புதன், 18 ஜூன், 2014

பழக்குலை 242.

கண்ணில்    தெரியுது   வண்ணம் -அதில்
 கலந்து    நிற்குது   எண்ணம்
 உன்னில்    மலர்ந்தது   நாணம் -அடி
 உனக்கு      வந்ததேன்   மௌனம்

 நீயாய்    வந்தாய்    எதிரே -உனது
 நினைவு    எனக்குப்    புதிரே
 தீயாய்    சுடுகிறது    என்ன -கொம்பு
 தேனே    நீதான்    பெண்ணே

 மணநாள்    என்று    காண்போம் -நம்
 மனதில்    மகிழ்வினை    உண்போம்
 கணமும்    பிரியேன்    உன்னை -நீ
 கனிந்து    விளைந்திட்ட   தென்னை

 ஏக்கம்    நான்விடும்    மூச்சு -என்றும்
 இனிக்கும்    உந்தன்    பேச்சு
 தூக்கம்    என்பதோ    போச்சு -இரவில்
 துடிக்கும்    நிலையென   ஆச்சு

 அழகிற்கு    நானென்றும்    அடிமை -உன்னை
 அனுதினம்   தொழுவது    கடமை
 பழுத்திட்ட    பழக்குலைக்   கொத்து -அந்தப்
 பாற்கடல்    வழங்கிய    முத்து

 உயிருக்குள்     ஒன்றாய்    இருப்போம் -காதல்
 உணர்வினில்    இன்றே    கலப்போம்
 நிலவுக்குள்    ஒளியினைத்   தேடி -எனது
 நிலையினைப்    புரிந்து    நீவாடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக