சிலு சிலு காற்றில் சீதள நிலவில் --மனம்
தொல்லைகள் பெறவே தோகையே வந்தாய்
தள்ளியே போயினும் தாவியே இழுத்தாய் --நானும்
தஞ்சம் நீயென்றே தவறி விழுந்தேன்
கட்டியே அணைத்தாய் கனி இதழ் கொடுத்தாய் --பெட்டி
பாம்பாய் உன்பின்னால் அலைந்தேன்
விட்டுப் பிரிந்தாய் வேதனை கொடுத்தாய் --என்
விழிகளில் கண்ணீர் வினையின் பலனோ
சிதறிய என்மனம் சீர் பெற க் கூடுமோ --உனது
சிற்றிடை தன்னையும் என்மனம் விடுமோ
கற்பனைத் தேரினில் ககனம் செல்வோம் --எனது
காரிகை உன்னையே கடிமணம் செய்குவேன்
நாளும் பார்ப்பேன் நலமாய் முடிப்பேன் --இளம்
நங்கை உன்னுடன் நானும் இணைவேன்
வாழும் காலம் வளம்பெற வேண்டும் -எந்தன்
வனிதா மணியே என்றும் வற்றாத நதியே
பிள்ளைகள் அதிகம் பெற்றிடல் வேண்டும் --நம்
பின்னால் அவர்கள் சுற்றிட வேண்டும்
நல்லவை அனைத்தும் நாம் பெற வேண்டும் --அந்த
நாயகன் அருளால் நலமுடன் வாழ்வோம்
தொல்லைகள் பெறவே தோகையே வந்தாய்
தள்ளியே போயினும் தாவியே இழுத்தாய் --நானும்
தஞ்சம் நீயென்றே தவறி விழுந்தேன்
கட்டியே அணைத்தாய் கனி இதழ் கொடுத்தாய் --பெட்டி
பாம்பாய் உன்பின்னால் அலைந்தேன்
விட்டுப் பிரிந்தாய் வேதனை கொடுத்தாய் --என்
விழிகளில் கண்ணீர் வினையின் பலனோ
சிதறிய என்மனம் சீர் பெற க் கூடுமோ --உனது
சிற்றிடை தன்னையும் என்மனம் விடுமோ
கற்பனைத் தேரினில் ககனம் செல்வோம் --எனது
காரிகை உன்னையே கடிமணம் செய்குவேன்
நாளும் பார்ப்பேன் நலமாய் முடிப்பேன் --இளம்
நங்கை உன்னுடன் நானும் இணைவேன்
வாழும் காலம் வளம்பெற வேண்டும் -எந்தன்
வனிதா மணியே என்றும் வற்றாத நதியே
பிள்ளைகள் அதிகம் பெற்றிடல் வேண்டும் --நம்
பின்னால் அவர்கள் சுற்றிட வேண்டும்
நல்லவை அனைத்தும் நாம் பெற வேண்டும் --அந்த
நாயகன் அருளால் நலமுடன் வாழ்வோம்