வியாழன், 24 ஜூலை, 2014

இளமைக் காலம் 299.

கனவில்    வந்த
 கள்வன்    எவனோ
 கரத்தைப்    பற்றிட
 வருவான்    தோழி

 கருமை    நிறத்தான்
 காதல்    மன்னன்
 கட்டியே     அணைத்து
 முத்தம்    தந்தான்

 சொக்கிப்    போனேன்
 சுகத்தில்    அமிழ்ந்தேன்
 விவரம்    அறிந்தேன்
 வெல்லமாய்    கரைந்தேன்

 வெட்கம்    இல்லை
 வெளியில்    சொல்ல
 வேண்டும்    வரைக்கும்
 விழைந்தேன்    அள்ள

 இரவும்    பகலும்
 எமக்குள்    ஏது
 இன்ப    எல்லைகள்
 மீறிடும்    பொழுது

 ஒன்றிச்    சேர்ந்து
 உறவில்    கலந்து
 என்றும்    இது போல்
 இணைந்து    வாழ்வோம்

 இளமைக்    காலம்
 இனிய    கோலம்
 கனியும்    சுவைபோல்
 கலந்து    வாழ்வோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக