வியாழன், 31 ஜூலை, 2014

புதுக் கவிதை 313*

மாலைப்    பொழுது -நல்ல
 மயக்கத்தை    ஏற்றும்
 மன்னவன்    நினைவு -என்
 மனதினில்    ஊறும்

 சோலையில்    தென்றல் -இன்னும்
 சுகமாய்    வீசும்
 சுந்தரன்    பெருமை -தினம்
 சொல்லியே    பேசும்

 துணையென    வந்தான் -இளம்
 தோளினைத்    தொட்டான்
 கணைதனை    விடுத்தான் -நானும்
 காதலில்    வீழ்ந்தேன்

 இனிமைச்    சிறையினில் -தள்ளி
 என்னையே    அடைத்தான்
 ஈரேழு     உலகங்கள் -எந்தனை
 இட்டுமே    சென்றான்

 இனிவரும்    நாளில் -அவன்
 என்னிடம்    வருவான்
 துணைவனின்    துணையால் -புதிய
 சொர்க்கமும்    காண்பேன்

 கனிதரும்    சுவைதனை -இந்த
 காதலில்    ருசிப்பேன்
 கண்கள்    மயங்கிட -புதுக்
 கவிதைகள்    படிப்பேன்


தோழன் 312.

வருவாய்    முருகா
 வடிவேல் அழகா
 உனையே    நினைவேன்
 உயிரில்    கலப்பேன்

 கனவில்    மறவேன்
 காலடி    தொழுவேன்
 இனியும்    பிரியேன்
 எனை நீ    காப்பாய்

 மனைவியர்    இருவருடன்
 ம யில்    மீதில்  ஏறி
 சோதனை    நீங்கிட
 சண்முகா    வருகவே

 தமிழாய்     வந்தாய்
 தணிகையில்    நின்றாய்
 கனிக்காக    கந்தா
 கடுங்கோபம்    கொண்டாய்

 குன்றினில்    ஆடி
 குறைகளைச்    சாடி
 என்றும்    நீதான்
 ஏழையின்    தோழன்

 அன்னை    உமையவள்
 அன்புச்    செல்வா
  ஆனை முகம்    தம்பி
 ஆறுமுகமும்    நீயே

 முன்னைப்    பொருளே
 மோகன    நிலவே
 உன்னைப்    பணிவோர்
 உன்னதம்    பெறுவார் 

புதன், 30 ஜூலை, 2014

இந்தியன் 311.

ஆடுது    பாரடா    மனது -அட
 அடங்குமோ     இள வட்ட    வயது
 தேடுது    இன்பம்    எல்லாம் -அவன்
 திருந்திடில்    அல்லவோ    லாபம்

 சிட்டாய்ப்    பறக்குது    காலம் -அது
 சீறியே    பாய்கிற    வெள்ளம்
 விட்டால்    பிடிப்பது    ஏது -இந்த
 விவரம்    மறந்திடல்    தீது

 பொன்னும்    பொருளும்    வேண்டும் -நிறைய
 புகழினைப்    பெறுதல்    வேண்டும்
 கண்ணெனும்    கல்வியும்    வேண்டும் -நாம்
 கற்றபடி    நடந்திட    வேண்டும்

 நாடு    என்பதும்    நமதே -அதனை
 நலமுடன்    பேணிட    வேண்டும்
 ஏடுகள்    போற்றிட    எழுவாய் -நல்ல
 இந்தியனாய்    வாழ்வினில்    திகழ்வாய்

 சமயங்கள்    எல்லாம்    ஒன்றே -அதனை
 சாற்றுதல்    யாவர்க்கும்    நன்றே
 பயமெனக்    கொள்வதை    விடுவாய் -தமிழ்
 பற்றுள்ள    பிள்ளையாய்    வருவாய்

 காலம்    கனிந்திடக்    காத்திடு -உந்தன்
 கடமையை    கண்ணெனப்    போற்றிடு
 நாளும்    நமதென    எண்ணிடு -நன்மையை
 பிறர்க்கு    இன்றே    செய்திடு 

கண்ணன் காட்டிய வழி 310*

ஆலம்   உண்ட   சிவனே -அந்த
 ஆழியில்   துயிலும்   ஹரியே
  உலகம்   காப்பவர்   நீங்கள் -உமக்கு
 நன்றி    சொல்வோம்   நாங்கள்

 தீமை   எங்கெலாம்   வருமோ -அதனை
 திரும்பவும்   அழித்திட   வருவீர்
 பாவிகள்   தம்மையும்   திருத்தி -நல்
 பக்தி   மார்க்கமும்   தருவீர்

 உலகம்   உயர்ந்திட   வழிகள் -பிறர்க்கு
 உணர்த்திட   கீதையைத்   தந்தீர்
 களைகளை   களைந்து   மாந்தர் -உமது
 கருணையை   நினைந்திட   வேண்டும்

 அன்பினைப்   பிறர்க்கு   அளித்து -நாம்
 அனைவரும்   நலம்பெற   வேண்டும்
 பண்புகள்  கொண்டவர்   வாழ்வில் -நற்
 பலன்களும்   நிறைவதைக்   காணலாம்

 உயிர்களை   சமமாய்    மதித்து -என்றும்
 உண்மையாய்   நடந்திடல்   வேண்டும்
 குறைகளைத்   தவிர்த்து   வாழ்வினில் -பெரும்
 குன்றென   உயர்ந்திட   வேண்டும்

 நல்லவை   எல்லாம்   நடக்கும் -நல்ல
 நம்பிக்கை   இன்பத்தை   அளிக்கும்
 கள்ளத்தை   மனதிலே   களைந்து -கண்ணன்
 காட்டிய   வழிதனில்   நடப்பீர் 
  

செவ்வாய், 29 ஜூலை, 2014

உன்னை நினைக்கையிலே 309.

நலமாய்    நானும்
 நாளும்    இருந்தேன்
 தேனே    வந்தாய்
 திகைத்து    நின்றேன்

 வானார்    மதியும்
 வருத்தம்    அடையும்
 கானக்     குயிலும்
 கவலை    கொள்ளும்

 அடங்கா    அலையும்
 அடங்கிப்    போகும்
 இடியும்    மழையும்
 எங்கோ    ஓடும்

 இரவா    பகலா
 இரண்டும்    மயங்கும்
 உறவா    பிரிவா
 உள்ளம்    அறியும்

 காற்றும்    மெல்ல
 கனிவாய்    வீசும்
 ஆற்று    நீரும்
 அமைதி    காக்கும்

 சேற்றில்    நண்டுகள்
 செயலை    நிறுத்தும்
 சிட்டுக்    குருவிகள்
 கொட்டம்    குறையும்

 வானம்    பாடி
 கானம்    மறக்கும்
 வீணையின்    நாதம்
 விரகம்    மீட்டும் 

பிடியில் 308.

இரவின்   பிடியில்
 உலகம்    உறங்கும்
 விதியின்    பிடியில்
 விளைவும்    இருக்கும்

 கனவின்    பிடியில்
 காதல்    பிறக்கும்
 காற்றின்    பிடியில்
 உயிர்கள்    வாழும்

 நாளின்    பிடியில்
 இரவும்    தொடங்கும்
 நாட்கள்    பிடியில்
 மாதம்    பிறக்கும்

 கவியின்    பிடியில்
 கவிதை    ஜனிக்கும்
 காசின்    பிடியில்
 களவும்    நடக்கும்

 நிலவின்    பிடியில்
 மேகம்    அலையும்
 நினைவின்    பிடியில்
 நிகழ்வு    தொடரும்

 ஒன்றின்    பிடியில்
 இரண்டும்    இருக்கும்
 நேற்றின்    பிடியில்
 இன்று    உதயம்

 எழுத்தின்    பிடியில்
 எண்கள்     இயங்கும்
 இ யற்கை    பிடியில்
 எல்லாம்    நிகழும் 

திங்கள், 28 ஜூலை, 2014

வழித் துணை 307.

மரமாய்    இருந்தால் -நிற்க
 நிழலும்    கிடைக்கும்
 மகிழ்வாய்    இருந்தால் -வந்த
 சுகமும்    நிலைக்கும்

 தனியே    இருந்தால் -உனக்கு
 என்ன    கிடைக்கும்
 தனிமைச்    சிறையில் -மனம்
 உழன்றே    தவிக்கும்

 துணையுடன்    இருந்தால் -உள்ள
 தொல்லை    குறையும்
 தனியே    பிரிந்தால் -இன்னும்
 பல தவறுகள்    நடக்கும்

 கனியாய்    இருந்தால் -வரும்
 பசியை    அடக்கும்
 கனிவாய்    நடந்தால் -நெஞ்சில்
 கருணை    மலரும்

 நிதமும்    நடக்க -நல்ல
 வலிமை    கிடைக்கும்
 நிம்மதி    நிலைத்திட -என்றும்
 நேர்வழி    உதவும்

 தாயை    மதித்தால் -உனது
 தகுதிகள்    உயரும்
 வாய்மை    வாழ்வினில் -சிறந்த
 வழித்துணை    ஆகும் 

உயர்வு 306.

இரவும்    பகலும் -மாறி
 இங்கே    வருதல்  போல்
 இன்பம்    துன்பம் -நமக்கும்
 எங்கும்    உண்டு

 வரவும்    செலவும் -நம்
 வாழ்வினில்    வருமே
 வந்ததைக்    கண்டுமே -நீயும்
 வருந்துதல்    தவறு

 இறவாப்    புகழினை -உலகில்
 எய்திடப்    பாரு
 இருக்கும்    வரையில் -இங்கே
 பிறர்க்கென    வாழு

 உண்டு என்றிடில் -அதில்
 இல்லை கூட    இருப்பதுமுண்டு
 தொண்டு    புரிந்திடில் -வந்த
 துன்பம்    தூரமே

 மனதைத்    திறப்பாய் -வரும்
 மமதையை    மறப்பாய்
 குணத்தை    மதிப்பாய் -அன்பு
 பாசத்தை    நினைப்பாய்

 நன்றிஒன்றே    நாளும்  வெல்லும் -என்றும்
 நம்பிக்கையே    நல்லன     அளிக்கும்
 இன்று நினைப்பதை    நன்று முடிப்பாய் -இனி
 எல்லாம்    வல்ல    இறையை   துதிப்பாய்

 நலமாய்    சொன்னேன் -உலகில்
 நன்றாய்    வாழ்ந்திட
 உளமதில்    கொள்ளு -வாழ்வில்
 உயர்வினை    அள்ளு 

சனி, 26 ஜூலை, 2014

புதிய உலகம் 305.

நெருப்பாய்    இருந்தாய் -நான்
 நீராய்      அணைத்தேன்
 வெறுப்பை   துறந்தால் -இனி
 விரும்பியே   வருவேன்

 வாழ்வில்    வசந்தம் -உன்னிடம்
 வந்திடும்   கண்ணே
 வாடியே    இருந்தால் -இன்னும்
 வருத்தங்கள்   மிகுமே

 ஆழியில்    அலைகள் -சற்று
 அடங்குதல்    எப்போ
 ஆழ்மனக்    கடலில் -நல்ல
 அமைதியே    தப்போ

 நல்லதை   நினைப்பாய் -அதனால்
 நன்மைகள்    சேரும்
 உண்மையாய்    நடந்தால் -இந்த
 உலகமே    வணங்கும்

 கள்ளம்    வாழ்வினில் -பல
 கவலைகள்   சேர்க்கும்
 உள்ளம்    மலர்ந்தால் -என்றும்
 உன்னதம்    பெறலாம்

 இருப்பதை    வைத்து -நன்கு
 சிறப்புடன்    வாழு
 இன்னுரை    சொன்னால் -நீயும்
 அன்புடன்    கேளு

 சினத்தினை    தவிர்த்து -தூய
 சிரிப்பினைச்   சேர்த்து
 உனக்கென   உலகம் -இங்கே
 உருவாக்க    வேண்டும் 

மகராசி 304.

மடியினில்    சாய்ந்திடு   மகராசி -என்
 மனதினில்    குடிபுகு   விலைபேசி
 தினமுனை   நினைத்தால்   முகராசி -நீ
 தேர்    போலவே   வந்திடு   கைவீசி

 நல்லவை   எல்லாம்   நடக்கட்டுமே -நம்
 நாட்டினில்    அமைதி   நிலவட்டுமே
 பொய்யும்   புளுகுகள்   போகட்டுமே -இங்கு
 புதுமை    எண்ணங்கள்   மலரட்டுமே

 இல்லை என்பது   இல்லாது   போகும் -இனி
 எல்லோரும் சமமெனும்   சூழ்நிலை   ஆகும்
 கல்லாமை   என்பது   காதம்    ஓடும் -வந்த
 காரிருள்    நீங்கிடக் களிப்பும்   கூடும்

 நல்லவர்   தீயவர்   நம்மிலே   உண்டு -தினம்
 நன்மையைச்   செய்வோர்   வாழ்வே   நன்றாம்
 கள்ளம்    மறந்திடில்   காலமும்    நன்று -நாம்
 கண் கவர்   சொர்க்கம்   காண்பது    என்று

 உள்ளதை   எல்லாம்    நல்லதாய்    ஆக்கு --என்றும்
 உன் திறம்    கொண்டு   பிறர் துயர்    நீக்கு
 அல்லதைச்    செய்தால்   அவதிகள்   மிகுமே -அந்த
 அவனருள்   இருந்தால்    அனைவரும்    நலமே

 இருப்பதை   எல்லாம்   பொதுவென    ஆக்கு -உலகில்
 ஏழை    செல்வர்    பேதங்கள்    மாற்று
 பொறுமையால்   வாழ்வினில்  புகழ்க் கொடி   ஏற்று -நீயும்
 பொங்கினால்   ஓடிடும்   புரட்டுகள்    தோற்று



அழகே 303*

காரிருள்    வானில் -நல்ல
 கதிரவன்     ஒளி போல்
 நீ எதிரில்    வந்தாய் -என்
 நிம்மதி    குலைந்தேன்

 பூவிரி     அழகோ
 பொன்னிற    மதுவோ
 மாதுளம்    கனியோ
 மல்லிகை    மலரோ

 கோவைப்    பழமோ
 கொய்யாக்    கனியோ
 மரகதச்    சிலையோ
 மதனது    அம்போ

 செங்கனிச்    சாறோ
 சீதள       நிலவோ
 கோபுரச்    சிலையோ
 கொற்கை    முத்தோ

 காவிரிப்    புனலோ
 கற்பகத்    தருவோ
 பருவத்தின்    எழிலோ
 பங்கஜ    மலரோ

 என்னதான்    சொல்லியே
 உந்தனை    அழைப்பேன்
 என்னருமைத்    தமிழே
 இனிநான்    என்செய்வேன் 

வியாழன், 24 ஜூலை, 2014

பெருமை 302.

சின்னஞ்    சிறிய    தளிர்களே -இங்கு
 சிரிக்கும்    மல்லிகை    மலர்களே
 நானும்    நல்லவை    சொல்லுவேன் -அதனை
 நலமுடன்    அன்பாய்க்    கேட்பீரே

 அன்பு    என்பது    அன்னையே -வரும்
 அறிவு    என்பதும்    தந்தையே
 இரண்டும்    இணைந்தது    குடும்பமே -இதனை
 எண்ணியே    நடந்திட    வேண்டுமே

 கூடியே    வாழ்தல்    நன்மையே -அது
 குறைகள்    இல்லாத    தன்மையே
 நாளும்    இதையும்    நம்பணும் -என்றும்
 நம் நிலை    எப்போதும்    உயரணும்

 கல்வியைக்    கற்பது    கடமையே -அதில்
 கவனத்தை    இழப்பது    மடமையே
 பள்ளியில்    பாடம்    படிக்கணும் -நாம்
 படித்ததை    செயலிலே    காட்டணும்

 தேசத்தை    உயர்வாக     போற்றணும் -பிறர்
 செய்திட்ட    தியாகத்தை   நினைக்கணும்
 தேகத்தை    உறுதியாக    வைக்கணும் -அந்த
 தெய்வத்தை   தினமும்    துதிக்கணும்

 மூத்தோர்    தம்மையும்    மதிக்கணும் -அவர்
 முன்னேற   வழி சொன்னால்   கேட்கணும்
 பார்த்ததை    மனதிலே    பதிக்கணும் -நம்
 பாரதப்    பண்பினைக்    காக்கணும்

 உழைப்பினை    நம்பியே    வாழணும் --நெஞ்சில்
 உயர்வான     எண்ணத்தைக்    கொள்ளணும்
 பிழைத்திட    நல்வழி     பார்க்கணும் -நாட்டின்
 பெருமையை    தோளிலே    சுமக்கணும்




எண்ணம் 301+

நாளை    எண்ணியே
 நம்பி    வாழ்வேன்
 வேளை    வந்தால்
 வெற்றியினைப்    பெறுவேன்

 கதிரின்    ஒளியில்
 கருணை    வழியில்
 புதிய     முறைகள்
 புகுத்திடப்    பார்ப்பேன்

 அன்பில்    அணைத்து
 அறிவை    வளர்த்து
 பண்பினில்    நானும்
 பழகிடத்    துணிவேன்

 எடுத்துக்    கொடுத்து
 இன்னலைத்    துடைத்து
 அடுத்துப்    பிறர்க்கு
 அள்ளித்    தருவேன்

 நானும்    வளர்ந்து
 நல்லவை    நினைத்து
 வானம்    வரைக்கும்
 வளர்ந்திட    முனைவேன் 

இதய தீபம் 300***

உலவும்    காற்றே
 உனக்கொரு    சேதி
 நான்   சொன்னபடியே
 நீயும்    சொல்லிட வேண்டும்

 எனது    எண்ணம்
 முழுவதும்    அவர் தான்
 எடுத்துச்    சென்றே
 சொலவும்    வேண்டும்

 நெஞ்சில்    அணைத்தார்
 நேசம்    தந்தார்
 வஞ்சிப்    பெண்ணையே
 கொஞ்சியே    மகிழ்ந்தார்

 மடியினில்    சாய்ந்தேன்
 மையலில்    வீழ்ந்தேன்
 அடிமையாகி    அவருக்காக
 அனுதினமும்    வாழ்கின்றேனே

 அன்று    சென்றார்
 இங்கு    இல்லை
 ஆசைகள்    அதிகம்
 அவரே    அறிவார்

 இன்றே    அவரை
 திரும்பிடச்    சொல்லு
 இதயத்தில்    தீபங்கள்
 ஏற்றிட ச்    சொல்லு

 இரண்டு    உள்ளங்கள்
 எங்கள்    இல்லம்
 இன்ப    மேகங்கள்
 நிறையவே    பொழியும் 

இளமைக் காலம் 299.

கனவில்    வந்த
 கள்வன்    எவனோ
 கரத்தைப்    பற்றிட
 வருவான்    தோழி

 கருமை    நிறத்தான்
 காதல்    மன்னன்
 கட்டியே     அணைத்து
 முத்தம்    தந்தான்

 சொக்கிப்    போனேன்
 சுகத்தில்    அமிழ்ந்தேன்
 விவரம்    அறிந்தேன்
 வெல்லமாய்    கரைந்தேன்

 வெட்கம்    இல்லை
 வெளியில்    சொல்ல
 வேண்டும்    வரைக்கும்
 விழைந்தேன்    அள்ள

 இரவும்    பகலும்
 எமக்குள்    ஏது
 இன்ப    எல்லைகள்
 மீறிடும்    பொழுது

 ஒன்றிச்    சேர்ந்து
 உறவில்    கலந்து
 என்றும்    இது போல்
 இணைந்து    வாழ்வோம்

 இளமைக்    காலம்
 இனிய    கோலம்
 கனியும்    சுவைபோல்
 கலந்து    வாழ்வோம் 

புதன், 23 ஜூலை, 2014

இன்ப நினைவு 298.

நீல   வானம்   நீயடி -உன்னை
 நெருங்கும்   நிலவு   நானடி
 வாலைக்   குமரி   நீயடி -எனக்கு
 வாரித்   தருவாய்   தேனடி

 காதல்   வலையில்   நானடி -அதை
 காத்திட   வேண்டும்   நீயடி
 மோதல்   நமக்குள்   ஏனடி -உன்மேல்
 மோகம்   என்பதும்   சரியடி

 இரவில்   சுமைகள்   ஏறுமே -அங்கு
 இன்ப   நினைவுகள்   ஊறுமே
 பழகவே   மனதும்    ஏங்கு மே -காதல்
 படித்ததால்   வந்திடும்   தூக்கமே

 வாழ்வில்   நிறைவது   வசந்தமே -இதில்
 வருவது   நமக்குச்   சொந்தமே
 நாளும்   நடப்பது   நன்மையே -உனை
 நம்பி   இருப்பதும்   உண்மையே

 கண்ணாய்   உந்தனைக்   காத்திருப்பேன் -என்றும்
 கவலைகள்  இன்றியே   பார்த்திருப்பேன்
 என்னால்   தாங்கிட   முடியாதோ -இந்த
 ஏழையின்   பொழுதும்   விடியாதோ

 சஞ்சலம்   என்பதை   விட்டுவிடு
 சத்திய   நெறிதனை   கற்றுவிடு
 நெஞ்சிலே    கருணையை   நிறையவிடு -என்னை
 நிம்மதியாக   உன்னுடன்   வாழவிடு 

தோழி 297.

வாராய்    தோழி
 வாழ்க    நீடூழி
 கேளாய்    கதையை
 கிளர்ச்சியின்    நிலையை

 கண்ணால்    அழைத்தான்
 காதல்    தொடுத்தான்
 பெண்ணாய்    பிறந்தேன்
 பேதமை    அடைந்தேன்

 பள்ளியில்    பாடம்
 பத்தே    மாதம்
 அள்ளிக்    கொண்டது
 அழகிய    மகவு

 சொல்லிக்    கொடுத்தான்
 சுவைபடக்    கற்றேன்
 தள்ளிப்    போனான்
 தணலில்    வீழ்ந்தேன்

 வருவான்    என்றே
 வழிமேல்    நின்றேன்
 பெறுவேன்    வாழ்வு
 பிறகேன்    தாழ்வு

 சேதி    வந்தது
 சிந்தை    குளிர்ந்தது
 ஜோதி     தெரியுது
 சொர்க்கம்    அழைக்குது

 நலமாய்    தோழி
 நன்கு    வாழ்வேன்
 உளமாய்    சொன்னேன்
 உயர்நிலை    பெறுவேன் 

புது வழி 296.

இறவா    மனிதர்
 இருப்பது    உண்டோ
 ஏழை    என்பார்
 இல்லாமல்    உலகோ

 நாளை    என்பது
 நம்பிக்கை   சரியா
 வேலை    தேடுவதே
 விடியலை    தருமா

 போனவர்    வருவார்
 வருபவர்    போவார்
 புரட்டி    மாற்றிட
 புதுவழி    உளதா
  கனி விழக்  காலம் 
 காத்தலைப்    போல
 இனிமேல்    நாமும்
 இருத்தலும்    தகுமா

 அலைகளை    அடக்கி
 ஆற்றலைப்    பெருக்கி
 விளைபொருள்    அதிகம்
 விழைதலும்    வருமா

 கதிரவன்    ஒளியினைக்
  கருத்தாய்    சேர்த்து
 புதுமை    வழிகளில்
 புறப்படல்    முறையோ

 இருப்பதைக்    கொண்டு
 சிறப்புடன்    வாழ்வோம்
 புல்லரை    எதிர்த்து
 பொங்கியே    எழுவோம் 

பண்பு 295.

போனதை    எண்ணியே  -தினம்
 புலம்புதல்    தவறு
 பொறுமையாய்    உழைத்துமே -நிறைய
 பொருளினைத்    தேடு

 நாளைய    உலகம் -இங்கு
 நமக்கென    இருக்கு
 நம்பிக்கை    வைத்திடில் -என்றும்
 நலமாய்    உயர்வாய்

 அறிவால்    உலகினை -நீயும்
 அறிந்திடப்    பாரு
 அதுதான்    திறமை -அதனால்
 அடையலாம்    பெருமை

 பெண்ணை    மதித்திடு -பிறர்
 பொருள்    மறுத்திடு
 கண்ணை    நம்பிடு -வீண்
 கவலையை    விரட்டிடு

 அன்பைப்    பழகிடு -ஏழைக்கு
 ஆறுதல்    சொல்லிடு
 பண்பை    வளர்த்திடு -வாழ்வில்
 பக்தியைப்    பெருக்கிடு

 தாயை     வணங்கிடு -பொல்லா
 தலைக்கனம்    விட்டிடு
 வாய்மை    பேசிடு  -நன்கு
 வாழ்ந்து    பார்த்திடு
  

செவ்வாய், 22 ஜூலை, 2014

நாடகம் 294.

நாடகம்    எங்கிலும்    நடக்குது -அதில்
 நன்மையையும்    தீமையும்    அடங்குது
 ஏடுகள்    எதையோ    எழுதுது -அதற்கு
 ஏற்படும்    நிலைமைகள்    புரியுது

 பெண்ணிற்கு    கொடுமைகள்    செய்யுது -அதனை
 பெரிய    போர்வைகள்    மறைக்குது
 கண்ணையும்    காதையு ம்    கெடுக்குது -அதுவே
 கலாசார    மென்றே    புளுகுது

 விண்ணிலும்    வேடிக்கை    காட்டுது -மனிதனை
 வேடிக்கை    பொருளாக்கி    கொல்லுது
 உண்மையை     மறைத்தே    உளறுது -ஏன்
 உலகத்தை    தூசென    மதிக்குது

 ஏழையின்    வயிற்றிலே    அடிக்குது --அதை
 எதிர்த்துக்    கேட்டாலே    முறைக்குது
 வேலைக்கு    கூலியைக்    குறைக்குது -அவர்
 வேதனைப்    படுவதை    ரசிக்குது

 அணைகளைப்    புதிதாய்க்    கட்டுது -ஏனோ
 அரசியல்    புகுந்துமே    கெடுக்குது
 துணையைப்    பகையென    நினைக்குது -நல்ல
 தோழமை    உணர்வினை    வெறுக்குது

 மாறிடும்    என்று நாம்    நினைக்கிறோம் -தமிழ்
 மண் வளம்    பெருகிட    உழைக்கிறோம்
 யாரிடம்    குறைகளைச்    சொல்வது -இனி
 எப்படி    துயர்களை    வெல்வது 

பாடங்கள் 293.

உலகம்    படைத்தான்    ஒருவன் -அவன்
 உயரத்தில்    மறைவாய்    இருப்பான்
 கலக்கம்    சூழ்ந்திடும்    காலம் -வீசும்
 காற்றிலும்   கலப்பதவன்    கோலம்

 நீர் நிலைகளில்   என்றுமே    இருப்பான் -நீ
 நினைத்திடில்    மனதிலும்    வசிப்பான்
 போரிலும்    நீதிகள்    உரைப்பான் -அவன்
 பொங்கினால்    உலகத்தையே    கரைப்பான்

 ஏழைக்கு     இரங்குதல்    அவனே -நம்
 இதயத்தை    திறப்பதும்    அவனே
 சோலையில்    வருவான்    காற்றாய் -நற்
 சுகம் மட்டும்     விரும்பினால்    தோற்றாய்

 இரக்கத்தை    நெஞ்சிலே    கொள்ளு -மனதில்
 இருந்திடும்    தீமையைத்    தள்ளு
 உறக்கத்தை    தள்ளியே    எழுவாய் -அது
 உனக்குத்    தந்திடும்    வருவாய்

 பள்ளமும்    மேடாய்    மாறும் -வீண்
 பகையிலும்    நட்பொன்று    ஊறும்
 நல்லவை    என்றுமே    வெல்லும் -அது
 நமக்குப்    புது பாடங்கள்    சொல்லும் 

நாயகி 292.

நிலவால்    முகம்   படைத்தாய் -ஏன்
 நெருப்பால்    விழி    அமைத்தாய்
 கனவால்    வதை    கொடுத்தாய் -உனது
 கண்ணால்    சிறை    பிடித்தாய்

 நாளும்    துயர்    சுமந்தேன் -உன்னை
 நம்பி    மனம்    உடைந்தேன்
 பாழும்    விதி   வசத்தால் -நானும்
 பாதகம்    அடைந்து    விட்டேன்

 நெஞ்சில்    அன்பு    இல்லை -உனக்கு
 நேர் வழி    தெரிய    வில்லை
 கொஞ்சம்    மனம்    இரங்கு -என்
 கோமளம்    சுகம்    வழங்கு

 காலம்    தரும்    பாடம் -எதுவும்
 கவனத்தில்    கொள்ள    வில்லை
 உலகம்    பழிக்குமென்ற   உண்மையை -நீ
 உதறித்    தள்ளி    விட்டாய்

 அன்பிற்கு     இடம்    இல்லையோ -காதல்
 ஆசை     வந்திட     வில்லையோ
 நன்றியை    மறந்தது    என்னவோ -இந்த
 நாடகம்    நமக்குள்    எதற்கோ

 வாழ்வு    சுகம்    கொடுக்கும் -அதில்
 வாய்மை    துணை    இருக்கும்
 நாளும்     இதை    நினைக்க -அடி
 நாயகி    வாடிநீ    எனை அணைக்க 

உல்லாசம் 291.

கத்தும்      குயிலோசை  -உனது
 காதில்     விழவில்லையா
 பித்தம்     பிடித்தலைந்தால் -என்ன
 பெருமை     வருமோடி

 ஆற்றங்    கரையினிலே -நீ
 அழகாய்க்     குளிக்கையிலே
 பார்த்து       ரசித்தேனடி -மனம்
 பஞ்சாய்     பறக்குதடி

 செக்கச்     சிவந்தவளே -இளம்
 செம் மாதுளை     மொட்டே
 கச்சையை     மீறியன்றோ -எனது
 கண்களும்     மேயுதடி

 கூந்தல்     அலையடிக்கும் -உனது
  கோல விழி     மயக்கும்
 காந்தள்     விரலழகு -யாரும்
 கண்டாலே     கிறுகிறுக்கும்

 நிமிர்த்தி     நடை நடக்க -பிறர்
 நெஞ்சம்     பதறுமடி
 உயர்ந்த     உன்னுருவம் -மனதில்
 உல்லாசம்     கிளப்புமடி

 கொஞ்சும்     மொழியாளே -நல்ல
 கோவை     இதழாளே
 மஞ்சம்     பெறலாமோ -எனக்கு
 மகிழ்ச்சி     வரலாமோ 

திங்கள், 21 ஜூலை, 2014

அமுதம் 290.

நிலவென்ன     பேசும் -உனது
 நினைவெங்கே   செல்லும்
 கனவல்ல   காதல்   உண்மையே

 கண்     பேசுமா -இல்லை
 கடும்    கோபமா
 கண்ணோடு    கண்   பேசும்   நிலையிலே

 தேன்சிந்தும்     மலரிலே -தினம்
 தேடி வரும்     வண்டு போல்
 நானானேன்   உன்னிடம்    அன்பிலே

 நலமாக     வாழலாம் -புது
 நறு மாலை    சூடலாம்
 நாயகியே    நம் வாழ்வில்    விரைவிலே

 ஈருடல்கள்    இணையவே -அங்கு
 இன்ப மழை   பொழியவே
 வேறுலகம்    போகலாமா   விரும்பியே

 காட்சிகளும்    மாறிடும் -பல
 கற்பனைகள்    ஊறிடும்
 ஆட்சி செய்ய    வந்திடுவாய்    அழகியே

 அடிமையென்று    ஆகினேன் -உன்னை
 அனுதினமும்    தொழுகிறேன்
 பிடியிடையில்    சிறை பிடித்தாய்   வாழ்விலே

 வாய் திறந்து    பேசினால் -உனது
 வண்ண மலர்    உதிருமோ
 தாய் மடியில்    கன்றானேன்    தலைவியே

 அமுதமது    பருகுவோம் -மெய்
 அன்பில்    நிதம் உருகுவோம்
 பழ்ச்சுளையாய்    நீ இனிப்பாய்    பதுமையே

 தஞ்சமென்று     கொள்ளுவாய் -இன்றே
 தழுவி   என்னைக்    கொல்லுவாய்
 கொஞ்ச    நீயும்    வந்திடுவாய்    குமரியே 

ஸ்ரீ வள்ளி 289.

ஒருநாள்    திருநாள்   பெருநாள் -இங்கு
 உத்தமன்   முருகன்   வரு நாள்
 வள்ளிக்     கணவன்   வருவார் -அந்த
 வள்ளலைப்  பாடியே  மகிழ்வோம்

 சரவணப்   பொய்கையில்   பிறந்தார் -அவரை
 ஷண்முகன்   என்றே   அழைப்பார்
 ஆரிருகரம்   கொண்ட   ஐயன் -அவர்
 அழகெனும்   பேர்   பெற்ற   முருகன்

 தேவர்    குலம்    காக்க    பிறந்தார் -அன்று
 தெய்வ யானையை யும்   மணந்தார்
 பாவம்தனைப்   போக்கும்    புனிதர் -தெய்வ
 பார்வதி    தாயின்    மைந்தர்

 சொல்லி    அழைத்தாலே   வருவார் -நாம்
 சுகம்பெற   வரங்களை    தருவார்
 வள்ளிமலை   கொண்ட   வாசன் -மக்கள்
 வருத்தம்    தீர்க்கின்ற   நேசன்

 மலைகள்   எங்கிலும்    இருப்பார் -ஏழை
 மனிதர்கள்    மனதிலே   வசிப்பார்
 அலைவாழ்   செந்தூர்     வாசம் -என்றும்
 அடியவர்   மீதிலன்பு    பாசம்

 தமிழாய்    திகழ்வதும்    முருகன் -கொடிய
 தருக்கரை    அழித்தவர்    கந்தன்
 அமிழ்தாய்   இனிப்பதும்    அவரே -நாம்
 அனுதினம்   தொழுவதும்  நலனே

சனி, 19 ஜூலை, 2014

கேள்விகள் 288.

கனவு     பலிக்குமா
 காதல்     இனிக்குமா
 நினைவு     நிலைக்குமா
 நேசம்     மலருமா

 வளமை     சேருமா
 வாழ்வு     பெருகுமா
 கடமை     முடியுமா
 கவலை     குறையுமா

 நீதி     கிடைக்குமா
 நெஞ்சம்     நிறையுமா
 ஜோதி     தெரியுமா
 தோல்வி     மறையுமா

 அன்பு     பாவமா
 ஆசை     மோசமா
 பண்பு     கேலியா
 பாசம்     வேசமா

 கானல்     உண்மையா
 கயமை     பெருமையா
 விவேகம்     சோகமா
 வீரம்     சோரமா

 உருவம்      கருவமா
 உணர்ச்சி     கொடுமையா
 கர்வம்     கருணையா
 காசே     தெய்வமா

 இன்று     நாளையா
 இரவே     பகலுமா
 இளமை     நிலைக்குமா
 இயற்கை     செயற்கையா 

வெற்றி 287.

அலையாடும்     கடலினிலே
 ஆழத்தினைக்     கண்டதுண்டோ
 உலகாளும்     உமையவளின்
 உள்ள நிலை     தெரிவதுண்டோ

 உளியாடும்     சிற்பத்தின்
 உண்மை நிலை     அறிவதுண்டோ
 நீர் போகும்     வழியினிலே
 நிலத்தின் வலி     குறைவதுண்டோ

 ஊர்கூட்டும்     சபைதனிலே
 உண்மையினை     உரைப்பதுண்டோ
 பேர் பெற்ற     மனிதரிடம்
 பெருந்தன்மை     என்பதுண்டோ

 ஏர் உழவன்     படும் சிரமம்
 எல்லாரும்     அறிவ துண்டோ
 பார் புகழும்     நாட்டினிலே
 பழிஎண்ணம்     மறைவதுண்டோ

 மனிதரோடு     மனிதர்க்கும்
 மனமலர்ச்சி     நிறைவதுண்டோ
 மாதாவின்     அருமைதனை
 மக்களும்     புரிந்ததுண்டோ

 நெஞ்சோடு     நெஞ்சாக
 நினை வலைகள்     கலப்பதுண்டோ
 அஞ்சாமல்     பழி செய்தோர்
 அமைதிதனை     அடைவதுண்டோ

 எழுதாமல்     மறந்தவைகள்
 இனிமேலும்     வருவதுண்டோ
 வெற்றி பெற     உழைக்காமல்
 வெறும் பேச்சு      வெல்வதுண்டொ 

கண்ணான கண்ணே 286.

கண்ணான     கண்ணே -என்
 கனிமுத்துப்     பெண்ணே
 என்னாசைக்     கிளியே -நீ
 இன்பமாய்     வாழ்க

 காலையில்     எழுக -உனது
 கடமையை     முடிக்க
 வேலையை     முடித்து -விரைந்து
 பள்ளி       செல்க

 படிப்பிலே     கவனம் -கொண்ட
 பார்வையில்     நிதானம்
 துடிப்பாக     வளரு -என்றும்
 துன்பத்தை     தள்ளு

 பிரியமுடன்     பழகு -நல்ல
 பெருமையே     அழகு
 அரியவற்றை     கற்பாய் -அன்பால்
 அனைவரையும்     வெல்வாய்

 படித்தவாறு     நடக்க -மனதில்
 பக்குவம்     கொள்வாய்
 தடித்த     ஒரு வார்த்தை -சொல்லல்
 தவறு தான்     பெண்ணே

 கிடைப்பதை      உண்ணு --வரும்
 கிளர்ச்சி தனைக்     கொல்லு
 நினைத்ததை     முடிக்கும் -வலிய
 நெஞ்சுறுதி     கொள்க

 தெய்வம் தனை     தொழுக -தினமும்
 பள்ளி        செல்க
 உய்யும் வழி     இதுவே -நான்
 உனக்குச்     சொன்னேன்  கண்ணே













புது யுகம் 285.

புது யுகம்     காண -நீ
 புறப்படு     தம்பி
 பொன்னான     காலம் -இனி
 போவதோ     வெம்பி

 கைகளை     நம்பு -வரும்
 கவலையை    தள்ளு
 கடமையை     கொள்ளு -பின்
 காசினை      அள்ளு

 உயரத்தில்     நில்லு -என்றும்
 உண்மையை     சொல்லு -
 சிகரத்தில்     ஏறு -வாழ்வில்
 சிறந்திடப்     பாரு

 இல்லாமை     போக்கு -எதையும்
 இனியவை     ஆக்கு
 கல்லாமை     நீக்கு -என்றும்
 கற்றோரை     நோக்கு

 எளியோரை     காக்க -வரும்
 இன்னல்கள்     தீர்க்க
 வலியோரை     சேர்க்க -உன்னில்
 வல்லமை     வளர்க்க

 வாய்மையை     பழகு -நாளும்
 வள்ளலாய்     மாறு
 நோய்தனைப்     போக்கு -இங்கு
 நுண்கலை     பழகு

 தமிழிலே     பேசு -பிறரின்
 தவறினை     ஏசு
 தக்காரைப்     போற்று -நாட்டின்
 தலைவிதி     மாற்று

வெள்ளி, 18 ஜூலை, 2014

தம்பிக்கு 284.

வரவா     செலவா
 வாழ்வு     சுகமா
 வாழ்ந்து     பாரடா -தம்பி
 வார்த்தை     கேளடா

 வந்தவர்     போனார்
 போனவர்     வந்தார்
 வாழ்க்கை     ரகசியம் -தம்பி
 வாழ்ந்திடல்     அவசியம்

 எழுந்தார்     நடந்தார்
 எங்கோ     மறைந்தார்
 எதுவும்     அறிவாரோ -தம்பி
 இதயம்      திறப்பாரோ

 தானாய்     வந்தார்
 தலை கீழ்     நடந்தார்
 தனியாய்     போவாரே -தம்பி
 தத்துவம்     அறிவாயே

 தாண்டிக்     குதித்தவர்
 தண்ணியில்     மிதந்தவர்
 மாண்டிங்கு     போனாரே -தம்பி
 மமதை      கொள்ளாதே

 எல்லாம்     தெரிந்தவர்
 தொல்லை    பட்டார்
 இதனைநீ     மறவாதே -தம்பி
 இன்பம்     நிலையாதே

 பழியினைச்     சொன்னவர்
 பாழ்பட்டுப்     போனார்
 பாடம்    அறிவாயே -தம்பி
 பக்குவம்     தெரிவாயே

 ஆணாய்ப்     பிறந்தவர்
 ஆணவம்     தவறு
 அதனை     உணர்வாயே -தம்பி
 அவசரம்     கூடாதே

 நன்றி     உள்ளவர்
 நன்மையே     பெறுவார்
 நாயகன்     வழியாகும் -தம்பி
 நல்வழி     ஜெயமாகும்

 பெண்களைப்     பழிப்போர்
 பிறர் பொருள்     பறிப்போர்
  கண் கெட்டுப்     போவாரே -தம்பி
 கயமை     கூடாதே





விடிவெள்ளி 283

கண்ணாளன்     வருவார் -ஒரு
 கனிமுத்தம்     தருவார்
 மின்னாமல்     இடித்து -இனி
 மழை பெய்யும்     தோழி

 பொன்நாளும்     இதுதான் --அந்த
 புதுப் பாடல்     சுகம்தான்
 என்னாசைக்     கனவு -என்றும்
இன்பமாய்    பலிக்கும்

 விண்ணிலே     பறப்பேன் -நான்
 விடி வெள்ளி     ஆவேன்
 கண்களில்     மலர்ச்சி -எங்கள்
 காதலில்     வளர்ச்சி

 மகவொன்று     போதும் -அது
 மகிழ்ச்சியே     ஆகும்
 அகவைகள்     சென்றால் -இன்னும்
 அழகாகும்     தோற்றம்

 நன்றாக     வளர்ப்பேன் -தினம்
 நல்லவை     சொல்வேன்
 தென்றலும்     வீசும் -எமக்கு
 தேனாக     இனிக்கும்

 நன்றியைச்     சொல்வேன் -உழைப்பில்
 நம்பிக்கை     கொள்வேன்
 கன்றுடன்     பசுபோல் -நானும்
 களிப்புடன்     வாழ்வேன் 

இனிதாக 282.

மானாடும்     சோலையில் -ஒரு
 மயிலாடக்     கண்டேன்
 மணவாளன்     வந்தான் -ஏனோ
 மயங்கியே     நின்றேன்

 எதோ ஒன்று     சொல்லிட -அங்கு
 அருகில்     சென்றேன்
 இயலாமல்     தோழி -அன்று
 எதற்கோ     மறந்தேன்

 கைகளால்     தொட்டு -என்னை
 கனிவாக     இழுத்தான்
 பெண்மையின்     நாணம் -அவனிடம்
 பிறகென்ன     சொல்லும்

 கண்களால்     அளந்தோம் -எங்கள்
 காதலை     வளர்த்தோம்
 எண்ணாமல்     இணைந்தோம் -பின்பு
 எங்கேயோ     பறந்தோம்

 மறவேன்     என்றான் -இன்னும்
 வரவே     இல்லை
 கனமான     நெஞ்சமும் -வீணாய்க்
 கலங்குதே     தோழி

 ஒருநாள்     வருவான் -இனிமேல்
 ஒன்றாகி     வாழ்வோம்
 திருநாள்     அதுதான் -நீயும்
 திடம் கொள்     தோழி

 மன்னன்     வேண்டும் -அவனால்
 மக்களும்     வேண்டும்
 இனியென்ன      போதும் -நாங்கள்
 இனிதாக     வாழ்வோம் 

வியாழன், 17 ஜூலை, 2014

விடுகதைகள் 281.

கவியினில்    ஆடும்
 கன்னியர்    நாடும்
 மழலையர்  விரும்பும்
 மன்னவன்  யாரோ
      நிலவு

 வானம்    தொட்டு
 பூமி    வரைக்கும்
 கானம்    பாடிடும்
 கந்தர்வன்   யாரோ
     மழை

 கண்ணைப்    பறிப்பான்
 காதைக்    கிழிப்பான்
 பின்னல்   நடையில்
 பின்னியே   எடுப்பான்
     இடி மின்னல்

 கோட்டையில்    இருப்பான்
 குறும்புகள்    செய்வான்
 சேட்டைகள்    புரிவான்
 சிண்டுகள்    முடிவான்
      நாக்கு

 பகலில்    வருவான்
 பாசம்     பொழிவான்
 இரவில்    தெரியான்
 அவன் பேர்   என்ன
      சூரியன்

 கரைகள்    உடையான்
 கண்ணியம்    மிக்கான்
 கருணையில்    மன்னன்
 கழனிகள்    காப்பான்
     ஆற்று நீர்

 வளைவான்    நெளிவான்
 வளமை    குறையான்
 இரவாய் பகலாய்
 என்றும்    உழைப்பான்
       இருப்புப்  பாதை

 கானம்    இசைப்பான்
 கைகளில்    தவழ்வான்
 மோனத்    தவத்தில்
 மூழ்கிக்    கிடப்பான்
     வீணை

 பெண்கள்    பின்னால்
 பெருமையாய்    தொடர்வான்
 கவிஞர்கள்    பாடிடும்
 கருப்பொருள்    ஆவான்
       பின்னல் ஜடை

 நடந்தே    வருவான்
 நாலிடம்    அறிவான்
 கடந்தே    செல்வான்
 கள்வனும்    யாரோ
       கால்கள் 

புதன், 16 ஜூலை, 2014

வேலன் கருணை 280.

கண்ணின்    கருமணியே   கண்ணம்மா
 கற்பகப்      பூந்தேனே
 என்னில்    கலந்தவளே   கண்ணம்மா
 ஏக்கம்    நிறைய    வைத்தாய்

 உன்னை    நினைத்தன்றோ   கண்ணம்மா
 உருகித்    தவிக்கின்றேன்
 விண்ணில்    மறைந்தாயோ   கண்ணம்மா
 வேதனை    மீறுதடி

 சோலை    நடுவினிலே    கண்ணம்மா
 சொக்கித்    திரிந்தோமே
 வேளை    வந்ததென    கண்ணம்மா
 விரைந்து    எங்கே    சென்றாய்

 கொட்டும்    மழையினிலும்   கண்ணம்மா
 கொஞ்சி    மகிழ்வோமே
 விட்டுப்     பிரிந்தாயே    கண்ணம்மா
 விரகம்    சூழுதடி

 ஆற்றில்    குடிநீரை    கண்ணம்மா
 நான்   அள்ளிக்    குடிக்கையிலே
 பூத்து ச்    சிரிப்பாயே    கண்ணம்மா
 உன் புன்னகை    கொல்லுதடி

 வெட்ட     வெளியினிலே   கண்ணம்மா
 விடியும்    நேரம்    தொட்டு
 கட்டிப்    பிடிப்போமே    கண்ணம்மா
 கண்கள்     குளமானதடி

 வாழும்    காலம்    வரை   கண்ணம்மா
 வருவாய்    என்றே    நினைப்பேன்
 வேலன்    கருணையினால்   கண்ணம்மா
 விரும்பி    நீயே    வருவாய் 

சிவசிதம்பரம் 279.

ஆல கால    விஷத்தினை   அள்ளிஉண்ட  சிவமே
 காலைத்  தூக்கி   ஆடினார்   தில்லையில்
 கோலம் நிறை   சக்தியும்   கோபமாக   ஆடினார்
 குன்றதிர   கோள்  அதிர   கோர்வையாக   ஆடினார்

 சக்தி  ஆடும்   வேகத்தில்   சகலமும்   ஆடின
 சித்திரையில்  நிலவு  போல்  சிறப்பாக   ஆடினார்
 முக்தி   நிறை   முனிவர்கள்   முன்னிலை  பெற்றனர்
 சக்தி  சக்தி  என்றே   சந்தோசம்   கொண்டனர்

 மைந்தர்கள்   எதிரே   மாதாவும்   ஆடினார்
  ஆனைமுகன்  மத்தளம்   அழகாகத்   தட்டினார்
 வேலனும்    தாயினுக்கு   வேணுகானம்  வாசித்தார்
 பாங்கியர்கள்  சூழவே   பதுமை போல்   ஆடினார்

 தேவாதி   தேவர்கள்   தில்லையில்   கூடினர்
 பாதாதி   கேசம்  அவிழ   பரமசிவன்   ஆடினார்
 நாரணன்   நம்பியும்   நாட்டியத்தை  ரசித்தார்
 தங்கை  ஆடும்   ஆட்டத்தில்   கைதாள மிட்டுக்  காட்டினார்

 இருவரின்   ஆட்டமும்  இணையாக   நடந்தன
 ஒருவரை   ஒருவர்   மிஞ்சும்படி   ஆடினர்
 கருநீல   கண்டரோ   காலைஉயரே   தூக்கினார்
 கர்வப்பட்ட   சக்தியோ   தோல்வியைத்   தழுவினார் 

நிலவுப் பெண் 278.

நிலவுப்    பெண்   வருகிறாள் -நமக்கு
 நிறைந்த    இன்பம்   தருகிறாள்
 உலவும்    காற்றே    வாகனம் -அவள்
 உலகம்    சுற்றும்    மோகனம்

 கால்கள்    இன்றியே    நடக்கிறாள் -என்றும்
 கல்லையும்    முள்ளையும்   கடக்கிறாள்
 ஆட்கள்    இல்லாதக்    காட்டினிலும் -இன்னும்
 அழகாய்    ஆட்சி    செய்கிறாள்

 பிள்ளைகளுக்கு    இரவில்    துணையாவாள் -நாம்
 பேசும்    தமிழிலும்    வாழ்கிறாள்
 கள்ளம்    அறியாத    நல்லவளாய் -நீள
 கடலினைத்    தாண்டியும்    செல்கிறாள்

 வானத்து    வெளியில்    வசிக்கிறாள் எங்கும்
 வசந்தத்தை    அள்ளியே    தருகிறாள்
 மோனத்    தவத்து    முனிவரிடையே -மாய
 மோகனப்    புன்னகை    புரிகிறாள்

 கவிஞர்கள்    வாக்கினில்    குடி புகுந்தாள் --நல்ல
 காவிய    ஓவியப்    பொருளானாள்
 புவியை    மறந்திடும்    காதலர்க்கு -செல்ல
 புன்னகைத்     தூதுகள்    செய்கிறாள்

 பௌர்ணமி    நாளில்    பரவசமாய் -இங்கு
 பகலில்    மட்டும்    தெரியாமல்
 உலகினில்    வாழ்வது    நிலவல்லவா -அதனை
 உள்ளத்தில்    நினைப்பது    சுகமல்லவா 

காதல் சின்னம் 277.

மாலை    வந்தானடி -தோழி
 மயக்கம்    தந்தானடி
 சோலை    புகுந்தானடி -நானும்
 சொக்கிக்    கிடந்தேனடி

 வாரியே     அணைத்தானடி -ஏனோ
 வளைந்து    கொடுத்தேனடி
 கூறிடத்    தெரியவில்லை -அந்த
 குமரன்    செய்த லீலை

 கன்னம்    சிவப்பானது -இரு
 கண்கள்    வெளுப்பானது
 சின்னம்    உருவானது -எனது
 ஜீவன்      பறி போனது

 மயக்கம்    தலையேருது -அவனையே
 மணக்கும்    நிலையானது
 தயக்கம்    பறந்தோடுது -மீண்டும்
 தழுவிட    நினைவாகுது

 உள்ளம்    கொதிப்பானது -இந்த
 ஊரே    வெறுப்பானது
 வெல்லம்    கசப்பானது -அடியே
 வேம்பும்    இனிப்பானது

 இளமை    அழகானது -பெற்ற
 இன்பம்    சுகமானது
 ஏக்கம்    பெரிதானது -அவனை
 எண்ணித்    தடுமாறுது 

அடிமை 276.

காதல்    அரங்கேறுமா -என்
 கனவு    நிறைவேறுமா
 மோதல்    உருவாகுமா -வந்த
 மோகம்    தலைக்கேறுமா

 ஒன்று    இரண்டாகுமா -இந்த
 உறவே    துண்டாகுமா
 என்று    மணமாகுமோ -அந்த
 இயற்கை    சதி செய்யுமா

 கண்கள்    எனைப்  பார்க்குமா -வரும்
 காலம்    சரியாகுமா
 எண்ணம்    இனிப்பாகுமா -உனது
 இதயம்        கனிவாகுமா

 எனக்குத்    துணை நீயடி -நாளும்
 ஏங்கிக்    கிடந்தேனடி
 பிணக்கு    வரலாமோடி -எனது
 பித்தம்    தெளியாதோடி

 இறக்கம்    வரவில்லையோ -ஏனோ
 என்னை    நினைவில்லையோ
 உறக்கம்    மறந்தேனடி -கொண்ட
 உடமை    துறந்தேனடி

 இளமைத்    துடிப்பில்லையா  -உனக்கு
 எண்ணம்    தெளிவில்லையா
 பழகிட    மனமில்லையா -காதல்
 பருவ       உணர்வில்லையா

 வாழ்ந்திட    வழி காட்டடி -நீ
 வற்றாதப்     பொய்கையடி
 ஆண்டிட    வருவாயடி -நானுனது
 அடிமை    தெரியாதோடி

செவ்வாய், 15 ஜூலை, 2014

கொல்லி மலைத் தேன் 275

விண்ணும்    முகிலும் -சேர்ந்து
 விளையாடல்    போலே
 உன்னோடு    நானும் -அன்பால்
 உறவாட    வேண்டும்

 கண்ணே உன்    மடிசாய்ந்து -தினம்
 கதைகள்    கேட்க வேண்டும்
 காணாத    உலகம் -இனிமேல்
 கண்டாக    வேண்டும்

 மின்னாமல்   முழங்காமல் -உடன்
 வருகின்ற    மழை போல்
 பொன்மேனி    உன்னுடலில் -நானும்
 புகுந்தாக    வேண்டும்

 அலையோடு    அலையாக-அதில்
 வாழும்    மீன்போல்
 கலையோடு    காதலில் -நாம்
 கலந்தாக    வேண்டும்

 பாலோடு    சுவையாக -நல்ல
 பழங்களின்     இனிப்பாக
 சேலாடும்    விழியாளே -உன்னை
 சேர்ந்திட    வேண்டும்

 பகலுக்குள்    இரவாகி -நாம்
 பாசத்தில்    உருவாகி
 புதுவாழ்வு    கண்டிட -இன்றே
 புறப்பட    வேண்டும்

 இனியென்ன    சொல்ல -இங்கே
 எவருண்டு    வெல்ல
 கோபமென்ன    மானே -நீ எனக்கு
 கொல்லி மலைத்   தேனே   

எரிமலை 274.

உலகாளப்    பொதுநீதி -இங்கு
 உருவாக    வேண்டும்
 உள்ளவர்    அனைவரும் -இனி
 சமமாக     வேண்டும்

 களைஎடுத்த     பயிராக -நல்ல
 கருணையின்   வடிவாக
 நிலையினைத்   தேடு -அதில்
 நிம்மதியை     நாடு

 சண்டைகள்    எதற்கு -தூய
 சமத்துவத்தின்    இடையே
 அண்டை நாட்டவரோடு -என்றும்
 அமைதியுடன்    வாழ்க

 கங்கையும்    காவிரியும் -உடனே
 கலந்தாக    வேண்டும்
 காசியும்    ராமேஸ்வரமும் -நமது
 கலைத் தாயின்    தூண்கள்

 ஒளிவெள்ளம் சேர்க்கவே -இன்று
 உண்மையிலே    நாமும்
 அனல் புனல்   திட்டங்கள் -விரைந்து
 அமைத்தாக    வேண்டும்

 கல்விக்கு    முதலிடம் -அதில்
 கன்னியர்க்கு    சரியிடம்
 உள்ளபடி    வாய்ப்புகள் -நாமும்
 உடன்தருதல்    வேண்டும்

 ஏழைக்கு    வேலை -அவர்
 இருப்பதற்கு     வீடு
 இனி தர    வேண்டும் -இல்லையேல்
 எரிமலை     வெடிக்கும்

 கண் விழித்துப்     பார்த்தேன் -அடடா
 கனவென்று    அறிந்தேன்
 பண்பு நிறைப்    பெரியீர் -வீண்
 பகற்கனவு     தவறோ  

கோபாலன் 273.

மலர்கள்   அழைத்தன    மகிழ்வாலே -நானும்
 மயங்கியே   சென்றேன்   நறு மணத்தாலே
 இதயம்   கனிந்தது      எதனாலே -அதை
 எப்படிச்    சொல்வேன்   மொழியாலே

 கண்ணன்    பிறந்தான்    சிறையினிலே -அவன்
 கம்சனைக்  கொன்றான்    ஒருநாளில்
 உலகினைக்   காத்திட   வதம்  செய்தான் -அந்த
 உத்தமன்   சொல்வழி    நடப்போமே

 ஏழையின்    நெஞ்சத்தில்   இருக்கின்றான் -நமக்கு
 இன்பத்தை    அள்ளியே    தருகின்றான்
 ராதையின்   மனதில்   வசிக்கின்றான் -உலகில்
 நால்வகை   வேதமாய்    தெரிகின்றான்

 நினைந்து   நினைந்து   தொழுதாலே -என்றும்
 நித்தமும்   வருவான்   நம் இல்லத்திலே
 கன்னியர்   மானத்தின்    காப்பாளன் -அந்த
 கண்ணனின்    மறு பெயர்     கோபாலன்

 திருநாள்    வருவது    அவனாலே -என்
 தேகம்    துடிப்பது   உணர்வாலே
 வரும்நாள்   வாசல்    வழிபார்ப்பேன் -அவன்
 வந்ததும்    என்னுடன்    இணை சேர்ப்பேன்

 வெள்ளம்    வழியும்   என் வீட்டினிலே -ஏனோ
 விடியும்    பொழுதும்     கூட்டினிலே
 உள்ளம்    சிலிர்க்குமே   பாட்டினிலே -கண்ணன்
 உறவினைச்   சொன்னேன்    ஏட்டினிலே 

உயிரே 272.

உன்னை நினைத்ததென்ன -அன்பே
 உயிரில்    கலந்ததென்ன
 இன்னும்  நினைவில்லையோ -அது
 இளமைக்  காணவில்லையோ

 பொன்னில்   பிறந்தவளே -வாசப்
 பூவாய்    மலர்ந்தவளே
 கண்ணில்   நிறைந்தவளே -என்
 கருத்தைக்  கவர்ந்தவளே

 உள்ளம்   தெளிவில்லையோ -காதல்
 உணர்ச்சி  வரவில்லையோ
 சொல்லத்   துடிக்குதடி -அந்த
 சுகத்தை   நினைக்குதடி

 சோலை    நடுவினிலே -உன்னை
 சுற்றிலும்   தேடுகிறேன்
 பாலை    நிலமானேன் --என்னை
 பார்த்திட   வரவில்லையே

 நாளும்    பறக்குதடி -மண
 நாளினி    வருமோடி
 பாழும்    கவலைகளால் -நெஞ்சம்
 பாகென    உருகுதடி

 சிக்கித்    தவிக்கின்றேன் -தனிமை
 சிறையினில்  இருக்கின்றேன்
 வெட்கித்   துடிக்கின்றேன் --இந்த
 வேதனை   தீருமோடி

 வாழ்ந்திட   வரமளிப்பாய் -காதல்
 வளர்த்திட   முடிவெடுப்பாய்
 ஏங்கிடும்   நிலையானேன் -நீ
 இன்றேனும்   வருவாயோ 

ஞாயிறு, 13 ஜூலை, 2014

தோணி 271

இளமாலைப்     பொழுது -நல்
 எழில் கொஞ்சும்    உருவில்
 கலைமானைப்    போன்றாள் -என்
 கண்களில்    தெரிந்தாள்

 ஊரென்ன     என்றேன் -அவள்
 உறவென்று   சொன்னாள்
 பேரென்ன     என்றேன் -அவளோ -
 பெம்மானே    என்றாள்

 கண்ணாலே    அளந்தாள் -காதல்
  பயிர்        வளர்த்தாள்
 எந்நாளும்     மனதில் -புதிய
 இடமொன்று   பிடித்தாள்

 பொன்னான     மேனி -பூவில்
 வரும்       தேனீ
 என்னாசைத்    தோணி -இன்பம்
 பொங்கும்    கேணி

 சலசலக்கும்     ஓடை -அவளோடு
 சதிராடி      நடக்கும்
 வெலவெலத்துப்    போனேன் -நானோ
 வெறியனும்     ஆனேன்

 மணந்தால்     அவளையே மணப்பேன் -பெரும்
 மகிழ்வினிலே    திளைப்பேன்
 தினம்தோறும்    துதிப்பேன் -இதழ்
  தேனையள்ளிக்     குடிப்பேன்

 கலைவண்ண    மேடை -அவள்
 காமம்  நிறைப்     பேழை
 சிலைபோன்ற     உருவம் -அதில்
 சிந்துகின்ற     பருவம்

 விழிவீச்சில்     கொன்றாள் -காதல்
  விரகத்தை     வளர்த்தாள்
 பழிதீர்க்க    வந்தாள் -என்னைப்
 பஞ்சாக     துவைத்தாள்

 புனலாக     வந்தாள் -என்னை
 புலன்மாற்றிப்     போட்டாள்
 தணலாகி     வெந்தேன் -இதய
 தாகத்தில்     நொந்தேன்

 காதலிலே    விழுந்தேன் -அவள்
 கண்ணசைவில்     எழுந்தேன்
 ஆதலினால்    உலகீர் -முடிவில்
  அழகியினை     மணந்தேன் 

சனி, 12 ஜூலை, 2014

நீரோடை 270.

கண்ணாளன்    வருவார் -காதல்
 கண்களால்      பார்ப்பேன்
 இதமாக      அணைப்பார் -நான்
 என்னையே   கொடுப்பேன்


  கூந்தல்     கலைந்தோடும் -இதழ்
 கோவைப்   பழமாகும்
 கனிவாக   அவர்நெஞ்சில் -என்
 கைவிரல்கள்    கோலமிடும்

 நெற்றியின்   மத்தியிலே -சிறிய
 நீரோடை    தோன்றும்
 தெப்பலாய்   தேகமும் -ஒரு
 சிற்றாறு    ஆகும்

 இளமையின்   கரைகளை - எங்கள்
 ஈருடல்    தொடுமே
 ஒன்றிலே   ஒன்றென -புது
 உல்லாசம்   பெறுமே

 நிலவென்னும்    பெண்ணாளோ -ஏனோ
 நில்லாமல்    ஒளிவாள்
  சில்லெனும்  பூங்காற்றில் -இள
 மேனியோ    சிலிர்க்கும்

 மின்னாமல்    முழங்காமல் -இன்ப
 மழை அங்கே    பொழியும்
 சொல்லாமல்   கொள்ளாமல் -அந்த
 இரவுப்    பொழுதும் விடியும்

உலகநாயகி 269.

உலகாளும்      உமையவளே -என்றும்
 உன்பாதம்     பணிந்திடுவோம்
 கலிகால    நேரமம்மா -சற்று
 கண்திறந்து   பார்த்திடுவாய்

  பலநூல்கள்   பணிந்தேத்தும் -தினம்
 பக்தகோடி  கைகூப்பும்
 நிலமாளும்  தேவியம்மா - நாங்கள்
 நினதருளைப்   பாடுகிறோம்

 ஆதியிலே    வந்தவள் நீ -எங்கள்
  ஆஸ்தான   நாயகியே
 ஜோதியாய்   எரிபவளே -வரும்
 தொல்லைகளைத்   தீர்ப்பவளே

 ஆர்ப்பரித்து   நீஎழுந்தால் -உள்ள
 அண்டமெல்லாம்  கிடுகிடுக்கும்
 போர்ப்படைகள்    மிரண்டோடும் -வானில்
 மின்னல் மழை   வந்துவிடும்

 சக்தியாய்   நின்றவளே -சிவ
 சங்கரியே   திரிசூலி
 புத்திதர     வேண்டுகிறோம் -இந்த
 புவனத்து   ஈஸ்வரியே

 சித்தர்கள்   கூட்டம் -உன்னை
 சிரம் சாய்த்து   வணங்குமம்மா
 உத்தமியே   உலகாளும் நாயகியே --இங்கு
 உன்னையன்றி   காவலில்லை 

காவடி 268.

எனையாளும்   பெருமானே   ஈசா -உலகில்
 எளியோரைக்   காக்கின்ற    நேசா
 வினைதீர்க்க   வேலோடு  வருவாய் -அடியார்
 வேண்டுகின்ற   வரமெல்லாம்  தருவாய்

 தினைவள்ளி   மனம்கொண்ட   திருவே -கொடிய
 தீயோரை   அழிக்கும்    பெரு உருவே
 உனையன்றி  எனக்கேது  துணையே -இந்த
 உலகிலே   உனக்காரோ   இணையே

 தமிழென்றால்   நீதானே    ஐயா --உமது
 தாளடி   சுகம்  நல்கும்   மெய்யாய்
 அமிழ்தாகும்   அழகாகும்   முருகா -நல்
 அழகான    மயிலேறி   வருவாய்

 பழத்தினாலே  பழனியிலே   நின்றாய் -அன்று
 பகைவர்களைப்   போரினிலே   வென்றாய்
 குணமென்னும்   குன்றேறி சென்றாய் -என்
 குணவாளா   மணவாளா    குருநாதா

 இருமாதர்   புடைசூழ   வருக -உனது
 ஈராறு   கைகள்   எனைக்   காக்க  வருக
 திருமாலின்   மருகா   தேவாதி   தேவா -தேனான
 தமிழில்   தினம்  பாடி   மகிழ்வேன்

 காவடிகள்   ஆடுமுந்தன்   வாசல் -கந்தனே
 உந்தனுக்கு   தினமாறு   பூசை
 சேவடியைக்   காணவரும்   கூட்டம் -வேலன்
 கருணையினால்   மயில்கள்  போடும்   ஆட்டம் 

பார்த்தசாரதி 267.

நினைந்தவர்   நெஞ்சினில்   நீயிருப்பாய் -கண்ணா
 நித்தமும்    தொழுதோர்   சுகம்   பெறுவார்
 வாழ்விலே   வரம் தரும்   வானமுதே -உன்னை
 வணங்கிடும்   அடியார்   நலம் பெறுவார்

 பிருந்தாவனத்தில்   ஆடித்  திரிந்த   பெருமானே -உமது
 பெருமையை    சொல்லுதல்   பெரும் பயனே
 மறந்தவர்    எவ்விதம்    இதம்   பெறுவார் -நிதம்
 மதித்தவர்   என்றுமே   பலம்   அடைவார்

 சத்திய நெறி   காத்திட   வந்தவன்  நீ -அன்று
 சமரிலே   கொடியவரைக்  கொன்றவன் நீ
 உத்தமி  தேவகியின்   புத்திரன் நீ -ஏழு
 உலகத்தை   ஆளும்   உத்தமன் நீ

 கம்சனை  வதைத்து  மக்களை   காத்ததும்  நீ -கொடிய
 காளிங்கன்   சிரசினில்  ஆடியதும்  நீ
 நம்பியவருக்கு   அருளும்   நாரணன்  நீ -பாரத
 நாட்டினர்   மனதில்   நம்பிக்கை  நீ

 கோபியர்   மனம்   கொஞ்சும்   கோபாலா --செய்த
 குறும்புகள்   சொல்லுதல்  உலகினில்   திருநாளே
 பாவிகள்   அழிந்திட   மண்ணில்   வந்தாய் -நல்
 பார்த்தனுக்கு  பாரதப்   போரிலே   சாரதி  நீ

 தினமுனைப்   பணிவேன்  திருமாலே -தூய
 திருவடி   நினைவேன்  பெருமாளே
 கனவிலும்  மறவேன்   வருநாளே -தெய்வ
 கருணையைப்  பாடுவேன்  தமிழாலே 

வெள்ளி, 11 ஜூலை, 2014

மஞ்சள் 266.

இளையநிலா    அழைக்கிறது -அது
 எதனை  நினைத்து    சிரிக்கிறது
 உலவும்  தென்றல்    விளிக்கிறதா -இல்லை
 உள்ளம் கொள்ளை    போகிறதா

 அலைகள்    ஆடும்    ஆட்டமென்ன -நீரை
  அள்ளி தெளிக்கும்     கோலமென்ன
 வலையில்   வீழா    மீன்கள் -தினம்
 வந்து    மீண்டும்    போவதென்ன

 வளையில்    வசிக்கும்    நண்டுகளும் -மணலில்
 வாணம்    பறித்து    செல்வதென்ன
 தழுவி    செல்லும்    மேகங்களும் -இங்கு
 தாலாட்டும்    கோலம்   என்னவோ

 கண்ணைக்    கவரும்    பறவைகள் -உயரே
 காற்றில்    வட்டம்    இடுவதென்ன
 எண்ண    எண்ண   இன்பமடா -இது
 இறைவன்    செய்யும்   வேலையடா

  கட்டு மரப்    படகில்    சென்று -தம்
  கஷ்ட நிலையைக்  கருத்தில்    கொண்டு
 ஆட்டம்  போடும்   அலைகள் மேலே -துணிந்து
 அலைந்து   பயணம்  செய்யும்  தோழர்களே

 தாகம்    தீர்க்க   தண்ணீர்   இல்லை -நீங்கள்
 தவறி   வீழ்ந்தால்   உயிரே   இல்லை
 வானம்   உமக்கு   கூரையாகும் -வரும்
 மின்னல்   மழை   நண்பராகும்

 வெண்ணிலவை   சாட்சி    வைத்து -பிறர்க்கு
 வேண்டும்   மீனை    அள்ளிடுவீர்
 கண்ணீர்   மழையில்   நனையும் -உங்கள்
 கண்ணகியர்   மஞ்சள்   வாழ்க

செவ்வாய், 8 ஜூலை, 2014

தளபதி 265.

கந்தா    முருகா    கதிர்வேலா -என்றும்
 கருணை  புரியும்    அருள் சீலா
 சிந்தையில்  வைத்துனை   துதிக்கின்றேன் -இந்த
 சிறுவனைக்    காத்துநீ   அருள்வாயே

 மலையில்    எறிநீயும்    குடிபுகுந்தாய் -தமிழ்
 மக்கள்    மனதிலே    வலம்வருவாய்
 அலைசூழ்     செந்தூர்    கடலோரம் -எம்
 அழகுத்     தெய்வம்    அமர்ந்தாயே

 தேவர்     படையின்    தளபதிநீ -அன்று
 திக்கெட்டும்   வென்றிட்ட    தேவனுமநீ
 காவல்    புரியும்    காவலன் நீ -நம்
 கன்னியர்    வணங்கும்    கற்பகம்நீ

 தமிழர்க்கு    என்றும்    தலைவன் நீ -கொடிய
 தருக்கரை    அழித்திடும்    தர்மமும்  நீ
 அமிழ்தினும்     இனிய  நல அழகனும் நீ -எங்கள்
 அன்புக் கணபதி      ஆசைத் தம்பியும்  நீ

 சங்கத்தமிழின்    சரித்திரம்    நீ -அன்று
 சரவணப்    பொய்கையில்     உதித்தவன் நீ
 வேடர்    குலத்தின்    வேந்தனும் நீ -வரும்
 வினைகளைத்    தீர்க்கும்    விமலனும் நீ



 தமிழெடுத்து    உந்தன்புகழ்    பாடுகிறேன் -உனது
 தன்மையைப்    போற்றியே    ஆடுகிறேன்
 வாழ்வினில்    நலம்பல    தந்திடுக -எனக்கு
 வற்றாத    செல்வங்கள்    வழங்கிடுக 

அன்னம் 264.

பூவார் சோலை     நடுவில் -நான்
 பொன்மேனி     கண்டேன்
 சேலார்     விழியால் -ஏனோ
 சிறையில்     அடைத்தாள்

 கண்ணால்     அழைத்தாள் -புது
 கவிதை     படைத்தாள்
 பின்னால்     சென்றேன் -அதனால்
 பேச்சை     இழந்தேன்

 இரவில்     வதைத்தாள் -வீணே
 எள்ளியே  நகைத்தாள்
 உறவை     மறந்தேன் -வாழும்
 ஊரைத்     துறந்தேன்

 அன்னம்     வெறுத்தேன் -மன
 அமைதி     தொலைத்தேன்
 எண்ணம்     கலைத்தாள் -என்
 இதயம்         குடைந்தாள்

 பின்னல்     சடையால் -எனைப்
 பின்னி     இழுத்தாள்
 கன்னம்     வைத்தாள் -உள்ளம்
 கவர்ந்து     சென்றாள்

 வாழ்வு     வருமா -அவளால்
 வருத்தம்     மிகுமோ
 வேலன்     கருணை -எனக்கு
 வெற்றி     தருமோ 

கருணை 263.

கடலிலே     முத்திருக்கு -நமக்கு
 காசு  சேர     வழியிருக்கு
 உடலிலே     வலுவிருக்கு செல்லையா
 உழைப்பதிலே   சுகமிருக்கு சொல்லையா

 வரவிலே     செலவிருக்கு -மண்ணில்
 வாழவே      தொழிலிருக்கு
 உறவிலே     மகிழ்விருக்கு  என்னய்யா
 ஒற்றுமையாய்    வாழணுமே  கன்னையா

 இன்பங்களும்   துன்பங்களும் -உலகில்
 ஏற்றங்களும்    பள்ளம்களும்
 இருப்பது     சகஜம்தானே  முத்தையா
 ஏற்றிடணும்    நமக்கது    சொத்தையா

 நாளை     நல்ல நாளென்று -நீயும்
 நம்பிக்கையில்    காத்திருப்பாய்
 வேளைவந்தால்    விடியுமடா  வீரய்யா
 வெற்றியுண்டு     கவலைஏனோ  கூறையா

 அழுதவர்      சிரிப்பதுண்டு -என்றும்
 அமைதியிலே     இன்பமுண்டு
 விழுதுகளாய்     மாறிவிடு  வேலையா
 வேண்டும்புகழ்  சேர்ந்திடுமே   சோலையா

 பெண்கள் வாழ     பாடுபடு -பிறரை
 பெருமையாலே  வென்றுவிடு
 கண்களாக      மதித்துவிடு  கந்தையா
 கருணையோடு     வாழ்ந்து விடு  கருப்பையா  

திங்கள், 7 ஜூலை, 2014

மலர்ச்சி 262.

இளமை      பயிரானது -புது
 ஏக்கம்    உருவானது
 நிலமை    சூடானது -காதல்
 நினைவோ    சுகமானது

 அன்பு    வரவானது -அதில்
 ஆசை    விரிவானது
 முன்பு    இல்லாதது -ஏனோ
 மோகம்    தலையேருது

 எண்ணம்    பறந்தோடுது -அந்த
 இன்பம்    நினைவாகுது
 கன்னம்    சிவப்பாகுது -காவல்
 கரைகள்    தடைபோடுது

 நாணம்    தடுமாறுது -நாளும்
 துணை    தேடுது
 கானம்    கசப்பாகுது -நெஞ்சில்
 கவலை    குடிஏறுது

 இனிப்பும்    பிடிக்காதது -என்
 எடையும்    குறைவாகுது
 தூக்கம்    பறிபோனது -படும்
 துயரம்    பெரிதானது

 நாட்கள்    கடந்தோடுது -என்று
 நன்மை    வரப்போகுது
 காலம்     கனிவாகுமோ -உண்மை
 காதல்    மணம் சேர்க்குமோ

 ஒன்று       இரண்டாகுமோ -வந்த
 உவகை    நிறைவேறுமோ
 தின்று    பசியாறுமோ -எனது
 தேவன்    வரக்கூடுமோ

கிளர்ச்சி 261.

அன்னை    என்றாள் -அதில்
 அன்பு    என்றேன்
 தென்னை    என்றாள் -வரும்
 தாகம்    என்றேன்

 கண்கள்    என்றாள்  -உடனே
 காதல்     என்றேன்
 கன்னம்    என்றாள் -கடித்து
 தின்பேன்    என்றேன்

 வா வா    என்றேன் -நான்
 வருவேனோ    என்றாள்
 தா  தா      என்றேன் -ஏனோ
 தள்ளிப்    போனாள்

 இன்னும்    என்றேன் -அது
 எதற்கு    என்றாள்
 முன்னால்    சென்றாள் -நானும்
 முதுகைத்    தொட்டேன்

 கெட்டேன்    என்றாள் -மன
 கிளர்ச்சி     என்றேன்
 தொட்டேன்    என்றேன் -இனி
 தொல்லை    என்றாள்

 பண்பு    என்றாள் -நான்
 பாசம்    என்றேன்
 வம்பு    என்றாள் -நெருங்கி
 வாடி    என்றேன்

 நெஞ்சில்    நினைப்பேன் -அவளை
 நித்தம்    அணைப்பேன்
 கொஞ்சும்    பொழுதில் -எனக்கு
 கூடும்     இளமை

 நாணம்    என்றாள் -அது
 நமக்கேன்    என்றேன்
 வேண்டும்    என்றேன் -சற்று
 விலகிச்    சென்றாள்

 அமுதே    என்றேன் -அன்று
 அருகில்    வந்தாள்
 தெம்பும்    தந்தாள் -வாழ்வில்
 தேனாய்    இனிப்பாள்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

கடவுள் 260.

நல்லவர்கள்    தோற்பதில்லை
 நஞ்சுமனம்     வெல்வதில்லை
 நாணயமும்   நம்பிக்கையும்
 நாட்டினர்க்கு  கண்களடா

 கடவுள்  வந்தார்  இங்கே  கடவுள்  வந்தார் -நம்
 கவலைகளைக்  தீர்த்திடவே  கடவுள் வந்தார்

 வாடிநின்ற  பேர்களுக்கும்  வாழ்வு  தந்தார் -தனது
 வற்றாத    கருணைகளை  வாரித் தந்தார்
 கோடி செல்வம்   அத்தனையும்  கடவுள்  தந்தார் -தெரு
 கோவிலிலே  தெய்வமாக  அவரே   வந்தார்

 மனிதர்க்கு  நன்மை செய்ய  கடவுள்  வந்தார் -இந்த
 மண்ணிலே  பொன்னைத்  தர கடவுள்  வந்தார்
 கனிந்த மரம்  போலத்தானே  கடவுள்  வந்தார் -நல்ல
 காருண்ய   மூர்த்தியாக  கடவுள்  வந்தார்

 பெண் குலத்தைப்  போற்றிடவே  கடவுள்  வந்தார் -அவர்கள்
 பேதமையை  நீக்கிடவே  கடவுள்  வந்தார்
 உண்மைகளைப்  புரியவைக்க  கடவுள் வந்தார் -தூய
 உள்ளத்திலே   குடியிருக்க  கடவுள் வந்தார்

 காலம உள்ள  வரையிலும்  கடவுள் வருவார் -இளம்
 கன்னியரைக்  காத்து நிற்க  கடவுள்  வருவார்
 சீலமதைக்  கற்றுத்தர கடவுள் வருவார் -மக்கள்
 சிந்தையிலே  கொலுவிருக்க  கடவுள்  வருவார்

 வாழுகின்ற   ஜீவன்களில்  கடவுள்  உண்டு -என்றும்
 வற்றாத   நீர்நிலையில்   கடவுள்   உண்டு
 தேடுகின்ற   காலங்களில்  கடவுள்  உண்டு -நமது
 தேமதுரத்   தமிழினிலும்   கடவுள்  உண்டு

பனிக்காலம் 259.

கொட்டுகின்ற    பனியிலே -
 உதிருதம்மா      இலைகளே
 தெருவிலே      பனிமேடை -பார்க்கும்
 திசையெலாம்   பனியின்வாடை

 வெள்ளைநிறப்   பனியினை -அந்த
 விண்ணிலிருந்து  பெய்வதார்
 கண்கவரும்    சாலைகள் -இங்கே
 கடினப்     பாறையானதேன்

 உடல்முழுதும்   உடைகளே -அவர்
 உள்ளத்தில்    பல தடைகளே
 படர்ந்துவரும்    பனியினால் -நமக்கும்
 பாதிஉறக்கம்   போகுதே

 சில்லுக் காற்று   வீசுதே -பனியில்
 சிற்றாறு      ஓடுதே
 தொல்லையெலாம்   கூடுதே -இங்கு
 தொடர்கின்ற   பனியினால்

 இரவுநேரம்    நீளுது -அந்த
 இயற்கை செய்யும்  சூதிது
 விரல்கள்  தாளம் போடுது -ஏனோ
 வேகமின்னும்  குறையுது

 வாடைக் காற்றில்  தேகமும் -இன்னும்
 வற்றல் தோற்றம்   பெற்றது
 கோடை   என்று வருகுமோ -மீண்டும்
 குதூகலம்   பொங்குமோ

சனி, 5 ஜூலை, 2014

இரவில் 258.

இரவுப்    பெண்ணாள்    அழைக்கிறாள் -அவள்
 எதனை    எண்ணியோ   சிரிக்கிறாள்
 உறவெனும்  தொடரை  எழுதிட வா -இல்லை
 உயிர்கள்    அமைதி    பெற்றிடவா

 நீல வானில்  தெரியுது   நிலவுமுகம் -அதனை
 நிதமும்    ரசிக்கையில்   என்னசுகம்
 கோலக்    குயில் தரும்  குரலோசை இடையே
 கொஞ்சிடும்   வஞ்சியர்   கைவளையோசை

 தொட்டிலில்    குழந்தையின்   மழலைமொழி அங்கு
 தொடர்ந்து    சிரிப்பது    செல்லக்கிளி
 விட்டதைப்   பிடிக்கும்   வேங்கைவழி -காதல்
 விரகத்தை    தீர்த்திட    என்னவழி

 வேட்டைக்கு   கிளம்பின   விலங்குகளே -அதற்கு
 விடியும் வரை   கிடைப்பது   வெற்றிகளே
 பட்டையைக்    கிளப்புது   குறட்டை ஒலி -நாமும்
 பார்த்து    நடக்கணும்   போகும்வழி

 தேட்டையைப்    போடுது    திருட்டு முழி -பின்பு
 திரும்பக்    கிடைக்குமே    உருட்டுக்கழி
 பாட்டில்    வருவது    இன்ப ஒலி -நன்கு
 படித்தவர்    செல்வது    அன்புவழி

 ஏட்டில்    தெரிவது    இதயஒலி -நாளும்
 ஏக்கப்    பெருமூச்சு     இளமை வழி
 காட்டில்    மிருகங்கள்    தனிமைவழி எனது
 காதல்     வென்றிட    என்னவழி 

கணைகள் 257.

இரவெனும்    நிலையில் -எழில்
 வண்ண    நிலவில்
 உறவிற்கு    வழியுமுண்டோ -காதல்
 உணர்வுக்கு   தடையுமுண்டோ

 கடற்கரைக்    காற்றில் -புதிய
 கற்பனைத்    தேரில்
 கலந்திடத்    தோன்றிடுமோ -அதில்
 கற்பனை    மீறிடுமோ

 கொட்டும்    மழையினில் -உடல்
 கொதித்திடும்    வேளையில்
 தொட்டுச்    சுவைத்திடுமோ -அது
 தொடர்கதை    ஆகிடுமோ

 கட்டி    அணைக்கையில் -நெஞ்சில்
 கணைகள்    பாய்கையில்
 வெட்டி    இழுத்திடுமோ -அவை
 வேதனை    தீர்த்திடுமோ

 விரகத்தின்    விளிம்பில் -உடல்
 வியர்வை    மழையில்
 விருப்பங்கள்     மலர்ந்திடுமோ -சுகம்
 விரும்பியே    வந்திடுமோ

 இருந்ததைக்    கொடுப்பதால் -இங்கு
 ஏற்படும்    வெற்றிடம்
 சுரந்தங்கே    ஊறிடுமோ -வரும்
 சொர்க்கத்தில்    மாறிடுமோ

 ஏற்றிடும்    தீபங்கள் -நன்கு
 இயங்கிடும்   பாவங்கள்
 ஊற்றினைத்    தோற்றிடுமோ -அன்பு
 உள்ளத்தை    தேற்றிடுமோ

 மாறிடும்    வேளையில் - நம்
 மனமெனும்    சோலையில்
 மயில் வந்து    ஆடிடுமோ -அங்கே
 மகிழ்ச்சியும்    கூடிடுமோ

 கூடிடும்    நிலையில் -இன்பம்
 கொஞ்சிடும்    கலையில்
 மேவிடும்    புதுசுகமே -அது
 தேகத்தில்   ஒளிந்திடுமே 

வரம் 256.

கனவினில்    கண்டது    யாவும் -இனி
 எனக்கு    கைவரக்   கூடுமோ
 காதலி   நான்வாழக்   கையைக்  கொடு -உனது
 கருணை   மழையிலே   நனையவிடு

 அன்னமே  எனக்கொரு   ஆணையிடு -இந்த
 அடிமைக்கு  அனுதினம்  வேலைகொடு
 முன்னமே  யாசித்தேன்  பிச்சையிடு -இல்லையேல்
 மோகத்தை  இன்றைக்கே  தீர்த்துவிடு

 கரிய   கூந்தலால்   கட்டிவிடு -எனது
 கற்பனைக்  குதிரையைத்  தட்டிக்  கொடு
 அறிந்திட   முடியாத  ஆழக் கடல் -நான்
 ஆயிரம்   எழுதினேன்   அன்புமடல்

 சிரித்து    எந்தனை ச்  சிறையிலிட்டாய் -இந்த
 சிறுவனை   ஏனின்னும்  அலையவிட்டாய்
 உரித்த    பழச்சுளை   நீயல்லவா -நல்
 உயிரில்   கலப்பவன்   நானல்லவா

 வெறுத்து  ஒதுக்குதல்   நீதியல்ல -நானும்
 வெம்பித்  தவிக்கிற   சாதியல்ல
 பொறுத்து  உனக்காகப்  பார்க்கிறேன் -உன்னை
 புரிந்தவன்   அதனாலே   கேட்கிறேன்

 மஞ்சம்  அழைக்குது   மறுக்காதே -பிரிய
 மணவாளன்  துடிக்கிறேன்  மிரளாதே
 நெஞ்சில்  எனக்கொரு  இடமளிப்பாய் -நாளும்
 நினைத்து  வாழ்ந்திட   வரமளிப்பாய் 

தோழி 255.

இரவுப்   பொழுதின்   மயக்கத்திலே -ஒரு
 இனிய   கனவு   கண்டேன்   தோழி
 இளமைத்  துடிப்பில்   எதொநினைவில் -அடி
 என்ன  சொல்வேன்   தோழி

 காதல்  கொண்ட   மனதில் -புதிய
 கவலை கொண்டேன்  தோழி
 கண்கள்  திறந்தால்  அவரின்  பிடியில் -பெரிதும்
 கலக்கம்   வராதோ   தோழி

 மடியினில்  கிடத்தி  உறவுகள்  சொல்லி -எனை
 மயங்க   வைத்தார்   தோழி
 மங்கையின்  மனதில்  மங்கல  மானார் -நானும்
 மனம்   கலந்தேன்   தோழி

 எனைமறந்தே   நான் அவர்  வசமானேன் -அன்று
 இது    முறையோ   தோழி
 என்றும் பிரியேன் என்றார்  ஏனோ  எனைப்  பிரிந்தார் தோழி -தினம்
 என்னையே  வருந்த  விட்டார்  தோழி

 வாசலில் நின்றே  வருவாரென்று  வழிபார்த்தேன்  தோழி -ஆனால்
 வரவேயில்லை  என்பதனாலே  வருந்துகிறேன்  தோழி
 இன்பமேன்பது  எனக்கேயில்லை  என்பது  ஏன் தோழி -இந்த
 ஏழைக்கு  காதல் இல்லையென்றால் என்னடி  சரிநீதி

 பெண்ணாய்  பிறப்பது  இங்கு  பெரும்பிழையோ  தோழி -ஒரு
 பேதையை   வதைப்பது  பெரும் புகழோ  தோழி
 பெண்களை  மதிப்பது  நல்ல  கண்ணியம் தான் தோழி -அன்று
 கண்ணன்  தனது  கடமையைச் செய்ததும் கருணையினால்  தோழி 

வெள்ளி, 4 ஜூலை, 2014

உயிரே 254.

நானாய்    இருந்தேன் 
 நலமே    புரிந்தேன் 
 தேனாய்  வந்தாய் 
 தினமும்  தொழுதேன் 
 
 கண்ணால்  அழைத்தேன் 
 கடிதம்    கொடுத்தேன் 
 பின்னால்  அலைந்தேன் 
 பொறுமை  இழந்தேன் 
 
 வருவாய்   என்றேன் 
 வளமை  குறைந்தேன் 
 தருவாய்  சொன்னேன் 
 தனியாய்  நின்றேன் 
 
 என்னைக்  கொன்றாய் 
 எதற்கோ  மறுத்தாய் 
 மானே   என்றேன் 
 மயக்கம்  அடைந்தேன் 
 
 இணைவோம்  என்றேன் 
 எனக்கில்லை  அறிந்தேன் 
 உறவாய்    கொண்டேன் 
 உரிமை   துறந்தேன் 
 
 இரவா    பகலா 
 இதுவா  எதுவா 
 உறவா   பிரிவா 
 உயிரே  சொல்லு 

வியாழன், 3 ஜூலை, 2014

துணிச்சல் 253.

வானில்    வருவது    ஒருநிளவு -நம்
 வாழ்விற்கு    தேவை   புதுநினைவு
 காணவே    சிரிப்பது    மலர்களே -அவை
 கற்றுக்    கொடுப்பது   மலர்ச்சியே

 எல்லாம்    கொடுத்தவர்    இறைவனே -அதனை
 எண்ணியே  ஒருமுறை   பார்த்தோமா
 கல்லார்    கயவர்     இருந்தாலும் -அவர்க்கும்
 கண்ணியம்   என்பது   வேண்டாமோ

 கொள்ளை   அடிப்பது    நியாயமில்லை -சிலர்
 குழிகளைப்   பறிப்பது ம்   தேவையில்லை
 வெள்ளை    மனமே    வெற்றியடா -அதுவே
 வெற்றியைக்  குவிப்பதும்   உண்மையடா

 போகையில்   உன்னுடன்    வருவதென்ன -செய்த
 புண்ணிய    பாபச்    செயல்கலன்றோ
 தீமை      என்பதை   விலக்கிவிடு -அந்த
 தெய்வத்தை  மனதிலே   வசிக்கவிடு

 இருக்கும்வரையில்   வாய்விட்டு   சிரித்துவிடு -நெஞ்சில்
 இருக்கும்   தீயஎண்ணம்   எடுத்துவிடு
 பொறுமை  என்பது   நமக்காகும் -அதுவே
 பூமிக்கு    எந்நாளும்    நலமாகும்

 நாளும்    உழைத்து    வாழ்ந்துவிடு -உன்னை
 நம்பிய    மனிதர்க்கும்   வாழ்வு கொடு
 காலம்     அறிந்து    கனிந்து விடு -என்றும்
 கடவுள்    காப்பார்   துணிந்துவிடு 

தீபங்கள் நூறு 252.

வண்டுகள்    மலர்களை   நாடின -சுற்றி
 வசந்த       கீதங்கள்     பாடின
 உண்டென    அதிலுள்ள    தேனையே -மீண்டும்
 ஓடியே    வந்திடும்    நாளையே

காற்றினில்   செடிகள்    ஆடின -அவை
 காதல்    பாட்டினைப்    பாடின
 ஏற்றத்தில்   மாடுகள்   இறைத்தன -தண்ணீர்
 எல்லா    வயலிற்கும்   பாய்ந்தது

 சேற்றினில்   கால்கள்   அலைந்தன -கைகள்
 திறம்பட   நாற்றினை    நட்டன
 காற்றிற்கும்   கருணை   பிறந்தது -அது
 காலத்தில்   பெருமழை   பெய்தது

 கதிர்கள்    வளர்ந்திடத்   தொடங்கின -நம்
 கண்களில்   நெல்மணி   தெரிந்தன
 களையினை   எடுத்தனர்   காலத்தில் -நெல்
 கண்களைப்   பறித்தன    ஜாலத்தில்

 அறுவைப்     பணிகள்    ஆரம்பம் -களத்தில்
 அழகாய்   உதிர்ந்தன    நெல்மணிகளும்
 உழவர்    உழைப்பு   வெற்றியே -அவரை
 விரும்பி    நன்மைகள்   செய்குவோம்

 உணவு    கொடுப்பவர்   உழவர்கள் -நமது
 உயிரைக்   காப்பதும்   அவர்களே
 தினமும்   உழவரைப்   போற்றுவோம் -வீட்டிலே
 தீபங்கள்   நூற்றினை    ஏற்றுவோம்

புதன், 2 ஜூலை, 2014

கன்னிப்பருவம் 251.

வண்ணக்    கலவைகள்
 எண்ணக்    குவியல்கள்
 என்னை    இழுக்குதடி -மனம்
 எங்கோ     பறக்குதடி

 மின்னல்    ஒளியினில்
 மேகக்       குமுறலில்
 பின்னி     இழுக்குதடி -ஏனோ
 பித்தம்     பிடிக்குதடி

 சில்லெனும்    காற்றிலே
 சீதள        நிலவிலே
 மெல்ல   அணைக்குதடி -எனது
 மேனி     கொதிக்குதடி

 வெட்ட    வெளியினில்
 கட்டிப்     பிடித்துமே
 தொட்டிட  நினைக்குதடி -காதல்
 தோன்றி    அழைக்குதடி

 துணைவனை   வேண்டியே
 துடிக்குது    என்நெஞ்சம்
 கணைகளும்   பாய்ந்ததடி -மாறன்
 கைபட்டு      ஏறுதடி

 விம்மித்    தணிவதும்
 விரகம்    அடைவதும்
 கன்னிப்    பருவத்திலா -அன்றி
 களவி     மோகத்திலா

 ஒன்றுக்குள்   ஒன்றென
 உவகையில்   நன்றென
 அன்றைக்கே     சொல்லினரே -நாமும்
 அதன்வழி         வாழ்ந்திடுவோம்