செவ்வாய், 10 ஜூன், 2014

பெண்ணே 239.

நிலவால்   மலர்ந்தேன் -காதல்
 நினைவால்   வளர்ந்தேன்
 கனவாகுமா   காதல் -கண்ணா
 நமக்கேன்   வாடல்

 கண்ணால்   அழைத்தாய் -நீ
 கணையை   தொடுத்தாய்
 பெண்ணே   இதுவும் சரியோ -இனி
பேதமாகுதல்   முறையோ

 இரவால்   இளைத்தேன் -என்
 இதயம்   நனைத்தேன்
 உறவால்   வாழ்வேன் -உலகில்
 உன்னாலன்றோ   எல்லாம்

 நன்றாய்   இருப்போம் -நாம்
 நலமாய்   மகிழ்வோம்
 என்றுமிங்கே   சுகமே -ஏனோ
 உனக்கிந்த   குணமே

 என்னை   மறந்தேன் -உன்னை
 என்னுள்   இணைத்தேன்
 கண்ணில்  காட்சிநீயே -எனது
 கவலை  யுனக்கு   கேலியோ

 நாளையே    வருவேன் -உன்னை
 நன்மணம்   புரிவேன்
 வேளை வந்தது   கண்ணே -விசனம்
 வேண்டாம்   பெண்ணே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக