கருவாய் இருந்தேன் -அன்று
கருத்தாய் ம ல ர்ந்தேன்
பெறுவேன் நலமே அம்மா -எனது
பிறப்பும் உன்னால் அம்மா
உயிராய் நுழைந்தேன் -அன்பு
உன்னால் வளர்ந்தேன்
எல்லாம் உன்னால் அம்மா -நான்
என்றும் பணிவேன் தன்னால்
அமுதம் உண்டேன் -நல்
அழகினைக் கொண்டேன்
புவியில் மனிதன் யானே -எனக்குப்
புகழைத் தந்தவள் நீயே
பள்ளியில் படித்தேன் -பல
க லைகள் அறிந்தேன்
சொல்லிட மகிழ்ச்சி அம்மா -என்றும்
சொர்க்க மும் நீயே அம்மா
நாயாய் அலைந்தேன் -உயர்
நன்றியைப் பெற்றேன்
தாய்போல் உண்டோ அம்மா -வாழ்வில்
தஞ்சம் உன்னடி அம்மா
எத்தனை பெற்றும் -நான்
என்னமோ கற்றும்
உத்தமி உன்போல் உண்டோ -அதனால்
உன்னையே தெய்வம் என்பேன்
கருத்தாய் ம ல ர்ந்தேன்
பெறுவேன் நலமே அம்மா -எனது
பிறப்பும் உன்னால் அம்மா
உயிராய் நுழைந்தேன் -அன்பு
உன்னால் வளர்ந்தேன்
எல்லாம் உன்னால் அம்மா -நான்
என்றும் பணிவேன் தன்னால்
அமுதம் உண்டேன் -நல்
அழகினைக் கொண்டேன்
புவியில் மனிதன் யானே -எனக்குப்
புகழைத் தந்தவள் நீயே
பள்ளியில் படித்தேன் -பல
க லைகள் அறிந்தேன்
சொல்லிட மகிழ்ச்சி அம்மா -என்றும்
சொர்க்க மும் நீயே அம்மா
நாயாய் அலைந்தேன் -உயர்
நன்றியைப் பெற்றேன்
தாய்போல் உண்டோ அம்மா -வாழ்வில்
தஞ்சம் உன்னடி அம்மா
எத்தனை பெற்றும் -நான்
என்னமோ கற்றும்
உத்தமி உன்போல் உண்டோ -அதனால்
உன்னையே தெய்வம் என்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக