வானம் நிலவை வெறுக்குமா
வாழ்க்கை என்றும் கசக்குமா
தேனின் இனிப்பு நீங்குமா
தெரிந்தால் பதிலை சொல்லுவாய்
கண்களை காட்சி மறைக்குமா
காலம் நிலையாய் நிற்குமா
பெண்கள் துயரம் தீருமா
பொறுமை வாழ்விலே வெல்லுமா
சந்திரர் சூரியர் மாறுமா
சாத்திரம் தவறினை செய்யுமா
மந்திரம் மாயம் செல்லுமா
மாதரின் பெருமை குறையுமா
ஆழியில் நீரும் வற்றுமா
ஆகாயம் மண்ணிலே இறங்குமா
கருணை என்பது கடினமா
காரிகை இதற்குப் பதிலென்ன
இரவே பகலாய் இயங்குமா
ஈகை என்பது பாபமா
உறவே பகையை வளர்க்குமா
உத்தமி பதிலினை சொல்லடி
நினைவு கனவாய் நிகழுமா
நேசம் நிம்மதி இழக்குமா
இளமை என்றுமே நிலைக்குமா
இதற்கும் பதிலினைக் கூறடி
எழுத்தினை எண்ணம் என்பதா
இயற்கை செயற்கையாய் போகுமா
கிழக்கும் மேற்காய் திரும்புமா
கிளியே விடையினை சொல்லம்மா
நீலம் விண்ணினை மறக்குமா
நிஜமே பொய் யிடம் தோற்குமா
பாலின் வெள்ளை மாறுமா
பதிலை இன்றே சொல்லடி
பிறந்தவர் என்றும் இருப்பாரோ
பிழைகள் சரியென தேறுமா
கறந்தது மடியினில் திரும்புமோ
கள்ளியே நீயும் சொல்லடி
வாழ்க்கை என்றும் கசக்குமா
தேனின் இனிப்பு நீங்குமா
தெரிந்தால் பதிலை சொல்லுவாய்
கண்களை காட்சி மறைக்குமா
காலம் நிலையாய் நிற்குமா
பெண்கள் துயரம் தீருமா
பொறுமை வாழ்விலே வெல்லுமா
சந்திரர் சூரியர் மாறுமா
சாத்திரம் தவறினை செய்யுமா
மந்திரம் மாயம் செல்லுமா
மாதரின் பெருமை குறையுமா
ஆழியில் நீரும் வற்றுமா
ஆகாயம் மண்ணிலே இறங்குமா
கருணை என்பது கடினமா
காரிகை இதற்குப் பதிலென்ன
இரவே பகலாய் இயங்குமா
ஈகை என்பது பாபமா
உறவே பகையை வளர்க்குமா
உத்தமி பதிலினை சொல்லடி
நினைவு கனவாய் நிகழுமா
நேசம் நிம்மதி இழக்குமா
இளமை என்றுமே நிலைக்குமா
இதற்கும் பதிலினைக் கூறடி
எழுத்தினை எண்ணம் என்பதா
இயற்கை செயற்கையாய் போகுமா
கிழக்கும் மேற்காய் திரும்புமா
கிளியே விடையினை சொல்லம்மா
நீலம் விண்ணினை மறக்குமா
நிஜமே பொய் யிடம் தோற்குமா
பாலின் வெள்ளை மாறுமா
பதிலை இன்றே சொல்லடி
பிறந்தவர் என்றும் இருப்பாரோ
பிழைகள் சரியென தேறுமா
கறந்தது மடியினில் திரும்புமோ
கள்ளியே நீயும் சொல்லடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக