
கல்லையும் முள்ளையும் கடக்கிறாள்
ஆட்கள் இல்லாதக் காட்டினிலும் -இன்னும்
அழகாய் ஆட்சி செய்கிறாள்
பிள்ளைகளுக்கு இரவில் துணையாவாள் -நாம்
பேசும் தமிழிலும் வாழ்கிறாள்
கள்ளம் அறியாத நல்லவளாய் -நீள
கடலினைத் தாண்டியும் செல்கிறாள்
வானத்து வெளியில் வசிக்கிறாள் எங்கும்
வசந்தத்தை அள்ளியே தருகிறாள்
மோனத் தவத்து முனிவரிடையே -மாய
மோகனப் புன்னகை புரிகிறாள்
கவிஞர்கள் வாக்கினில் குடி புகுந்தாள் --நல்ல
காவிய ஓவியப் பொருளானாள்
புவியை மறந்திடும் காதலர்க்கு -செல்ல
புன்னகைத் தூதுகள் செய்கிறாள்
பௌர்ணமி நாளில் பரவசமாய் -இங்கு
பகலில் மட்டும் தெரியாமல்
உலகினில் வாழ்வது நிலவல்லவா -அதனை
உள்ளத்தில் நினைப்பது சுகமல்லவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக