நிலவால் மலர்ந்தேன் -காதல்
நினைவால் வளர்ந்தேன்
கனவாகுமா காதல் -கண்ணா
நமக்கேன் வாடல்
கண்ணால் அழைத்தாய் -நீ
கணையை தொடுத்தாய்
பெண்ணே இதுவும் சரியோ -இனி
பேதமாகுதல் முறையோ
இரவால் இளைத்தேன் -என்
இதயம் நனைத்தேன்
உறவால் வாழ்வேன் -உலகில்
உன்னாலன்றோ எல்லாம்
நன்றாய் இருப்போம் -நாம்
நலமாய் மகிழ்வோம்
என்றுமிங்கே சுகமே -ஏனோ
உனக்கிந்த குணமே
என்னை மறந்தேன் -உன்னை
என்னுள் இணைத்தேன்
கண்ணில் காட்சிநீயே -எனது
கவலை யுனக்கு கேலியோ
நாளையே வருவேன் -உன்னை
நன்மணம் புரிவேன்
வேளை வந்தது கண்ணே -விசனம்
வேண்டாம் பெண்ணே
நினைவால் வளர்ந்தேன்
கனவாகுமா காதல் -கண்ணா
நமக்கேன் வாடல்
கண்ணால் அழைத்தாய் -நீ
கணையை தொடுத்தாய்
பெண்ணே இதுவும் சரியோ -இனி
பேதமாகுதல் முறையோ
இரவால் இளைத்தேன் -என்
இதயம் நனைத்தேன்
உறவால் வாழ்வேன் -உலகில்
உன்னாலன்றோ எல்லாம்
நன்றாய் இருப்போம் -நாம்
நலமாய் மகிழ்வோம்
என்றுமிங்கே சுகமே -ஏனோ
உனக்கிந்த குணமே
என்னை மறந்தேன் -உன்னை
என்னுள் இணைத்தேன்
கண்ணில் காட்சிநீயே -எனது
கவலை யுனக்கு கேலியோ
நாளையே வருவேன் -உன்னை
நன்மணம் புரிவேன்
வேளை வந்தது கண்ணே -விசனம்
வேண்டாம் பெண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக