காரிருள் வானில் -நல்ல
கதிரவன் ஒளி போல்
நீ எதிரில் வந்தாய் -என்
நிம்மதி குலைந்தேன்
பூவிரி அழகோ
பொன்னிற மதுவோ
மாதுளம் கனியோ
மல்லிகை மலரோ
கோவைப் பழமோ
கொய்யாக் கனியோ
மரகதச் சிலையோ
மதனது அம்போ
செங்கனிச் சாறோ
சீதள நிலவோ
கோபுரச் சிலையோ
கொற்கை முத்தோ
காவிரிப் புனலோ
கற்பகத் தருவோ
பருவத்தின் எழிலோ
பங்கஜ மலரோ
என்னதான் சொல்லியே
உந்தனை அழைப்பேன்
என்னருமைத் தமிழே
இனிநான் என்செய்வேன்
கதிரவன் ஒளி போல்
நீ எதிரில் வந்தாய் -என்
நிம்மதி குலைந்தேன்
பூவிரி அழகோ
பொன்னிற மதுவோ
மாதுளம் கனியோ
மல்லிகை மலரோ
கோவைப் பழமோ
கொய்யாக் கனியோ
மரகதச் சிலையோ
மதனது அம்போ
செங்கனிச் சாறோ
சீதள நிலவோ
கோபுரச் சிலையோ
கொற்கை முத்தோ
காவிரிப் புனலோ
கற்பகத் தருவோ
பருவத்தின் எழிலோ
பங்கஜ மலரோ
என்னதான் சொல்லியே
உந்தனை அழைப்பேன்
என்னருமைத் தமிழே
இனிநான் என்செய்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக