சனி, 21 ஜூன், 2014

இளமை 243.

கண்ணிலே    தோன்றும்
 காட்சிகள்     யாவும்
 கனவாகிப்    போகுமோ -அன்பே
 காலம்       கைகூடுமோ

 எண்ணத்தில்    வசிக்கும்
 எழில்வண்ண    முகமும்
 மின்னலாய்       மாறுமோ -வெண்
 மேகங்கள்      சூழுமோ

 மண்ணிலே  வீழ்ந்திடும்
 மழைத்துளி  யாகினேன்
 பெண்ணாய்  பிறந்தேன் -இனி
 பெருமைகள்  சேருமோ

 உன்னிலே    நானும்
 என்னிலே   நீயும்
 ஒருவராய்  மாறினோம் -அன்றே
 ஒன்றியே   போயினோம்

 எத்தனை    எண்ணம்
 இளமையின்   வண்ணம்
 அத்தனை    சுகமும் -மன
 அமைதியை  நல்குமோ

 எந்தனை    நீங்கியே
 எங்குநீ    போனாய்
 சுந்தர    வடிவே -எனது
 சொர்க்கமும்   நீயே

 கனிந்தது   காதல்
 முடிந்தது   மோதல்
 இனிதாக   வாழுவோம் -நாமினி
 இவ்வுலகை   ஆளுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக