ராகங்கள் பதினாறு என்ற மெட்டில்
காலங்கள் உருவாகும்
கவிதைகள் வரவாகும்
நான் சொல்லும் வார்த்தை புரியாததா
கனிவான பார்வைகள்
நம்காதலை உருவாக்கும்
கண்ணான உன் எண்ணம் அறிவேனம்மா
அழகாக நடைபோடும்
உன் அறிவென்னை எடை போடும்
பழமாகும் நம்காதல் வளமாகுமே
இளமாலைப் பொழுதாகி
நாமிருவரும் ஒன்றாகி
களவாடும் நாளும் விரிவாகுமே
இனியென்ன கவலைகள்
இல்லையே இன்னல்கள்
எந்நாளும் நம்வாழ்வு பொன்னாகுமே
உன்னோடு நானாவேன்
உறவுக்கு துணையாவேன்
எப்போதும் நிறைவாகும் சந்தோஷமே
இருபிள்ளை பெறவேண்டும்
நம்மெதிர்காலம் இனிதாகும்
இல்வாழ்வில் நாமென்றும் சுகமாகலாம்
இறையோனின் அருளாலே
இப்போதும் மகிழ்வாலே
கரைமீறிப் புதுவெள்ளம் பாய்ந்தோடுமே
கண்ணனின் கண்பட்டால்
கருமேகம் கலைந்தோடும்
இன்னமும் சஞ்சலம் உனக்கேனம்மா
இளமானே என்தேவி
உனை என்னாளும் மறவேனே
எனக்கிங்கே உனையன்றி கதியாரம்மா ....
காலங்கள் உருவாகும்
கவிதைகள் வரவாகும்
நான் சொல்லும் வார்த்தை புரியாததா
கனிவான பார்வைகள்
நம்காதலை உருவாக்கும்
கண்ணான உன் எண்ணம் அறிவேனம்மா
அழகாக நடைபோடும்
உன் அறிவென்னை எடை போடும்
பழமாகும் நம்காதல் வளமாகுமே
இளமாலைப் பொழுதாகி
நாமிருவரும் ஒன்றாகி
களவாடும் நாளும் விரிவாகுமே
இனியென்ன கவலைகள்
இல்லையே இன்னல்கள்
எந்நாளும் நம்வாழ்வு பொன்னாகுமே
உன்னோடு நானாவேன்
உறவுக்கு துணையாவேன்
எப்போதும் நிறைவாகும் சந்தோஷமே
இருபிள்ளை பெறவேண்டும்
நம்மெதிர்காலம் இனிதாகும்
இல்வாழ்வில் நாமென்றும் சுகமாகலாம்
இறையோனின் அருளாலே
இப்போதும் மகிழ்வாலே
கரைமீறிப் புதுவெள்ளம் பாய்ந்தோடுமே
கண்ணனின் கண்பட்டால்
கருமேகம் கலைந்தோடும்
இன்னமும் சஞ்சலம் உனக்கேனம்மா
இளமானே என்தேவி
உனை என்னாளும் மறவேனே
எனக்கிங்கே உனையன்றி கதியாரம்மா ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக