புதன், 25 ஜூன், 2014

இதயஜோதி 245.

நிலவுக்கு    அழகினை    அளித்தவன் -வானில்
 நிறங்களை    அள்ளியே    தெளித்தவன்
 மலருக்குள்    மணத்தினை    மறைத்தவன் -நம்
 மனதினை    ஆள்கிற     மாயவன்

 நீருக்குள்     நிலத்தினை    அமைத்தவன் -மக்கள்
 நெஞ்சத்தில்   அன்பினை    விதைத்தவன்
 வேருக்குள்    நீரையும்     கொடுத்தவன் -உலகோர்
 வேதனை     போக்கிடும்     தூயவன்

 வாவென    அழைத்ததும்     வருபவன் -பொருளை
 வாரியே      அள்ளித்    தருபவன்
 தாயென    உயர்களைக்    காப்பவன் -என்றும்
 தஞ்சம்    அளித்திடும்    நல்லவன்

 ஏழையின்    கண்ணீர்    துடைப்பவன் -அவர்
 இதயத்தை    கோவிலாய்க்   கொண்டவன்
 நாளைய    உலகிற்கும்    புதியவன் -தமிழ்
 நன்மறை    போற்றிடும்    நாயகன்

 கருணைஎனும்    சொல்லிற்கு    உரியவன் -அவன்
 காலங்களை    வென்றிட்ட     மூலவன்
 இருளினை    விலக்கிடும்     இனியவன் -எல்லோர்
 இயக்கத்தில்    ஜோதியாய்    ஒளிர்பவன்

 நீதியைக்    காத்து     நிற்பவன் -தீய
 நெஞ்சினை   நஞ்சென    நினைப்பவன்
 ஆதியும்     அந்தமும்    இல்லாதவன் -அந்த
 அருளினைப்    போற்றியே     வாழுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக