கண்ணில் தெரியுது வண்ணம் -அதில்
கலந்து நிற்குது எண்ணம்
உன்னில் மலர்ந்தது நாணம் -அடி
உனக்கு வந்ததேன் மௌனம்
நீயாய் வந்தாய் எதிரே -உனது
நினைவு எனக்குப் புதிரே
தீயாய் சுடுகிறது என்ன -கொம்பு
தேனே நீதான் பெண்ணே
மணநாள் என்று காண்போம் -நம்
மனதில் மகிழ்வினை உண்போம்
கணமும் பிரியேன் உன்னை -நீ
கனிந்து விளைந்திட்ட தென்னை
ஏக்கம் நான்விடும் மூச்சு -என்றும்
இனிக்கும் உந்தன் பேச்சு
தூக்கம் என்பதோ போச்சு -இரவில்
துடிக்கும் நிலையென ஆச்சு
அழகிற்கு நானென்றும் அடிமை -உன்னை
அனுதினம் தொழுவது கடமை
பழுத்திட்ட பழக்குலைக் கொத்து -அந்தப்
பாற்கடல் வழங்கிய முத்து
உயிருக்குள் ஒன்றாய் இருப்போம் -காதல்
உணர்வினில் இன்றே கலப்போம்
நிலவுக்குள் ஒளியினைத் தேடி -எனது
நிலையினைப் புரிந்து நீவாடி
கலந்து நிற்குது எண்ணம்
உன்னில் மலர்ந்தது நாணம் -அடி
உனக்கு வந்ததேன் மௌனம்
நீயாய் வந்தாய் எதிரே -உனது
நினைவு எனக்குப் புதிரே
தீயாய் சுடுகிறது என்ன -கொம்பு
தேனே நீதான் பெண்ணே
மணநாள் என்று காண்போம் -நம்
மனதில் மகிழ்வினை உண்போம்
கணமும் பிரியேன் உன்னை -நீ
கனிந்து விளைந்திட்ட தென்னை
ஏக்கம் நான்விடும் மூச்சு -என்றும்
இனிக்கும் உந்தன் பேச்சு
தூக்கம் என்பதோ போச்சு -இரவில்
துடிக்கும் நிலையென ஆச்சு
அழகிற்கு நானென்றும் அடிமை -உன்னை
அனுதினம் தொழுவது கடமை
பழுத்திட்ட பழக்குலைக் கொத்து -அந்தப்
பாற்கடல் வழங்கிய முத்து
உயிருக்குள் ஒன்றாய் இருப்போம் -காதல்
உணர்வினில் இன்றே கலப்போம்
நிலவுக்குள் ஒளியினைத் தேடி -எனது
நிலையினைப் புரிந்து நீவாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக