விண்ணில் ஓடும் மேகங்களே -தினம்
விரைந்து பறக்கும் காகங்களே
கண்ணீர் கதையை சொல்லுகிறேன் -அதனை
கனிவாய் கேட்டுக் கொள்வீரே
அழகு நிறைப் பெண் ஒருத்தி -ஏனோ
அலைய வைத்தாள் எனைவருத்தி
உலவும் காற்றுநீ செல்லாயோ -எனது
உள்ளம் வருந்துதல் சொல்லாயோ
கள்ளம் கபடு எதுவுமில்லை -அவளது
காதல் தருவது பெருந்தொல்லை
வெள்ளத்தில் வீழ்ந்தது போல் -பிரிவு
வேதனையில் வெந்து நொந்தேன்
கண்ணீர் மழை பொழிந்தேன் -அந்த
கரத்தினை பற்றிட நானலைந்தேன்
என்னை மணம் புரிவாளோ -நல்ல
இன்பத்தில் சிரிக்கவைப்பாளோ
தழுவி எந்தனை அணைப்பாளோ -தீரா
தாகத்தை தீர்த்து வைப்பாளோ
நிலவில் நெஞ்சம் கனிவாளோ -இதனை
நினைத்து நிதம் மகிழ்வாளோ
இத்தனையும் நீங்கள் எடுத்துரைப்பீரோ -அந்த
இனியவள் என்னிடம் வருவாளோ
பித்தம் தெளிந்திட மருந்துண்டோ -இந்த
பேதை நலம்பெற வழியுமுண்டோ
விரைந்து பறக்கும் காகங்களே
கண்ணீர் கதையை சொல்லுகிறேன் -அதனை
கனிவாய் கேட்டுக் கொள்வீரே
அழகு நிறைப் பெண் ஒருத்தி -ஏனோ
அலைய வைத்தாள் எனைவருத்தி
உலவும் காற்றுநீ செல்லாயோ -எனது
உள்ளம் வருந்துதல் சொல்லாயோ
கள்ளம் கபடு எதுவுமில்லை -அவளது
காதல் தருவது பெருந்தொல்லை
வெள்ளத்தில் வீழ்ந்தது போல் -பிரிவு
வேதனையில் வெந்து நொந்தேன்
கண்ணீர் மழை பொழிந்தேன் -அந்த
கரத்தினை பற்றிட நானலைந்தேன்
என்னை மணம் புரிவாளோ -நல்ல
இன்பத்தில் சிரிக்கவைப்பாளோ
தழுவி எந்தனை அணைப்பாளோ -தீரா
தாகத்தை தீர்த்து வைப்பாளோ
நிலவில் நெஞ்சம் கனிவாளோ -இதனை
நினைத்து நிதம் மகிழ்வாளோ
இத்தனையும் நீங்கள் எடுத்துரைப்பீரோ -அந்த
இனியவள் என்னிடம் வருவாளோ
பித்தம் தெளிந்திட மருந்துண்டோ -இந்த
பேதை நலம்பெற வழியுமுண்டோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக