கண்ணா வருவாய் கனவில் -மனம்
கனிவேன் உனது நினைவில்
உன்னால் உயர்வு அடைந்தேன் -நான்
உன்னடி தொழுவேன் என்றும்
பொன்னார் மணியே பொழிலே -வரும்
மின்னல் மேக (ம்) மழையே
கண்ணா கருமை கண்ணா -எனது
கவலையை தீர்க்கும் மன்னா
நினைத்தால் உடனே வருவாய் -பலர்
நெஞ்சுக்கு நிம்மதி தருவாய்
அனைத்திலும் உள்ளவன் நீயே -உலகில்
ஆதியும் அந்தமும் தாயே
மங்கையின் மானம் காப்பாய் -அவள்
மாண்பினை மண்ணிலே சேர்ப்பாய்
கங்கைக் கரையிலும் வாழ்கிறாய் -உன்னை
கண்டவர் மனங்களை ஆள்கிறாய்
நீரிலும் நிலத்திலும் இருக்கிறாய் -நல்ல
நீதியை மறந்தால் வெறுக்கிறாய்
தூணிலும் துரும்பிலும் உறைகிறாய் -என்றும்
தூயவர் வணங்கிடும் மறையாகிறாய்
கனிவேன் உனது நினைவில்
உன்னால் உயர்வு அடைந்தேன் -நான்
உன்னடி தொழுவேன் என்றும்
பொன்னார் மணியே பொழிலே -வரும்
மின்னல் மேக (ம்) மழையே
கண்ணா கருமை கண்ணா -எனது
கவலையை தீர்க்கும் மன்னா
நினைத்தால் உடனே வருவாய் -பலர்
நெஞ்சுக்கு நிம்மதி தருவாய்
அனைத்திலும் உள்ளவன் நீயே -உலகில்
ஆதியும் அந்தமும் தாயே
மங்கையின் மானம் காப்பாய் -அவள்
மாண்பினை மண்ணிலே சேர்ப்பாய்
கங்கைக் கரையிலும் வாழ்கிறாய் -உன்னை
கண்டவர் மனங்களை ஆள்கிறாய்
நீரிலும் நிலத்திலும் இருக்கிறாய் -நல்ல
நீதியை மறந்தால் வெறுக்கிறாய்
தூணிலும் துரும்பிலும் உறைகிறாய் -என்றும்
தூயவர் வணங்கிடும் மறையாகிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக