புதன், 11 ஜூன், 2014

கருமை நிறக் கண்ணா 240.

கண்ணா   வருவாய்   கனவில் -மனம்
 கனிவேன்   உனது   நினைவில்
 உன்னால்   உயர்வு   அடைந்தேன் -நான்
 உன்னடி    தொழுவேன்  என்றும்

 பொன்னார்   மணியே   பொழிலே -வரும்
 மின்னல்    மேக (ம்)   மழையே
 கண்ணா   கருமை   கண்ணா -எனது
 கவலையை  தீர்க்கும்  மன்னா

 நினைத்தால்   உடனே   வருவாய் -பலர்
 நெஞ்சுக்கு   நிம்மதி   தருவாய்
 அனைத்திலும்   உள்ளவன்   நீயே -உலகில்
 ஆதியும்    அந்தமும்    தாயே

 மங்கையின்   மானம்   காப்பாய் -அவள்
 மாண்பினை   மண்ணிலே   சேர்ப்பாய்
 கங்கைக்   கரையிலும்   வாழ்கிறாய் -உன்னை
 கண்டவர்   மனங்களை   ஆள்கிறாய்

 நீரிலும்   நிலத்திலும்   இருக்கிறாய் -நல்ல
 நீதியை    மறந்தால்    வெறுக்கிறாய்
 தூணிலும்   துரும்பிலும்   உறைகிறாய் -என்றும்
 தூயவர்    வணங்கிடும்   மறையாகிறாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக