திங்கள், 30 ஜூன், 2014

தாகம் 248.

விண்ணில்    ஓடும்    மேகங்களே -தினம்
 விரைந்து    பறக்கும்    காகங்களே
 கண்ணீர்    கதையை   சொல்லுகிறேன் -அதனை
 கனிவாய்    கேட்டுக்    கொள்வீரே

 அழகு நிறைப்    பெண்    ஒருத்தி -ஏனோ
 அலைய    வைத்தாள்    எனைவருத்தி
 உலவும்    காற்றுநீ    செல்லாயோ -எனது
 உள்ளம்    வருந்துதல்    சொல்லாயோ

 கள்ளம்    கபடு    எதுவுமில்லை -அவளது
 காதல்    தருவது  பெருந்தொல்லை
 வெள்ளத்தில்   வீழ்ந்தது    போல் -பிரிவு
 வேதனையில்   வெந்து   நொந்தேன்

 கண்ணீர்   மழை   பொழிந்தேன் -அந்த
 கரத்தினை   பற்றிட  நானலைந்தேன்
 என்னை    மணம்   புரிவாளோ -நல்ல
 இன்பத்தில்   சிரிக்கவைப்பாளோ

 தழுவி    எந்தனை     அணைப்பாளோ -தீரா
 தாகத்தை     தீர்த்து   வைப்பாளோ
 நிலவில்    நெஞ்சம்    கனிவாளோ -இதனை
 நினைத்து   நிதம்    மகிழ்வாளோ

 இத்தனையும்   நீங்கள்   எடுத்துரைப்பீரோ -அந்த
 இனியவள்   என்னிடம்  வருவாளோ
 பித்தம்   தெளிந்திட   மருந்துண்டோ -இந்த
 பேதை   நலம்பெற    வழியுமுண்டோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக