நிலவுக்கு அழகினை அளித்தவன் -வானில்
நிறங்களை அள்ளியே தெளித்தவன்
மலருக்குள் மணத்தினை மறைத்தவன் -நம்
மனதினை ஆள்கிற மாயவன்
நீருக்குள் நிலத்தினை அமைத்தவன் -மக்கள்
நெஞ்சத்தில் அன்பினை விதைத்தவன்
வேருக்குள் நீரையும் கொடுத்தவன் -உலகோர்
வேதனை போக்கிடும் தூயவன்
வாவென அழைத்ததும் வருபவன் -பொருளை
வாரியே அள்ளித் தருபவன்
தாயென உயர்களைக் காப்பவன் -என்றும்
தஞ்சம் அளித்திடும் நல்லவன்
ஏழையின் கண்ணீர் துடைப்பவன் -அவர்
இதயத்தை கோவிலாய்க் கொண்டவன்
நாளைய உலகிற்கும் புதியவன் -தமிழ்
நன்மறை போற்றிடும் நாயகன்
கருணைஎனும் சொல்லிற்கு உரியவன் -அவன்
காலங்களை வென்றிட்ட மூலவன்
இருளினை விலக்கிடும் இனியவன் -எல்லோர்
இயக்கத்தில் ஜோதியாய் ஒளிர்பவன்
நீதியைக் காத்து நிற்பவன் -தீய
நெஞ்சினை நஞ்சென நினைப்பவன்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் -அந்த
அருளினைப் போற்றியே வாழுவோம்
நிறங்களை அள்ளியே தெளித்தவன்
மலருக்குள் மணத்தினை மறைத்தவன் -நம்
மனதினை ஆள்கிற மாயவன்
நீருக்குள் நிலத்தினை அமைத்தவன் -மக்கள்
நெஞ்சத்தில் அன்பினை விதைத்தவன்
வேருக்குள் நீரையும் கொடுத்தவன் -உலகோர்
வேதனை போக்கிடும் தூயவன்
வாவென அழைத்ததும் வருபவன் -பொருளை
வாரியே அள்ளித் தருபவன்
தாயென உயர்களைக் காப்பவன் -என்றும்
தஞ்சம் அளித்திடும் நல்லவன்
ஏழையின் கண்ணீர் துடைப்பவன் -அவர்
இதயத்தை கோவிலாய்க் கொண்டவன்
நாளைய உலகிற்கும் புதியவன் -தமிழ்
நன்மறை போற்றிடும் நாயகன்
கருணைஎனும் சொல்லிற்கு உரியவன் -அவன்
காலங்களை வென்றிட்ட மூலவன்
இருளினை விலக்கிடும் இனியவன் -எல்லோர்
இயக்கத்தில் ஜோதியாய் ஒளிர்பவன்
நீதியைக் காத்து நிற்பவன் -தீய
நெஞ்சினை நஞ்சென நினைப்பவன்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் -அந்த
அருளினைப் போற்றியே வாழுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக