புதன், 18 ஜூன், 2014

தெய்வம் 241.

கருவாய்    இருந்தேன் -அன்று
 கருத்தாய்    ம ல ர்ந்தேன்
 பெறுவேன்    நலமே   அம்மா -எனது
 பிறப்பும்    உன்னால்   அம்மா

 உயிராய்    நுழைந்தேன் -அன்பு
 உன்னால்    வளர்ந்தேன்
 எல்லாம்    உன்னால்   அம்மா -நான்
 என்றும்    பணிவேன்   தன்னால்

 அமுதம்    உண்டேன் -நல்
 அழகினைக்    கொண்டேன்
 புவியில்    மனிதன்   யானே -எனக்குப்
 புகழைத்    தந்தவள்   நீயே

 பள்ளியில்    படித்தேன் -பல
 க லைகள்     அறிந்தேன்
 சொல்லிட    மகிழ்ச்சி   அம்மா -என்றும்
 சொர்க்க மும்    நீயே   அம்மா

நாயாய்    அலைந்தேன் -உயர்
 நன்றியைப்    பெற்றேன்
 தாய்போல்    உண்டோ   அம்மா -வாழ்வில்
 தஞ்சம்    உன்னடி   அம்மா

 எத்தனை    பெற்றும் -நான்
 என்னமோ    கற்றும்
 உத்தமி    உன்போல்   உண்டோ -அதனால்
 உன்னையே    தெய்வம்   என்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக