கனவா நனவா
காதல் மலரா
கண்டேன் உன்னையடி
நினைவா நிகழ்வா
நேசம் குறைவா
நெஞ்சம் துடிக்குதடி
புத்தம் புதிது
பொங்கும் இளமை
பூத்துக் குலுங்குதடி
வாளின் வீச்சு
வாங்குது மூச்சு
வற்றாப் பொய்கையடி
சொர்க்கம் இதுவோ
ஜொலிக்கும் மதுவோ
சுகமே நீயேயடி
கண்ணால் பார்த்தாய்
காலில் வீழ்ந்தேன்
எண்ணப் புதுமையடி
ஏக்கம் தந்தாய்
என்னைக் கொன்றாய்
தூக்கம் போனதடி
தனியே வந்தால்
தழுவி அணைப்பேன்
தஞ்சம் நீயேயடி
மஞ்சம் அழைக்கும்
மலர்கள் சிரிக்கும்
கொஞ்சல் இனிக்குமடி
நிலவாய் சிரித்தாய்
நிதமும் அழைத்தாய்
உலவும் தென்றலடி
காதல் மலரா
கண்டேன் உன்னையடி
நினைவா நிகழ்வா
நேசம் குறைவா
நெஞ்சம் துடிக்குதடி
புத்தம் புதிது
பொங்கும் இளமை
பூத்துக் குலுங்குதடி
வாளின் வீச்சு
வாங்குது மூச்சு
வற்றாப் பொய்கையடி
சொர்க்கம் இதுவோ
ஜொலிக்கும் மதுவோ
சுகமே நீயேயடி
கண்ணால் பார்த்தாய்
காலில் வீழ்ந்தேன்
எண்ணப் புதுமையடி
ஏக்கம் தந்தாய்
என்னைக் கொன்றாய்
தூக்கம் போனதடி
தனியே வந்தால்
தழுவி அணைப்பேன்
தஞ்சம் நீயேயடி
மஞ்சம் அழைக்கும்
மலர்கள் சிரிக்கும்
கொஞ்சல் இனிக்குமடி
நிலவாய் சிரித்தாய்
நிதமும் அழைத்தாய்
உலவும் தென்றலடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக