ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஸ்ரீ ரங்க நாதர் 622

அன்பர்கள்     மனதினை   ஆள்பவன்    ரங்கனம்மா    --அவனை
அனுதினம்   நினைத்தாலே   ஆனந்தம்   கோடியம்மா
துன்பம்     நீக்க  வரும்    தூய த்    தொண்டனம்மா    --நமக்கு
துணையாக    வந்துதவும்     நல்ல   துணைவனும்    அவனேயம்மா

கால்களைக்    கண்டாலே   நம் கண்கள்    சொரியுமம்மா   --அவனது
கண்விழி   பட்டாலே     கவலைகள்   பறக்குமம்மா
நால் வகை    வேதமும்    நாயகன்   உருவமம்மா    ---உலகில்
நம்பிய      பேர்களுக்கு     நற்கதி      அருள்வானம்மா

பாம்பணை    மெத்தையில்    படுப்பது     பரந்தாமன்    ---அவனை
பணிந்தவர்   இல்லம்      பாரினில்    ஜொலிக்குமம்மா
நம்பிய    ஏழைக்கும்     நல்வழி     கிடைக்குமம்மா    --உலக
நாயகன்    அருளாலே        நானிலம்     செழிக்குமம்மா

திருமால்     மார்பினில்    தேவியவள்     வாசம்    ---அவளை
தினமும்     துதித்தால்     சேர்ந்திடும்    திரவியமே
உருகாத    மனமெல்லாம்   உருகிடும்    நிச்சயமே    --அன்புடன்
உளமாற      நினைத்தாலோ    வரும்    உயர்வுகள்    சாத்தியமே

ஏகாதசி    நாளில்    நம்   இறைவனை     தொழுதிடுவோம்  ---இங்கு
இகபர      சுகங்களை    இன்றேனும்      பெற்றிடுவோம்
போகாத    வழியினில்   போகுதல்   தீதாகும்    --செய்யும்
புண்ணியம்    ஒன்றேதான்   நமக்கு   புனர்ஜென்மம்     அளிக்குமம்மா

பூலோக   வைகுந்தமான   திருவரங்கத்தில்   வைகுந்த   ஏகாதசி  வைபவத்தை
சிறப்பிக்க     அடியேனால்   இயற்றப்பட்டது ) 

வியாழன், 20 டிசம்பர், 2018

கண்கள் 621

நெஞ்சினில்    காதலி     நீயா    இல்லை  --உன்னை
நினைக்க    இன்பம்   வருமே   கொள்ளை
அஞ்சுதல்    உனக்கு    ஆகுமோ    கண்ணே ---நாம்
அன்பிலே   இணைந்து    வாழுவோம்    பெண்ணே

கண்களில்   கனவுகள்   உன்னால்    கண்டேன்   --உனது
கட்டழகெனும்    அமுதினை   நானே    உண்டேன்
பெண்களின்   பெருமை   நீயே    அன்றோ   --நான்
பித்தனாய்   திரிவது    முறையோ   நன்றோ

என்ன   சொல்லி    உந்தனை  அழைப்பேன்   --என்
இருவிழி    கண்ணீரில்   உன்னையும்    நனைப்பேன்
கன்னல்    தமிழும்    கசந்திடும்   நிலையே   --வாழும்
காலம்   முழுதும்   கைவிடல்      சரியோ

இரவும்   பகலும்   இனிமேல்     ஏது   ---வரும்
இன்பமோ   துன்பமோ   என்னுள்   வேண்டேன்
உறவினை    நினைத்து    உலகில்    வாழ்ந்தேன்  --இங்கு
உன்மனம்      வெறுத்திடில்    எங்கே    போவேன்

கால்கள்    செல்லும்    வழியில்    நடப்பேன்   --உனது
காதலை      புனிதமாய்     என்னுள்    நினைப்பேன்
நாளினைக்    கடந்து   நல்வழி   சேர்வேன்    --எந்தன்
நாயகி   உன்னையே     நானே   மணப்பேன்  

தென்றல் 620

தென்றலெனும்      தேரேறி      வந்தாள்    -எனக்கு
தேனான      விருந்தினை   தந்தாள்
பெண்ணில்    அவளே    தலைவி    --அவளை
பிரியாமல்     இருப்பேனோ    பழகி

கண்களில்    வருவது   புயல்     --அவளது
கைகளில்   காமனது   வில்
பொன்னெனும்    ஆடையை    அணிந்தாள்  --என்னை
புழுவாக்கி     துடித்திட    நினைந்தாள்

ஈரெட்டு    வயதான    இளமை   --தினம்
எடுத்தாலும்   புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்    உள்ளது   கடலின்  ஆழம்

இட்டாலும்   நோகுமவள்     பாதம்    --காதல்
எல்லோர்க்கும்    உரைப்பாளே    வேதம்
தொட்டாலும்    மனக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே   தொடர்வேன்    நேசம்

இரவிலும்   பகலிலும்    நினைவு   -தினம்
ஏன்தானோ   காணுகிறேன்    பல கனவு
உறவுக்கு    அவள்தான்    மருந்து   --நானும்
உலகினில்   இருப்பேனோ    மறந்து 

புதன், 19 டிசம்பர், 2018

தென்றலெனும்         தேரேறி       வந்தாள்    --எனக்கு
தேனான         விருந்தினை       தந்தாள்
பெண்ணில்      அவளே      தலைவி      --அவளை
பிரியாமல்        இருப்பேனே     பழகி

கண்களில்     வருவது     புயல்     ---அவளது
கைகளில்       காமனது      வில்
பொன்னெனும்      ஆடையை      அணிந்தாள்   --என்னை
புழுவாக்கித்   துடித்திட      நினைந்தாள்

ஈரெட்டு        வயதான     இளமை    ---தினம்
எடுத்தாலும்    புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்     உள்ளது      கடலின் ஆழம்

இட்டாலும்    நோகுமவள்      பாதம்    --காதல்
எல்லார்க்கும்     உரைப்பாளே     புதுவேதம்
தொட்டாலும்     மணக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே    தொடர்வேனே    நேசம்

இரவிலும்    பகலிலும்    அவள் நினைவு    --தினம்
எனக்குள்      வருமே      பலகனவு
உறவுக்கு     அவள்தானே    மருந்து    --நானும்
உலகில்    இருப்பேனோ     மறந்து 

திங்கள், 10 டிசம்பர், 2018

வெற்றி 619

நிலவால்        முகம்         மலர்ந்தேன்   --காதல்
நினைவால்    உயிர்     வளர்த்தேன்
தலைவா     என்னிடம்    வருவாயா   --என்னை
தழுவி       சுகமும்     தருவாயா

மனதில்       என்றும்     கள்ளமில்லை   --எனது
மையல்       உனக்குத்   தொல்லையில்லை
இனிமை    வாழ்வினில்     கிடைத்திடுமா     --உள்ள
இளமை    வளமாய்    நிலைத்திடுமா

கண்களில்    காதல்    மயக்கமய்யா   --என்னை
கலந்திட      இன்னுமா   தயக்கமய்யா
பெண்ணின்    உலகம்    பெரிதல்லவோ  --நான்
பிழைகள்     செய்தால்    பொறுத்திடய்யா

இரவு       முழுதும்       தூக்கமில்லை   --என்
இதயம்      நிறைய   ஏக்கமுண்டு
உறவு    பெருகிட    மனமில்லையோ    --என்
உயிரும்    உனக்கு     பெரிதில்லையோ

காலங்கள்    போயினும்    காத்திருப்பேன்   --தூய
காதலை    நெஞ்சினில்    பூத்திருப்பேன்
வேலவன்    நினைத்தால்    வெற்றியுண்டு    --நீயும்
விரும்பி     மணந்தால்       சுற்றமுண்டு 

மன்னன் 618

கந்தன்     பெயரைச்      சொல்லு     ---வந்த
கவலையை       விட்டுத்     தள்ளு
எந்த       வினையும்     மாறும்    --அவன்
வரங்கள்      நம்மைச்     சேரும்

மலையினில்      குடியாய்      இருப்பான்   ---ஏழை
மனசில்         நிலையாய்        சிரிப்பான்
கலைகளில்    சிறந்த     மன்னன்     --தொந்தி
கணபதி      இவனுக்கு    அண்ணன்

தமிழும்       முருகனால்    வாழும்    --எதிர்க்கும்
தருக்கர்     படைகள்       மாளும்
அமிழ்தம்      போலவே    இனிப்பான    --தனது
அடியவர்      சுகம்பெற     நினைப்பான்

மனைவிகள்      இருவர்      உண்டு    ---அவனது
மனமோ         பிறருக்குத்      தொண்டு
துணையாய்     ஓடியே     வருவான்   ---என்றும்
சொக்கத்       தங்கமாய்    ஜொலிப்பான்

வாழும்       காலம்     அறிவாய்   --முருக
வள்ளல்      தன்னையே     நினைவாய்
வீழும்        கண்ணீர்      துடைப்பாய்   --உலகில்
வெற்றி      வீரனாய்      நடப்பாய் 

வெள்ளி, 30 நவம்பர், 2018

கனிமொழி 617

நெஞ்சில்      வருவது        ஒரு நினைவு     --உன்னை
நினைக்க     நினைக்க     பல கனவு
மஞ்சம்        அழைக்குது     மலர்விழி     --எந்தன்
மனதில்      உள்ளவ்ளநீ     கனிமொழி

தென்றலைத்     தூதென     அனுப்புகிறேன்     --என்னிடம்
திரும்பி       வந்திட     விரும்புகிறேன்
அன்றில்      பறவைகளாய்    ஆகலாம்   --நாம்
அவனி        முழுவதும்       ஆளலாம்

காற்றினில்       ஏறியே     வந்துவிடு   --உனது
காதலை         எனக்கே    தந்து விடு
போற்றிடும்      பாடல்     உனக்கல்லவா    --தினம்
புகழ்ந்திடும்     பெருமை    எனக்கல்லவா

இரவும்       பகலும்      ஒன்றாகும்   --நம்
இளமை     அங்கெ     விருந்தாகும்
உறவுக்குள்     உறவு    என்றாகும் --இதனை
உணர்ந்து    நடப்பது     நன்றாகும்

காலம்    முழுதும்     வாழ்ந்திருப்போம்   --உயர்
காதலை     என்றும்        வளர்த்திருப்போம்
கோல       முருகன்       துணையுமுண்டு    --என்
கோமளமே     வந்தால்  தான்    வாழ்வுமுண்டு

வியாழன், 22 நவம்பர், 2018

உதயநிலவு 616

நினைவில்    நிலையாய்    இருப்பவள்   --என்
நெஞ்சில்     துணையாய்    வசிப்பவள்
கனவினில்    தினமும்    கலப்பவள்    -அந்த
கன்னி     மயிலின்     பேரென்னவோ

முல்லை   மலராய்    சிரிப்பவன்   --காதல்
மோகத்தை   அள்ளிக்   கொடுப்பவள்
பள்ளி      சுகத்தை    தருபவள்    --அந்த
பைங்கிளி     என்பவள்   பேரென்னவோ

மீனைப் போல்      கண்கள்    கொண்டவள்   --பலரை
மின்சிடும்      அழகினைக்    கண்டவள்
தேனைப் போல்    இனிமை    ஆனவள்   --அன்பு
தேவதை    என்பவள்     பேரென்னவோ

நிழலினைப்    போலவே    தொடர்பவள்   --நெஞ்சம்
நிறைந்திட    என்மேல்     படர்பவள்
கழலினைக்   கால்களில்    அணிபவள்   --அற்புத
காரிகை     என்பவள்    பேரென்னவோ

கவிதைக்குப்    பொருளாய்    வருபவள்   --எனக்கு
காதலை   அள்ளியே    தருபவள் 
உதயநிலைவாய்     வானில்   ஒளிர்பவள்    --இந்த
உத்தமி      என்பவள்     பேரென்னவோ 

காதல் பரிசு 615

நின்னைத்      தேடி      அலைந்தேன்    --அந்த
நிலவைக்      கேட்டும்    பார்த்தேன்
என்னைத்     தேடியே     வாராய்    --நாம்
இருப்போம்     என்றுமே    ஜோராய்

பின்னல்      சடையில்      விழுந்தேன்    --உன்
பிரிவால்     உடலும்     மெலிந்தேன்
கன்னல்     தமிழும்     கசக்கும்    --எனக்கு
உனது        காதலே     இனிக்கும்

பட்டுப்      பாதங்கள்     வலிக்கும்   --இந்த
பதுமை     அங்கங்கள்     ஜொலிக்கும்
சிட்டுப்      போலவே     பறப்பாள்    --பலர்
ஜீவனைப்     பற்றியே     இழுப்பாள்

நினைத்தால்    இனித்திடும்     வயது   --யாரும்
நெருங்கத்    துடிக்கும்     மனது
குணத்தில்    அவளோ    தங்கம்    --அங்கெ
கொய்யா     கனிகளோ   மின்னும்

என்ன       சொல்லி       எழுத  --என்று
அவளிடம்    நானும்      பழக
கன்னி       என்னிடம்    வரலாம்    --அன்பு
காதல்     பரிசினைத்      தரலாம் 

ஞாயிறு, 11 நவம்பர், 2018

அழகன் 614

வருவாய்     முருகா     மயில்  மீதினிலே   --நல் 
வரமே       அருள்வாய்     இகவாழ்வினிலே 
குருவாய்     அமர்ந்தாய்   சுவாமிமலையில்   --திரு 
குமரா     மறவேன்      எனது    வாழவில் 

அலைசூழ்     செந்தூர்     அழகிய      வேலா     --ஏழை 
அகமே    நிறைவாய்      அன்பெனும்    பாலா 
கலைசூழ்     குகனே     கதிர்வேலன்    நீயே   --நினது 
கருணை    பொழிந்து      காத்திடு     உலகையே 

தமிலெனும்      மொழியில்      தலைமகன்       நீதான்   --உனது 
தாளடி      பணிந்தால்     சகலமும்      ஜெயம்தான் 
அமிழ்தினும்     இனித்திடும்     ஆறுமுக   பாலா    --தேம்பும் 
அடியவர்    நலம்பெற      அருளிடும்      சீலா 

பழத்தினால்    அன்று    பழனியில்     நின்றாய்    --சிவ
பழமாய்க்    கனிந்தே     பக்தரைக்    காப்பாய் 
களைத்திடும்    மாந்தர்     களித்திட    வைப்பாய்    --மண்ணில் 
காலம்     முழுதும்    கருணையில்    ஜொலிப்பாய் 

தமிழினில்      பாடி    தலைவனைப்      பணிவோம்   --அவன் 
தாளடி      தொழுது   இந்த    தரணியில்    உயர்வோம் 
அழகா     முருகா     எங்கள்    அருகினில்     வா     வா   --உன்னை 
அனுதினம்       தொழுவோம்      அன்பினைத்       தா    தா  

 

வியாழன், 1 நவம்பர், 2018

தீபாவளி 613

தீபங்கள்         வாழ்த்தும்        தீபாவளி    --உலகில்
தீமைகள்       மறையும்      தீபாவளி
மேகங்கள்     சூழ்ந்திடும்     தீபாவளி      --வானில்
மின்னல்      இடி மழை      தீபாவளி

நரகனை      அழித்த  நாள்     தீபாவளி    --நாட்டில்
நல்லறம்      செழிக்கும்     தீபாவளி
உறவுகள்    பேருக்கும்     தீபாவளி    --சிறுவர்
உள்ளத்தில்    மகிழ்ச்சி     தீபாவளி

இனிப்புகள்    பெறுவது     தீபாவளி    --உழைக்கும்
ஏழைக்கும்     உண்டு     தீபாவளி
நினைத்தால்     நிறைவது     தீபாவளி    --எங்கும்
நிம்மதி      மலர்வது     தீபாவளி

புத்தாடை     அணிவது     தீபாவளி    --மனதில்
பூரிப்பை      வளர்ப்பது    தீபாவளி
சத்தியம்    நிலைத்திடும்    தீபாவளி    --எங்கும்
சாந்தி        நிலவிடும்        தீபாவளி

செல்வங்கள்      பெருக்கிடும்     தீபாவளி    --மக்கள்
சிறப்புடன்       வாழ்ந்திடத்      தீபாவளி
உள்ளத்தில்    மகிழ்ச்சியே   தீபாவளி      --இந்த
உலகுக்கு     புதுமை     தீபாவளி 

வெள்ளி, 19 அக்டோபர், 2018

அன்னை 612

 அமிழ்தினும்        இனியவள்       அன்னை     --உலகில்
 ஆளாக்கி        விட்டாள்        என்னை
 கமழ்ந்திடும்     மலரவள்      வாசம்     --அவள்
 கண்களில்    தெரிவது      பாசம்

உயிரைப்    பணயமாய்     வைப்பாள்    --தன்
உதிரமே       பாலாய்க்      கொடுப்பாள்
பயிர்களைப்       போலவே     வளர்ப்பாள்   ==நல்ல
பழக்க       வழக்கங்கள்    சொல்வாள்

நன்றியை     நினைத்திட    வைப்பாள்    --என்றும்
நயவஞ்சகம்       சூதினை     வெறுப்பாள்
அன்பினை    சொல்லிக்    கொடுப்பாள்     --இங்கு
அனைவரும்    ஒன்றென    நினைப்பாள்

இரவும்     பகலுமாய்    உழைத்தாள்    --என்னை
இமையென    வாழ்வினில்     காத்தாள்
உறவுக்கு  அவள்தான்       எல்லை    --அவளை
உள்ளத்தில்    மறப்பதும்      இல்லை

அன்னையை      நினைக்கையில்    இன்பம்    --என்றும்
அருகில்        வராது       துன்பம்
எண்ணி   எண்ணியே     ரசிப்பேன்    --இனி
எந்நாளும்    அவளையே    துதிப்பேன்

சரஸ்வதி 611

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருப்பாள்   --வீணை
கூட்டும்         நல்லிசையாய்        ஒளிர்வாள்
கள்ளமற்ற       வெள்ளை       மனது   ---அவள்
கவிஞர்கள்       நாவினில்       உறையும்      அமுது

பொங்கும்       தமிழாய்       புனலெடுப்பாள்   --இங்கு
பொருநை       வைகை     பெருக்காய்      வருவாள்
கங்கை       காவிரி         கற்பகக்     கனியே     --இந்த
காசினி      வாழ்ந்திடக்      கைத்தலம்      கொடுப்பாள்

எல்லாக்      கலைகளின்   இருப்பிடம்      அவளே  --ஏழை
குடிசையில்     நுழைபவள்      இவள்  தான்
நல்லோர்     வாழ்ந்திட      நலமே      அருள்வாள்   --உலகில்
நன்னெறி      தழைத்திட      இந்த நாயகி     துணையே

கொற்றம்    கொடிபடை       குரலுக்கு     அடிமை     --குளிர்
முகம்        கண்டால்       விலகிடும்     மடமை
கற்ற புலவர்     தாயின்      கருணையால்    வாழ்வார்    --இவள்
காலடி      பணிந்தால்    மலையென     உயர்வார்

தாயைப்     போற்றி     தமிழினில்     பாடு    --அவள்
தயவினில்     தானே      சிறந்திடும்   நாடு
ஆயகலைகள்    அளிப்பவள்     அன்னை    --அகம்
மகிழ்ந்தாலே     அடையலாம்     பொன்னை

சனி, 13 அக்டோபர், 2018

புள்ளிமான் 610

வெள்ளி      வண்ணத்     தாரகை    --அவள்
விழிகள்       வானின்     கருநீலம்
புள்ளி       மானென      வந்தாள்   --என்
புலன்களை     மாற்றிட    வைத்தாள்

பொன்னால்     வடித்த    உடல்   --அவளது
பொற்பாதம்       பூவென்னும்     மடல்
கண்ணால்      என்னை    வளைத்தாள்   --ஒரு
கணத்தில்     என்னையே     மறந்தேன்

சிரித்தால்    என்ஜீவன்     பறிபோகுமே   --முகம்
சீதள        நிலவென       ஆகுமே
விரித்தாள்     கடையை     எதிரிலே   --நான்
விழுந்தேன்     காதல்    வலையிலே

காலம்      ஓடுது       மெல்ல    --எனது
காதலை    எப்படிச்     சொல்ல
ஆழம்    விழுதுகள்      போலவே   --எங்கும்
ஆசைகள்     ஊறுது     உள்ளே

சொல்லில்    சொல்லிட     நினைத்தேன்    --அந்த
சொர்க்கத்தை    எண்ணியே     துடித்தேன்
பள்ளியில்    புதுப் பாடம்    படிப்பேன்    --தினம்
பணிவிடை      செய்தே     மகிழ்வேன்  

சனி, 6 அக்டோபர், 2018

கற்பகவல்லி 609

 கலையெழில்    வடிவாக    காட்சி    தருபவளே    --இங்கு
 கற்பக  வல்லி   எம்மைக்    காத்திட     வருபவளே
 நிலையாக    வாழ்வதற்கு     நீயருள்    புரிவாயே    --உனை
 நினைந்தவர்    நலம்பெற    நிம்மதி    அருள்வாயே

 கைகளில்    மலரெடுத்து     காசினி    ஆள்பவளே   --தமிழ்
 கவிஞர்கள்    நாவினிலே    கனிவாய்    அமர்ந்தவளே
 மயிலைப்     பதிவாழும்    மங்கலத்    தாயல்லவோ   --ஏழைகள்
 மகிழ்ந்திட    வரமருளும்      மாதாவும்    நீயல்லவோ

 நெற்றியிலே    குங்குமம்       நிறைவான    புன்னகையில்   --இங்கு
 பற்றிவந்த     துயரமெல்லாம்    பறந்தோடிப்    போகுமம்மா
 வெற்றி       வெற்றியென்றே     விண்ணதிற    முழங்குதம்மா   --வடி
 வேலனை     ஈன்றவளே     விமலனின்       சோதரியே

 அலை பாயும்     கடல்நடுவே    உனதண்ணனின்    குடியிருப்பு   --எம்
 அன்னையே    உயிர்களுக்கு    எந்நாளும்     நீ காப்பு
 நிலையான    வாழ்வளிக்க     நேரினில்      வருபவளே   --என்றும்
 நித்தமும்    தொழுதிடுவோம்     நிர்மலன்    தேவியே

ஏழை நெஞ்சில்   இன்பம்    நிலைத்திட     வேண்டும்   --எங்கள்
 ஈஸ்வரி      மனது    வைத்தால்    இன்பங்கள்  தேடிவரும்
 நாளினைக்    கழிப்பதற்கு    நாயகி    துணையிரும்மா   --நாங்கள்
 நன்றியைப்     பொங்கல்   வைத்து   நல்லபடி    காட்டிடுவோம்  

மாதா 608

 கனிந்திடும்     கண்களில்     கருணை     உண்டு   --உந்தன்
 கமலமலர்       பாதங்கள்   கதிதனை     யளிக்கும்
 நினைந்தவர்     நெஞ்சினில்     நீயே     வருவாய்   --நினை
 நித்தமும்     தொழுதால்       பலன்களும்    மிகுமே

 அழைத்திடும்    குரலுக்கு      ஆதரவு      தருவாய்  --உன்
 அடியவர்     நலமுற      அனைத்தும்      அளிப்பாய்
 பிழைகளை    மறந்திடும்    பேரருள்     நீயே    --உமை
பின்தொடர     வாழ்வில்      பெருகிடும்     பலமே

 எங்கும்      எதிலும்      எல்லாம்       இருப்பாய்   --உன்னால்
 இகபர     சுகங்கள்       என்றும்    கிடைக்கும்
 பொங்கும்     நிலவாய்    பூமியைக்    காப்பாய்  --தினம்
 போற்றிப்     பாடுவோம்       பொற்றாமரைச்    செல்வியே

 இயங்கிடும்    பொருள்களில்    இருப்பவள்     நீயே   --ஏழையர்
 துன்பங்கள்       போக்கிடும்       தாயே
 மயங்கிடும்    நிலையினை    மாற்றிட    வருவாய்  --எங்கள்
 மாதா      தேவி    நீயும்     மனம்    கனிவாயே

போற்றித்    தொழுவதால்    புண்ணியம்    அடைவோம்    --என்றும்
 புவனம்    காத்திடும்      புனித     ஜோதியே
ஏற்றம்      பெற்றிட    இனிதே     அருள்வாய்   ==எம்
ஈஸ்வரித்    தாயே    இறைஞசினோம்      உம்மையே  

சனி, 29 செப்டம்பர், 2018

நிறை 607

 சொன்னாலும்      புரிவது     இல்லை   --பின்
 சுயமாய்      தெரிவதும்      இல்லை
 மன்னாதி     மன்னனாய்   மமதையில்   --அவர்
 மகிழ்ந்து      தினம்    பேசிடுவார்

கண்ணாலே     உடல்      அளப்பா ர்   --உடன்
 கட்டிலுக்கு       வலை     விரிப்பார்
பெண்ணாகப்   பிறந்த    தெய்வம் ---வீணில்
பேதலித்து      அலைய    வைப்பார்

எந்நாளும்        துயர்    தருவார்   --இங்கு
ஏழைக்கும்      கொடுமை   செய்வார்
மண்ணாசை     கொண்டு    தினம்    --எனோ
மக்களை      வதை    புரிவார்

கோடானு       கோடி   யென்பார்    --எளியோர்
குடிசைக்கும்      தீயை     வைப்பார்
கேடுகள்     தேடி         செல்வார்    --பிறரைக்
கெடுத்திட      வழிகள்   சொல்வார்

வாழப்     பிறந்த    நம்மை --இவர்கள்
வாட்டுதல்      என்ன    முறை
ஆளவே     பிறந்தவர்    நாமென்ன   --இன்றே
ஆர்த்தெழுதல்  அன்றோ     நல்ல   நிறை  

சனி, 22 செப்டம்பர், 2018

உவகை 606

கனவில்      வந்த     காதல்    --என்
வாழ்வில்     கைகூடி     வருமா
கண்ணாளன்    மார்பில்    நானும்    --இனி
கலந்தாடும்     நேரம்     பெறுமா

இரவினில்     அவரை    நினைப்பேன்   --என்
இதழ்களால்     முத்திரை     பதிப்பேன்
உறவினைப்     பெரிதாய்    மதிப்பேன்    --அவர்
உயிரினில்      ஒன்றாய்    கலப்பேன்

இருப்பதை    யள்ளிக்    கொடுப்பேன்    --அவர்
இளமையை     பார்த்து    ரசிப்பேன்
தருவதை     வாங்கிக்    கொள்வேன்    --ஒருநாள்
தாயாகும்    பேறினைப்    பெறுவேன்

தொட்டிலில்    பிள்ளை     வருவான்    --அந்த
சுகத்தினில்    என்னையே    மறப்பேன்
சிட்டுப் போல்   எங்கிலும்    பறப்பேன்    --காதல்
சிந்தனையில்    நாளினைக்    கழிப்பேன்

நல்லதை    சொல்லிக்    கொடுப்பேன்   --என்
நாயகன்     மனதில்    வசிப்பேன்
உள்ளது    போதும்    என்பேன்    --இந்த
உவகையில்    உலகினை    மறப்பேன் 

திங்கள், 17 செப்டம்பர், 2018

மனவாசல் 605

 கருணை     முகமோ    ஜொலிக்கும்   --அவள்
 கண்கள்     அருளினை    கொழிக்கும்
 அரிதினும்   அரிதாம்     அவளே --நாம்
அனுகினால்     ஆயிரம்      பலன்களே

 ஏழை       வீட்டிலும்      இருப்பாள்  --அவர்
 இன்னலைத்     தீர்த்தே    சிரிப்பாள்
 கோழையும்    வீரனாய்    ஆவான்   --அவன்
 குடும்பம்      நல்வழி      செல்லும்

 கண்ணீர்     மழையினில்    நனைப்பாய்    --நல்ல
 கதி பெற      அவளையே    நினைப்பாய்
 பன்னீர்    தெளித்துமே      பூசை    --அவள்
 பாதமலர்     மேல்தான்      ஆசை

 இரவும்      பகலாய்      மாறும்   --அவள்
 நினைத்தால்      எல்லாம்     சேரும்
 உறவினைப்    பெருக்கிட    வருவாள்   --நாம்
 உருப்பட     நேர்வழி       தருவாள்

 திருநாள்    இதுதான்     என்பேன்    --அம்மா
 திருவடி    பற்றியே    கிடப்பேன்
 வருவாள்   எந்தன்     மனவாசல்  --அதனால்
 வாழ்வினில்      இல்லையே     பூசல்  

சனி, 15 செப்டம்பர், 2018

வெற்றி 604

இழந்தது       போதும்    எழுந்திடு   --நீ
 இரவு    பகலாய்     உழைத்திடு
 பலம் பெறும்    உடலினை   அமைத்திடு   --அதில்
 பயனுள்ள    வழியினில்     சிறந்திடு

 செல்வங்கள்   நிறையவே    சேர்த்திடு    --அதை
 சேமிக்கும்   வழியினை    அறிந்திடு
 உள்ளத்தில்    உண்மையை    வளர்த்திடு   --என்றும்
 உத்தமன்    எனும் பெயர்     பெற்றிடு

 பிறரை    மதிக்கத்    தெரிந்திடு   --அது
 பெருமையை    தருமெனப்    புரிந்திடு
 மறந்தும்   பிறரினை    இகழாதே     --தினம்
 மனதில்    மகிழ்வினை ப்   பெருக்கிடு

எத்தனை    மனிதர்கள்    பிறந்தார்கள்   --முடிவில்
 எங்கோ    சென்று    மறைந்தார்கள்
 புத்தனை    உலகம்    நினைக்கிறதே --அவரை
 பொன்னென   போற்றித்   துதிக்கிறதே

நாளும்    நமக்கென    வாழ்ந்துவிடு    --உன்னை
 நம்பிய    பேருக்கும்     வாழ்வு கொடு
 வீழ்ந்திடும்    கண்ணீர்    துடைத்துவிடு   --நீயும்
 வெற்றி    வீரனாய்     விளங்கி விடு

vகணபதி 603

 உலகத்தின்     முதல்வன்    வருநாள்   --அந்த
 உத்தமத்    தலைவனின்    திருநாள்
 களங்கமில்லா   பிள்ளைக்கு   ஒருநாள்   --நம்மைக்
 காக்கும்      கணபதி    வரும்    நாள்

 பிரணவப்    பொருளாய்    வந்தார்  --நமக்கு
 பேரருள்     தினமும்    புரிவார்
 கருணையின்    உருவமும்    அவரே  --அவர்
 காலடி     தொழுவது      பலமே

 தம்பிக்கு    திருமணம்     முடித்தார்   --பெற்ற
 தாய்க்கும்     காவலாய்    நின்றார்
 நம்பிய    அடியவர்    காக்க     --இங்கு
 தும்பிக்கையால்     துன்பங்கள்    தீர்ப்பார்

 நினைத்தவர்    மனதில்   நிற்பார்  --தன்
 நீல விழியால்    நம்மையும்    அழைப்பார்
 களைய்க்கின்ற   பொழுதிலும்    காப்பார்   --வரும்
 கவலைகள்    மறந்திடச்      செய்வார்

 அவ்வைக்கு      அபயம்     தந்தார்   --அவரை
 அகிலமும்     வணங்கிட    வைத்தார்
 கொழுக்கட்டை    படைத்தால்    புசிப்பார்    --என்றும்
 குழந்தைகள்    நடுவினில்    இருப்பார்  

சனி, 1 செப்டம்பர், 2018

நாடு 602

 நாடு           என்பது          நாடு   --அதில்
 நல்லது     செய்திடப்    பாரு
 வீடு         என்பது     வீடு   --அங்கு
 விரும்பி    அன்பிலே    வாழு

 கூடு         என்பது     கூடு   --என்றும்
 கொள்கை    வழியினைத்    தேடு
 ஏடு         என்பது     ஏடு    --உள்ளே
 இருக்கும்    அறிவைப்     பாரு

 கண்ணில்     கருணை  வேண்டும்  --நெஞ்சில்
 கள்ளம்    மறைய    வேண்டும்
 பெண்ணில்    பொறுமை   வேண்டும்  --நன்றாய்
 பேசவும்       திறமை  தான்    தூண்டும்

 மனதில்    உறுதி      கொள்வாய்   --என்றும்
 மகிழ்வு      பொங்கிட     வேண்டும்
 குணத்தில்     சிறக்க    வேண்டும்   --உன்
 குடும்பம்       வாழ்ந்திட      வேண்டும்

 இருக்கும்       வாழ்வை     மதிப்பாய்   --நீ
இறைவன்   தன்னையே    துதிப்பாய்
 பெருமைகள்    பெற்றிட    வேண்டும்   --அன்பால்
பூமியை       ஆண்டிட      வேண்டும்





வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நல்ல நேரம் 601

அழுதவர்  சிரித்திடக்     காலம்   வரும்  --இவை
அனைத்திற்கும்   பதில்   சொல்லும்   நேரம்   வரும்
உழுதவர்   விடும்   கண்ணீர்   வயலில்   விழும்  --அது
உலகினை    மாற்றிடும்   புயலாய்   வரும்

எழுதிடும்   எழுத்துக்கள்   எங்கும்   வரும்   --அது
இயற்கையை   மீறியே   என்றும்   இருந்து   விடும்
தொழுதவர்   வாழ்வினில்   சுகமும்   வரும்   --இங்கு
தூய்மை   எண்ணங்கள்   நன்மை   தரும்

பழகிய      நாட்கள்   நன்றாய்    நினைவு   வரும்  --அவை
படிப்பினை   நமக்கு   நிறையத்    தரும்
அழகிய    குழந்தை    நம்    மனம்    கவரும்   --அது
ஆயிரம்    புன்னகை    யள்ளித்   தரும்

உலவிடும்    காற்று   பல்வகை   உயிர்   வளர்க்கும்  --அது
உன்னத    வாழ்விற்கு     ஊக்கம்    தரும்
கொலை   களவு   காமம்   பல   குடும்பம்   கெடும்   --இங்கு
குடும்பங்கள்   வீண்    சண்டையால்   நாளும்   கெடும்

கலைகளால்   மனதிற்கு   நல்ல    அமைதி    வரும்   --மனதில்
கற்பனை    கூடினால்   தமிழில்     பாட்டு   வரும்
நிலையினை    உணர்ந்திட    நல்ல  நேரம்   வரும்   --நீ
நினைத்தது      நடந்திடில்    நிம்மதி      வரும்  

ஸ்ரீ குருவாயி அம்மன் 600

 கன்னித்       தெய்வம்    நீயல்லவா   --உந்தன்
 கருணை    தன்னை     நான்   சொல்லவா
 என்னில்     இருப்பவள்    தாயல்லவா   --உன்னால்
 ஏற்றம்       பெற்றிடும்     சேயல்லவா

குலமதைக்    காத்திட    வந்தவளே   --எந்தை
 குருசாமி     தன்னையு ம்    ஈன்றவளே
 பலத்தை   யளித்திட     நீயிருப்பாய்  --உனது
 பக்கத்தில்    சேவகனாய்    நானிருப்பேன்

 குருநாதன்    சரவணன்   இருவர்   பிறந்தனரே  --அவர்கள்
 பெரும் புகழ்     பெற்றிட    நீயே    வளர்க்கின்றாய்
 குருபிரசாத்      ரியா        ஐஸ்வீ  எனும்   குழந்தையரும் --உந்தன்
 அருளாலே   நலமுடன்  என்றுமே    வாழ   வைப்பாய் 


கால       காலங்கள்       உள்ளவரை     ---உனது
கருவறை     ஏழைக்கும்   திறந்திருக்கும்
வேளை     வருகையில்   நீயும்    வெளிப்படுவாய்   --எங்குமுன்
வெற்றிக்கொடி    விண்ணிலே    நிறைந்திருக்கும்

உருவாய்    உயிராய்      உளதாய்  --எங்கள்
உணர்வாய்    உயர்வாய்    உள்ளவளே
குருவாயி    என்னும்   பெயர்    படைத்தாய்   --இந்த
குவலயம்      காத்திட    மண்ணில்    வடிவெடுத்தாய்

உருகிடும்   அன்பில்    உனை     நினைக்கும்  --எமது
மருமகள்கள்      மனைவி   வாழ்வில்   நலம்   சூழ்க
பெருகிடும்   வெள்ளம்   இங்கு   உயிர்    காக்க   --உனது
பேரருள்     ஒன்று தான்    இந்த     நிலம்    காக்கும் 

சிறுபிள்ளை 599

அறியாப்     பிள்ளை    தெரியாது   --அவளை
 அழகி     என்றிடில்    தவறேது
 வருவாள்    அந்திக்   கடையோரம்   --பலர்
 வாயினில்    உமிழ் நீர்   வழிந்தோடும்

 செதுக்கி   வைத்திட்ட    செங்கமலம்  --அவள்
 தேனுமினிய      வெள்ளை     மனம்
 ஒதுக்கி     வைத்திட்ட     ஊ ரினிலே  --தினம்
 உழைத்துப்   பிழைத்தாள்   வாழ்வினிலே

 கள்ளம்        கபடம்    அறியாதவள்  --அவளோ
 காதல்        என்ற  சொல்       தெரியாதவள்
 பள்ளம்      மேடுகள்    அறியாமலே   --இங்கு
 பம்பரம்       போலவே    சுற்றுபவள்

 கட்டிய        கதைகளைச்      சொல்வார்கள்  --அவளது
 கற்பிற்கு     களங்கமும்     செய்வார்கள்
 அற்புத        அழகி          அவளென்பேன்  --இனி
 அவளே    எனக்குத்       துணையென்பேன்

 கண்டால்    என்னிடம்   சொல்லுங்கள்   --இதனை
 கற்பனை     என்றால்      தள்ளுங்கள்
 பெண்ணாய்   அவளை    எண்ணாமல்   --சிறு
 பிள்ளை    என்றே     நான்   எண்ணுகிறேன்  

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கவிதை 598

கனவான      காதல்  --என்
கண்ணீரில்   வாழும்
கற்பனையாய்   உன்னை  ---நான் 
கல்யாணம்   செய்வேன்

துணையாக   வருவாய்  --என்றே
துடிப்புடன்   இருந்தேன்
கனவாகிப்   போனால்  --என்
 கண்ணே   என்ன  செய்வேன்

இரவானால்   கவலை  --எனக்கு
இதுதானே   வேலை
உறவுகள்   போனால்  --இங்கு
உயிர் வாழ் தல்   தவறே

வானத்தில்   பறப்பேன்  --உன்னை
வாரியே    அணைப்பேன்
கானங்கள்   கேட்டு   --தினம்
கண்ணீரில்   மிதப்பேன்

காலங்கள்   ஓடும்  --நல்ல
கவிதைகள்   வாழும்
கோலங்கள்   மாறும்   --மன
 குறையென்று    தீரும்  

வாழ்க 597

 கண்ணான    கண்ணே   --என்
 கண்ணீரின்   முன்னே
 பொன்னாக   வளர்ப்பேன்   --நீ
 புகழாக    வருவாய்

மின்னாமல்   முழங்கும்  --கரு
 மேகங்கள்   போல
 இன்னலத்   தாங்கும்  --நல்ல
 இடிதாங்கி   ஆனேன்

பாலோடு   சோறும்  --இங்கே
 உனக்கில்லை   கண்ணே
பசியாறக்   கஞ்சி யை  --நானும்
 பாசமாய்த்    தருவேன்

கற்றிட    வேண்டும்  --அதை
கவனமாய்   செய்வாய்
பெற்றாள்   நல்லதை  --இதை
பலபேர்   சொல்ல வேண்டும்

வேலையைத்   தேடு   --நீயும்
விரைவாகப்   படித்து
வேதனை   தீரும்   --எனது
விழிநீர்    நிற்கும்

'அன்பான   துணையை  --உன்
அறிவாலே    தேடு
பண்பான    குழந்தை  --அதன்
பலனாகக்   கிடைக்கும்

தாயின்   கனவினை   -நீயே
தளராமல்   முடிப்பாய்
நோயின்றி   உலகிலே  --இங்கு
நூற்றாண்டு    வாழ்க  

பருவம் 596

 கொள்ளை     அழகு   உருவம்    --அந்த
 குமரி        நல்ல     பருவம்
 பல்லைக்    காட்டிச்    சிரித்தாள்   --வீணில்
 காதலில்   ஏனோ    வீழ்ந்தேன்

 எல்லை     மீறினேன்     அன்று   --அதனால்
 ஏங்கியே    தவிக்கிறேன்    இன்று
 தொல்லை   அதிகம்    தோழா    --எனக்கு
 தோல்வி   இத்தனை     நாளா

 ஊரும்      சிரிச்சுப்       போச்சு   --என்
 உற்வும்     வெறுத்திட   லாச்சு
 பேரைக்    கெடுத்துக்    கொண்டேன்  --அவளை
  பிரிய    மனமும்    நொந்தேன்

 கால       காலங்கள்     காதல்   --அது
 கைகளை மீறினால்  சாதல்
நல்ல    வழிதன்னை    மறந்தேன்   --இன்று
நாயெனத்    தெருவில்    திரிகிறேன்

இளமை    எண்ணங்கள்    இனிக்கும்   --அவளெனை
 ஏற்றுக்    கொள்கிற   வரைக்கும்
வளமையை    வாழ்விலே    பெறுவேனா    --அந்த
வஞ்சியுடன்     நலமாய்    மகிழ்வேனா

போதை 595

கண்ணில்     ஆடும்      கனவு   --அவள்
கருத்தில்     வந்த          உறவு
எண்ணில்     உலகம்    மறந்தேன்   --அன்று
இணைய     மனம்     துடித்தேன்

பொன்னில்    செய்த    உடம்போ   அவள்
பொங்கும்    இளமைக்     குறும்போ
கண்ணில்   வைத்தாள்    போதை   --நானோ
காதலில்    வீழ்ந்த    பேதை

போட்ட   சடையினை     இழுப்பாள்  --தினம்
பூரித்த    அழகால்      கவிழ்ப்பாள்
வேட்டை    ஆடிட    நினைத்தால்   --நம்மை
விரட்டிப்    பிடித்து     அடிப்பாள்

நாலு    பக்கமும்     காவல்   --நான்
நடுவில்   அகப்பட்ட    சேவல்
கோல     முகத்தில்    கோபம்    --அவளை
குலவிட    நினைத்தது    தாபம்

என்ன    சொல்லி    அழைப்பேன்  --காதல்
இல்லையெனில்    எப்படி    பிழைப்பேன்
கன்னம்     குழைந்திட    சிரிப்பு   --எங்கள்
காலம்       கடவுளின்     பொறுப்பு

-- 

புதன், 29 ஆகஸ்ட், 2018

பழமுதிர் சோலை 594

                                         பல்லவி
வருவாய்        வருவாய்       வடிவேல்   முருகா     ---என்
வாழ்வில்   உனையே      வணங்கிச்    சுகம் பெற        (வருவாய் )
                                         அனுபல்லவி
உரமது        பெருகி       திறமைகள்      வளர்ந்திட    --நான்
திருப்புகழ்       பாடி     உந்தன்     திருவடி     தேடிட   (வருவாய் )
                                         சரணங்கள்
தணிகை      மலைதனில்     தண்ணருள்    புரிவாய்  ---நம்
தமிழெனும்    மொழியின்   தத்துவம்     ஆனாய்
முனிவரும்   தேவரும்       முடியுடை    வேந்தரும் ---உனது
முழுமதி      முகமெழிலில்     நல்ல      மோட்சமே   அடைவார்   (வருவாய்  )

அழகெனும்    தோள்      அம்பெனும்       விழிகள்  --நம்
அண்ணலுக்கு     இணையாய்   வேறு    அழகனும்   உண்டோ
பழமுதிர்  சோலையில்   அன்று    பாங்குடன்    அமைந்தாய்  ---உன்
பக்தருக்கு    அருளிடும்    கருணை    வித்தகன்     நீயே    (வருவாய் )

செந்தூர்      பதிவாழ்       செந்தில்   வேலனே   --கடலில்
சீறிடும்     அலைகள்   உந்தன்    சிறப்பினைப்    பாடும்
வந்தவர்     குறைகளை    மாற்றிடும்    வேலவா   --உன்னை
வணங்கினார்    பெறுவது    வாழ்வினில்     நிறையவே     (வருவாய் )

திருநாள்     என்பது    உந்தன்     திருவடி    நிழலே   ---உன்
சேவடி     தொழுவது     தினமும்    எந்தன்    கடனே
வரும்நாள்      என்றென       வாசலில்    நிற்பேன் ---நீயும்
வந்திடு    முருகா    இந்த     வையகம்   செழித்திட    (வருவாய் )

  

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கண்ணியம் 593

 இலையில்     ஆடிடும்       கனிகளே   ---அவை
 இயற்கை      அளிக்கும்    வரங்களே
 அலையில்    குளிக்கும்    மீன்களே  ---உமக்கு
 அழகாய்       நீச்சல்       தந்தவர்  யார்

 வானில்     பறக்கும்     பறவையே  --உன்னால்
 வட்டம்       போடுவது    எப்படி
 கானில்    திரியும்      விலங்கினம் ---தமக்கு
 காதல்     உணர்வுகள்    சொன்னதார்

 எதோ         ஒன்று     இருக்குது   --அது
 என்னையும்   உன்னையும்   இயக்குது
 வேதம்     சொல்வது    இதனையே  --இதை
 விளங்கிக்    கொண்டால்   நன்மையே

காலம்       வேகமாய்ப்     போய்விடும்   --அதில்
 கணக்கற்ற   உயிர்கள்     தோன்றிடும்
வேளை            வந்திட     ஓடிடும்  --நல்ல
 விவரம்   சொல்லாது   மறைந்திடும்

 சிந்தனை   செய்வாய்     மனிதனே   --எதையும்
 சீராய்      எண்ணியே     பார்த்திடு
 வந்திட்ட    காரணம்    புரியுமே   --அதுவே
 வாழ்வினில்   பெருமை    சேர்க்குமே

  நல்ல    பெயரைப்     பெற்றிடு   --நமது
 நாடு      உயர்ந்திட    உழைத்திடு
 கள்ளம்   என்பதைக்   கைவிடு  ---என்றும்
 கண்ணியமாய்   உலகினில்   வாழ்ந்திடு

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

நீல மயில் 592

                                 பல்லவி
நினைந்தவர்       நெஞ்சினில்    நீயிருப்பாய்  முருகா  ---இன்றே
 நீல மயிலினில்  ஏறியே    நிச்சயம்   வருவாய்   (நினைந்தவர்  )
                                  அனுபல்லவி
பணிந்தவர்   தமக்கே     பதமருள்   புரிவாய்  --எங்கள்
பன்னிரு   கையுடை    பாங்கெழில்   வேலா    (நினைந்தவர்  )
                                   சரணங்கள்
வள்ளி   மணவாளா    வடிவேலா   முருகா  --உனை
சொல்லி   அழைத்தாலே   சுப்ரமண்யா   வருவாய்
அள்ளிக்   கொடுப்பாயே   அனைவர்க்கும்   வரங்களை  --எங்கள்
அம்மை  யப்பன்   பெற்ற    அறுபடைக்    குமரா  (நினைந்தவர் )

கார்திகைப்   பெண்டிரால்    கவனமாய்   வளர்ந்தாயே   --இங்கு
கந்தன்    எனும்   பெயரில்    கருணையைப்   பொழிகிறாயே
பார்த்திடும்    அடியவர்   படும் துயரம்    தீரும் --அவர்
பாடி     வைத்த    தமிழும்    பல்லுழகை    யாளும்

தேடியே   அலைவோர்க்கு    தரிசனமும்   தருவாய்  --நாம்
திருப்புகழ்    தன்னை  ஓதிட    விருப்பமுடன்   வருவார்
வாடிய   பயிருக்கு    வான்மழை  யாவதுபோல்  --இங்கு
கூடிய    மாந்தர்க்கு     கோடி   நலம்    அருள்வார்   (நினைந்தவர் 0

கந்தனை    நினைத்தால்    நாம்    கதிபெற   வழியுமுண்டு  --அவர்
கண்ணருள்   பெற்றால்    நன்னெறி    ஒளியுமுண்டு
வந்தனை   செய்தோரை   நன்கு   வாழ்ந்திட   வைப்பார்  --என்றும்
வள்ளலாய்     நமக்கு    நல்ல     வல்லமையை    யளிப்பார்  

காவல் 591

கனியில்        ஊ றும்    சுவையும்    நீயே  --என் 
கருத்தில்   மிளிரும்     தெளிவும்   நீயே 
பனியில்    மலரும்    பூவும்    நீயே   --நினது 
பாத       மலர்    பணிந்தேன்   சரணம் 

சிரித்துச்    சிவந்த     அழகு   முகமும்  --எங்கள் 
சீவன்     வாழும்    நல்    வழியைச்    சொல்லும் 
பறித்த    மலரைப்   போலப்    புதுமை  --நீ 
பக்கம்    வந்தால்    எங்கும்   செழுமை 

இரவு    பகலாய்    எண்ணித்   துதிப்பேன்  --நீ 
இருக்கும்  கோயில்   வாசல்   மிதிப்பேன் 
கறந்த     பாலைப்   போல    இனிமை  --எங்கள் 
கருணா   மூர்த்தி    உந்தன்   பெருமை 

அழைத்தால்   அங்கே    உடனே   வருவாய்   --அவர்க்கு 
அபயம்     அளித்துக்     காவல்    காப்பாய்  
பிழைகள்    பொறுக்கும்   பெம்மான்   நீயே  --உன்னை 
புரிந்து    கொண்டால்    பொழுதும்    இனிதே 

எண்ண     எண்ண     இன்பம்     தோன்றும்  --நல்ல 
ஈகைக்     குணமே    உயர்வை    அளிக்கும் 
கண்ணா   உன்னையும்   என்றும்    மறவேன்  --நீ 
காட்டும்    வழியில்    இன்றே    நடப்பேன்  

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மாதவன் 590

 கண்ணில்    மின்னும்    வண்ணக்     கண்ணனே  ---நீ
 கன்னியர்     மனதை      வெல்லும்    மன்னனே
 உன்னில்    என்னைக்    கண்டு   கொள்ளும்   முன்னமே ---நான்
 உழன்று    தவித்தது    உண்மை     எந்தன்    அண்ணலே

 வெண்ணெய்     திருடும்     அந்த    வேளையில்  --உன்னை
 வேகமாய்     அன்னை     கடிந்த     போதிலும்
 மண்ணினைத்      தின்று   அன்று   மாயம்     காட்டினாய்  --இங்கே
 மனமயக்கம்      நீக்கி      எமக்கு     அருள்      கூட்டினாய்

 மலையைக்     குடை யாய்ப்     பிடித்த     மாயமே  ---உன்னை
 மனதில்     நினைத்தவர்   பெறுவது        நல் உபாயமே
 கலைகளில்    சிறந்தவன்     கண்ணன்    அல்லவா  --நீயும்
 காதல்     புரிந்த   பல கதைகள்    நானும்     சொல்லவா

 ஏழைகள்      மனதில்    என்றும்      உள்ளவன்    --உலகில்
 ஏங்கியே     அழுதவர்க்   கருள்புரியும்     நல்லவன்
 தாழை      மடலாய்   மணம்    பறப்பும்     மாதவன்  --உந்தன்
 தாளினைப்     பணிந்தால்    பயங்கள்     விலகி    யோடுமே

 கண்ணன்   பெயரைச்   சொல்லி    நாமும்    ஆடுவோம்  --அவன்
 கருணையை     தினமும்    போற்றிப்      பாடுவோம்
 மண்ணகம்    காத்து     நிற்கும்      மகிமையே    -- நம்
 மக்கள்     மனதில்      என்றும்     உள்ளதும்    உண்மையே 

சனி, 25 ஆகஸ்ட், 2018

தமிழ் 589

தமிழே     உனக்குத்     தலை   வணக்கம்   --எனக்கு
தாயாய்    இருப்பதும்    நீயல்லவோ
அமிழ்தம்  என்பது   நீயாகும்   --உன்னை
அழிக்க   நினைத்தவர்    அழிவாரே

சங்கத்தில்    நீயும்   வளர்ந்தவளே  --அங்கே
சரித்திரம்   பலவும்   படைத்தவளே
தங்கத்தைப்   போலவே   தூயவளே  ---உலகில்
தர்மத்தின்   உருவில்   வாழ்பவளே

எத்தனை   பேர்கள்   எதிர்த்தார்கள்  --உனை
இல்லாது   செய்திட    நினைத்தார்கள்
அத்தனையும்   உன்னிடம்   தோற்றதுவே  --எங்கள்
அம்மையே     நீங்களே   வென்றீர்கள்

மதுரை    நகரில்     சிறப்பானாய்  --ஏழையர்
மனங்களில்  என்றைக்கும்   வாழுகிறாய்
புதினம்     கோடி      உன்பிறப்பு  --உன்னை
புரிந்தவர்    பெறுவது   தனிச் சிறப்பு

தமிழால்   எதுவும்   முடியுமென்பேன்  --அவள்
தமிழர்க்குக்  கிடைத்த  பெரு நிதியமென்பேன்
உயிராய்    எண்ணியே    வணங்கிடுவோம்  --அந்த
உத்தமி    புகழினைப்      போற்றிடுவோம்  

அழகா 588

                      பல்லவி
அழகா    உந்தனை    அழைத்தேனே   --அனுதினம்
வாடி   இங்கே   நானும்   இளைத்தேனே  (அழகா )
                      அனுபல்லவி
பல நாள்    உழன்றேன்    தனியாக  --=உன்
பாத மலர்   பணிந்திட   நான்   மறந்தேனா  (அழகா )
                       சரணங்கள்
அழகாய்     வருவாய்    தனியாக --நீ
அருள்வாய்   வரங்கள்   நலமாக
பழமென   திகழ்ந்தாய்   பழனியிலே  --உன்னை
பஜித்தவர்   உயர்வார்   தரணியிலே   (அழகா )

திருநாள்    என்பதும்   உன்னாலே   --உனது
திருப்புகழ்   ஒலிக்கும்   தன்னாலே
முருகா   என்றுனை    அழைத்தாலே   நீயும்
மோட்சத்தை  யருள்வாய்   மனத்தாலே   (அழகா )

தமிழாய்    தரணியில்    வாழ்கின்றாய்   --உன்
தன்னருளால்   எம்மையும்   ஆள்கின்றாய்
அமிழ்தாய்   இனிப்பாய்   அடியவர்க்கே  --நீயும்
அழகிய    மயிலினில்    வருவாயே     (அழகா )

முருகா     என்றால்    அழகாகும்   --வந்த
மோகம்    எல்லாம்   தெளிவாகும்
வருவாய்    வள்ளி   தெய்வ யானையுடன்  --நாங்கள்
 வாழ்வோம்    உன்னால்   நல்ல  வளமையுடன் - 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

காதலன் 587

 மடி மீது     தலை     வைப்பேன்   ---என்
 மனசார     முகம்   பார்ப்பேன்
 பிடிவாதம்   உனக்கேனோ   பெண்ணே  --நான்
 புரியாத    புதுமையோ     கண்ணே

 மழை     நாளில்     குடையாவேன்  --உன்
 மனதிற்கு     புது    விடையாவேன்
 கலை  பொங்கும்   நிலவானாய்   முன்னே  --=அன்பு
 காதலன்    நான்     உந்தன்    பின்னே

 இரவுக்குள்   உறவாகி   என்னை யாண்டாய்  --என்
 இதயத்தில்   ஒளியாகி    மீண்டாய்
 பறவைக்குச்   சிறகாகி   பருவத்தில்  உறவாகி   ---நாம்
 கரைகாணா   கடலையும்    கடப்போம்

 கண்ணோடு        கண்    பேசி  --நான்
 காதலில்    உந்தன்   விசுவாசி
 எண்ணத்தில்   உள்ளவள்    நீயே  --இங்கு
 எந்நாளும்   உனக்கென்றும்   சேயே

எப்போதும்   உனது   இணையாவேன்  --உனது
 இளமைக்கு   நல்ல   துணையாவேன்
 தப்பேதும்   நிகழாது   பெண்ணே  ---நீ
 தாரமாவது   நான்   செய்த   தவமே
                                                                                                         

வான்மழை 586

திருநாள்     வருமோ    தெரியாது   --அந்த
தேவன்    வருகை    அறியாது
மணநாள்   என்று    முடிவாகும்  --இனி
மகிழவே   வாழ்வினில்   விடிவாகும்

வருவேன்    என்றார்    வந்தாரா  ---வாரி
அனைத்து   முத்தமும்   தந்தாரா
அருகில்   இருந்தால்   நலமாகும்   ---என்னை
அகன்றால்    கண்கள்    குளமாகும்

இரவில்    துடிப்பேன்    தனியாக   --=அவர்
இருந்தால்   உள்ளம்   கனியாகும்
உறவால்   அடைந்தேன்   புதுக்  கோலம்  ---எங்கள்
உயிரின்   ஆழமோ   வெகு  நீளம்

அவரை   எண்ணியே    மருகுகின்றேன்  --காதல்
அன்பை    நினைத்து    உருகுகின்றேன்
பயிரை    வளர்க்கும்    வான்  மழையே  --நான்
பதறித்     துடிப்பது     என் பிழையே

என்றோ   ஒருநாள்    வருவாரே   ---என்னை
அணைத்து   சுகமும்    தருவாரே
ஒன்றாய்    இணைந்து   வாழ்வோமே  ---இந்த
உலகில்   நற்பெயர்    பெறுவோமே  

சோளக் கொள்ளை 585

 களத்து   மேட்டுல     காத்து   அடிக்குது  --இங்கு
 நேற்று    இன்றும்    சேத்தடிக்குது
 நினைச்சு  நினைச்சு  மாத்தி அடிக்குது  ---நம்
 நெஞ்சில்   ஆசைகள்   கூத்தடிக்குது

 பாலைப்   போல   நிலவிலே   --இளம்
 பருவ க்   கால   அழகிலே
 வேலன்   வள்ளி   நாடகம்  --அங்கு
 விடிய   விடிய    நடக்குதே

 மூலை     வீட்டுக்    காரனோ  --கடையில்
 மூக்கு   முட்டக்    குடிச்சவன்
 வேலைக்   காரப்   பெண்ணிடம்  --தனது
 வீரம்   முழுதும்    காட்டினான்

 கல்லை   யெடுத்து   அடிச்சவள் ---அவன்
 காதைப்   பிடித்துக்    கடித்தனள்
  பல்லைக்   காட்டிக்    கெஞ்சியும்  --=அவள்
 பத்ர     காளியாய்    மாறினாள்

 காத்து    வாங்கப்    போனவன்  --எனோ
 காதல்    சுரம்    வந்ததால்
 போத்தி   இழுத்துப்    படுத்தனன்  ---நல்ல
 பொழுது   விடிந்தும்   தூங்கினான்

 காதல்   கொண்ட    ஜோடியும்  --=நம்ம
 கம்மங்     கரையில்   ஒதுங்கினர்
 சத்தியம்  செய்தவர்   சரசமாயினர்  -பின்
 சற்றே     எங்கேயோ   நழுவினர்

 காத்து    வீசிடும்   காலத்தில் --உலகில்
 கதைகள்   பலவும்    நடக்குது
 பாத்து    நன்கு     பிழைக்கணும்  --வாழ்வில்
 பண்பு     பெருகி    வாழணும்

 கால      காலம்    கடந்துமே   ---நம்ம
 களத்து    மேடு     இருக்குது
 சோளக்    கொள்ளை    பொம்மையும்   ---கால
 சுவடு       கண்டு    சிரிக்குது   

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பெருமாள் 584

 தேர்  போல      வந்தாள்   தெருவிலே   ---நான்
திகைத்து    நின்றேன்   நேரிலே
 பேரென்ன  வென்பது  தெரியலே  ---அவளை
பிரிந்திட     எந்தன்   மனம்  பொறுக்கல்லே

தாவணி    கட்டிய   தேவதை   ---அவளை
தழுவிட   நினைத்தவர்   படு   வதை
மோகினி   என்பவள்   இவள் தானோ  --=நல்ல
மோட்சமும்   இவளால்   வந்திடுமா

கல்லில்   வடித்த   சிலையானேன்  --அவளது
கருணைக்கு  ஏங்கிடும்   நிலையானேன்
புல்லாய்   என்னையும்   நினைப்பாளோ  ---இல்லை
புன்னகை    புரிந்தே    அணைப்பாளோ

பேசிட   என் நாவும்   எழவில்லை    ---அவள்
பின்னால்   செல்லவும்    துணிவில்லை
வீசிடும்   காற்றே   தூது   போயேன்   ----இன்றே
விரைவில்   அழைத்து   நீ  வருவாயா

கண்ணும்     கண்ணும்   கலந்ததுண்டு  ---அவள்
காதல்   என்னுள்   மலர்ந்ததுண்டு
பெண்ணாள்    அவளையும்   அடைவேனோ ---அந்த
பெருமாள்   துணையும்    இனி    வேண்டும் 

வயல் 583

விளைச்சல்   கண்ட    நெல்  வயல்கள்  --அங்கு
விரும்பிச்    சாய்ந்திடும்   நெற்கதிர்கள்
பழுத்த   மரத்தில்    பழக்   குலைகள்   ---அதை
பறித்துச்   சாப்பிட   ருசிக்காதோ

ஓடும் நீர்    கொண்ட    வாய்க்காலும்   ---அருகில்
உயர    வளர்ந்திட்ட   பசும் புல்   தரையும்
பாடும்   இனிய   நல்ல    பறவைகளும்   ---இதனை
பார்க்கையில்   நெஞ்சமும்   இனிக்காதோ

கஞ்சிக்    கலயம்   சுமந்து    வரும்  ---இளம்
கன்னியவள்     நடக்கும்   ஒயிலுமென்ன
நெஞ்சில்   கள்ளம்   கொஞ்சமும்   இல்லை  --அவர்கள்
நேர்மை   வழியினில்   தினம்   வாழ்பவரே

உழைத்துக்   களைத்தார்   உழவர்களே  --அந்த
உழைப்பின்   பலனே  உயர்ந்த   நெற்கதிர்கள்
பிழைத்திட   உழைக்கும்    பெரிய   குணம்  --இந்த
பெருமைக்கு   எந்நாளும்    உரியவரே

கதிர்களை   அடித்தார்    நெல்மணியாக  ---அதை
காண்கையில்  உள்ளங்கள்   துள்ளாதோ
பதரினைத்    தள்ளியே   பலன்   கொடுப்பார்   --அவர்
படும்துயர்  இங்கு   இன்னமும்    தீராதோ  

பாசம் 582

 கற்பனைக்     காதலி   நீயடி  ---உனை
 கட்டி     யணைப்பேன்   நானடி
 அற்புத    அழகு   தானடி  --தினம்
 அள்ளியே   ருசித்திட   தேனடி

 கண்களில்   மையலும்   ஏனடி  --இரவில்
 கலக்க   வருபவன்   நானடி
 பெண்ணில்   அழகுச்  சிலையடி  ---உனக்கு
 பூமியில்    என்ன   விலையடி

பெண்ணெனப்  பிறந்தாய்   பூமியிலே  ---பிறரை
 தவிக்க   விடுவதும்   நியாயமில்லே
 பொன்னும்   பொருளும்  சரியாமோ  ---உன்
 புன்னகை    ஒன்றே   பரிசாகும்

 கல்லை   உடைத்து   நாரெடுப்பேன்  --ஏழு
 கடலைக்    கலக்கிக்   குடித்திடுவேன்
 பிள்ளை    குணமும்  எனக்குமுண்டு  --உலக
 பேரழகும்   உன்னிடம்   தானுண்டு

 வானத்தை   வில்லாய்   வளைக்கட்டுமா  --உனக்கு
 வாலிப   விருந்தை   வழங்கட்டுமா
 மானத்தைக்   காத்திட   வருவாயா   ---உன்
மனதில்   இடமொன்று   தருவாயா

சிரித்து   அடைத்தாய்   சிறையினிலே  --நான்
 செகத்தை    மறந்தேன்   உறவினிலே
 பறித்த   பூக்களென   வந்து விடு   --உனது
பாசத்தை   எனக்கே   தந்துவிடு  

காலங்கள் 581

 அவன் ;;  இளமைக்  காலம்    நிலைக்குமா   --மனம்
                     எதை   எதையோ    நினைக்குமா
                      பழகிய   கலைகள்   மறக்குமா   --நீ
                     பார்த்துப்    பதிலும்   சொல்லம்மா

அவள்  ;;  கால   காலங்கள்   மாறலாம்  ---கொண்ட
                   கடமை   எந்நாளும்   மாறுமா
                   நல்லவை   என்றும்  ஜெயிக்குமே  --=எதுவும்
                   நாயகன்   விதிப்படி   நடக்குமே

அவன்  ;;கண்மணி   உன் மனம்    வெள்ளையே  ---இங்கு
                   கருணை    என்பது    இல்லையே
                  பெண்ணாய்   நீயும்   உணர்ந்திடு  ---இதை
                  பிறரிடம்   எடுத்துச்    சொல்லிடு

அவள் ;;நியாயம்  எங்கிலும்   மாறுமா  ---உன்னால்
                நிஜமும்   பொய்யாய்ப்   போகுமா
                பாயும்    புலியும்    பசுவாகுமா  ---நீயும்
                படித்துத்    தெரிந்து    கொள்ளுய்யா

அவன் ;;ஏட்டிக்கு   போட்டியாய்ப்   பேசுறே  ---நீயும்
                 எதிர்த்து    என்னமா   குதிக்கிறே
                 போட்டால்   தெரியும்    போடு   ---இப்பவே
                பொறந்த    வீட்டுக்கு    ஓடு

அவள் ;;நடப்பதை   சொன்னால்   கோபமா --இங்கே
               நடக்கும்    நடப்பு    புரியுமா
              உள்ளதை   வைத்து   வாழய்யா  --இனிமேல்
               உருப்படற    வழியினைப்   பாருய்யா

அவன் சொன்னபடி   கேட்டு நா    நடக்கிறேன் --உன்னை
               சுகமா    வைச்சுக்கப்    பாக்கிறேன்
              கண்மணி   கோபமினி    ஏனடி  ---என்
              காதலி    என்றைக்கும்    நீயடி

அவள் ;;வெட்டிப்    பேச்சும்   வேணாமே  ---உன்
               விசயம்   எனக்கும்   புரியுமே
             விட்டதைப்   புடிக்கக்   கத்துக்கோ  --நீ
              விவரமா   இனிமேல்   வாழ்ந்துக்கோ ;

புதன், 22 ஆகஸ்ட், 2018

பரந்தாமன் 580

 கண்ணான    கண்ணா    நீ  கார்மேக   வண்ணன்  ---உன்னை
 காணாமல்   நானும்   இங்கே   இருந்தது   உண்டா
  வெண்ணெய்   திருடி    அன்று   வேடிக்கை   செய்தாய்  --நீ
   விளையாட்டுப்   பிள்ளையாய்   வீதியில்   அலைந்தாய்

   மாடுகள்     மேய்க்க   வந்த    மாதவன்    நீயே  ---கொடும் 
   மழையினை  தடுக்க  ஒரு மலையினைக்  குடையாக்கினாய்
   தேடிடும்   நெஞ்சிற்கு   நல்ல தேறுதல்   தருவாய்  ---என்றும்
    தேன்குழல்   ஊ தியே   எங்களுக்கு   தரிசனம்    தந்தாய்

    கம்சனைக்   கொன்றாய்   காளிங்கனையும்  வென்றாய்   ---இந்த
     கலிகால   நிகழ்வில்   மாயக்   கண்ணனாய்   வந்தாய்
     நம்பினோர் க்   கருள்வதில்     நாராயணனும்   நீயே  ---என்றும்
     நானிலம்    செழித்திட  எங்கிலும்   நல் மழை    தருவாய்

     கீதையை   உபதேசிக்க    கிருஷ்ணனாய்   வந்தாய்   ---உள்ள
     கேடுகள்   போக்கிடத்   தூதுமே    நீ  சென்றாய்
     பாதையை   மாற்றிப்   பஞ்ச   பாண்டவரைக்   காத்தாய்  ---செல்வ
     பரந்தாமன்   உருவில்   இந்தப்   பாரதத்தை   ஆண்டாய்

    திருமகள்   கொஞ்சும்    எங்கள்    தீன  தயாளா  ---உன்
    திருப்பார்வை    பட்டாலே    தேசங்களும்   செழிக்கும்
    வரும் நாளில்   மாந்தர்   வளம்  பெற   வைப்பாய்  ---எங்கும்
    வல்லமை    பெருகிட    மீண்டும்   வந்திடுவாய்    கண்ணா
  

கார்மேகம் 579

 கலை யாடும்    நிலவில்   ஒரு   கட்டழகி   வந்தாள்  ---நான்
 கண்ணாலே   கண்டேன்   காதலும்   கொண்டேன்
 அலையாடும்  கூந்தலில்   அழகாகச்   சிரித்தாள்   ---அந்த
 அழகியவள்   என்னை   அடிமைச்   சிறையினில்   வைத்தாள்

  கருநீல   விழிகளால்   என்னையும்   கவனமாய்   வளைத்தாள்  ---பின்
  கார்மேகக்   கூந்தலால்    எனோ   கட்டியும்    போட்டாள்
  புருவமெனும்   வில்லில்    புதுக் கணைகள்    மாட்டி  --எந்தன்
  பொழுதெல்லாம்  அவளோடு  நானும்    போட்டா   போட்டி

  இடையினை   அசைத்தால்    என்   எலும்புகள்   வளையும்  ---அவள்
  ஈரெட்டு    வயதோ    எனது   இளமையைக்     கொல்லும்
  கடையினை  விரித்தாள்   என்னிடம்   காசேதும்   இல்லை --நான்
  கடன்  சொல்ல   முடியாமல்   அங்கே   ஒரு   கையறு  நிலை

  விடை காண    முடியாத    புது வினாவாக    வந்தாள்  ---நான்
   வேண்டியும்  கெஞ்சியும்   வெறுத்  தெங்கோ    சென்றாள்
   தடை மீற   என்னுள்ளம்   நிதம்     தவிக்குதே    தோழி   ---நீ
   தழுவி   யணைக்க    வருக   எந்தன்    தங்கமே   நீடு   வாழி

   உயிருக்குள்   உயிராக   இங்கே    ஒன்றாகக்   கலப்போம்  ---என்
   உயிரையே   பரிசாக   உனக்கு   எந்நாளும்   அளிப்பேன்
   பயிருக்கு   மழை   போல   என்மேல்   பரிவினைக்   காட்டு  --நீயும்
   பறந்தோடி    வந்தின்று   காதல்    பாசத்தை    ஊட்டு   

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

சிவகுரு 578

இறைவா    இங்கே    வருவாயா   ---நீ
ஏங்கும்    உள்ளம்    தெரிவாயா
குறைகள்  தீர்த்திட   மனமில்லையோ  --நான்
குமுறி    அழுவது    புரியலையா

வீழ்ந்திடும்    கண்ணீர்   போதாதோ  --இங்கு
விரும்பும்   வாழ்வு    கிடைக்காதோ
நாளும்    மறவேன்   உன் திருநாமம்  ---உன்னை
நம்பினோர்   என்றுமே   பெரும் சேமம்

மங்கை    வள்ளியின்   மணவாளன்   --நீ
மாதா    பார்வதி    குணசீலன்
கங்கை    கொண்ட    சிவனாரின் ---அருளாலே
காத்திட    வந்திட்ட    அருட்சீலன்

திருவாய்    அமைந்தாய்    செந்தூரில்  ---நானும்
திருப்புகழ்    படிப்பேன்    தினந்தோறும்
குருவாய்     நிறைந்தது   சுவாமி மலையினிலே  ---சிவ
குமாரா    அழகா  எங்கள்    கதிர் வேலோனே

பழமென    நிற்பது    பழனியில் ---உன்னை
பணிந்தவர்   பெறுவது   பெரும் புகழினையே
அழகெனும்    முருகன்    புகழ்     வாழ்க   ---என்றும்
அடியவர்    இல்லங்கள்    நலம்   சூழ்க  

தமிழ் 577

அன்பினில்   சிறந்த      ஆருயிர்   நீயே  --நல்
---                                           ---
இன்பத்தை    நல்கிடும்   ஈகையும்   நீயே
---                                              ---
உண்மையைப்    பேசிட  ஊ க்கமும்   தருவாய் --உலகினில் ---
---                                             ------   
என்றுமே      ஏழை       ஏக்கமும்    தீர்ப்பாய்
---                     ---
ஐயங்கள்   தீர்த்திடும்    ஐயனும்     நீயே   --இங்கு
----
ஒன்றிடும்   மனதில்    ஓங்காரம்   நீயே
---                                       ----- 
ஓ ள சதம்   உலகினில்   அனைவர்க்கும்    அருள்வாய்
-------

தமிழினில்   உள்ளதை    தனயனும்   சொன்னேன்  --இதில்
தவறில்லை  என்றால்     தந்தருள்   புரிவாய்
அமிழ்தினும்    இனியவா   எம்  ஆறுமுகத்தரசே  --- உன்னை
அனுதினம்   பணிந்து    நானும்  அகம்   மகிழ்வேனே

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

இல்லற ஜோதி 576

திரு நாள்   வருமா  அது  தேன் சுவை   பெறுமா ---மண
 நாள்    வந்திடில்    ஒரு   மகிழ்வினைத்   தருமா
 வரு நாள்    தன்னில்   என்  வாசலில்   நிற்பேன் ---புது
 வண்ணத்தில்   கோலம்  நான்  வரிசையாய்   இடுவேன்

  கண்ணாலே     மாலையும்   கழுத்தினில்   இடுவேன்  --ஆனந்த
  கண்ணீரை    உனக்கு    காணிக்கை   வைப்பேன்
  பொன்னாலே   நகைகள்   புதுமையாய்   சூடுவேன்  ---நான்
  அந்நாளில்    என்னையே    அர்ப்பணம்   செய்வேன்

  வளையல்கள்   சப்தம்    வகை இல்லா  முத்தம் ---உனக்கு
  வட்டிக்கு    வட்டியாய்    வாரிக்    கொடுப்பேன்
  கலை யாடும்    நிலவில்    கை கோர்த்து   நடப்போம்  ---எந்தன்
  கண்ணாளன்    மடியில்    தலை  வைத்துப்   படுப்பேன்

  இடையினை    வளைத்து   இருப்பதைக்   கொடுப்பேன்  ---நல்ல
  இளநீரின்    சுவையில்     இகலோகம்    மறக்கும்
  தடை இல்லாச்     சான்றிதழ்   தருவேனே   கண்ணா ---உன்னை
  தழுவியே    யணைத்து  நானும்   தாயாவேன்   மன்னா

  கட்டிலில்    தொடங்கி த்    தொட்டிலில்    வளரும்  ---நம்
  கண்ணான    கண்ணிற்கு    காதணி   இடுவோம்
  இட்டமுடன்    பிள்ளைக்கு  நல்ல  இனிப்புகள்   தருவோம்  --உந்தன்
  இல்லற      ஜோதியாய்  நான்    எந்நாளும்     வாழ்வேன்    

தேவதை 575

  ஒரு நாள்    இரவில்    தனியாக  --நான்
  உலவிட   சென்றேன்    துணிவாக
  திருத்தேர்   போலவே   மிக அழகாக  --ஒரு
  தேவதை    வந்தாள்    படு ஒயிலாக

  வாழையைக்   கால்களாய்க்   கொண்டவளோ  ---அந்த
  வாளை மீன்களைக்  கண்களாய்   உள்ளவளோ
  சோலையில்   புகுந்த    இளஞ் சுந்தரியோ   ---நல்ல
  சொக்கத்    தங்கத்தில்    வடித்தவளோ

  என்ன   சொல்லி   நான்   கூறிடுவேன்   ---நான்
   யாரிடம்    அவளுக்கெனப்   போரிடுவேன்
   கன்னல்    தமிழாயவள்    வந்தால்  --எனது
   கற்பனை    மொத்தமாய்   எதிர் நின்றாள்

   வில்லினை   வளைத்தால்    அவள் புருவம்  ---எனக்கு
   வேதனை    தருவது    எழில் உருவம்
   எல்லையை    மீறுது    என்பருவம்  ---அவளோ
   எதற்கும்    துணியும்   இளங்கருவம்

   கண்ணால்    அழைத்தால்   வருவாளோ ---எனக்கு
   காதலையும்    யள்ளியே    தருவாளோ
    பெண்ணாய்    என்னுடன்    இணைவாளோ ---என்னை
   பெருமையாய்    மனதினில்    நினைவாளா

                                                                                                                 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

தர்மம் 574

 தமிழைப்   பாடிப்     பிழைப்பவன்  --நல்ல
தர்ம     சிந்தனை   உள்ளவன்
கலைகள்   நிறைந்த   மனத்தினன்  --தமிழ்
கவிஞனெனும்   பெயரினைப்   பெற்றவன்

மடியில்    கனமும்    இல்லையே  --அவன்
மனது   என்றும்     வெள்ளையே
அடிமை   என்றால்   தொல்லையே  --இங்கே
அவனும்   நமக்குப்    பிள்ளையே

பெண்ணும்   கண்ணும்   ஒன்றுதான்  --வீண்
பேதம்    மறைவது   என்றுதான்
மண்ணில்   அனைவரும்   ஓர்நிறை  ---இதை
மனதில்   வைக்கணும்    பலமுறை

நாடு   என்பது    நமதல்லவா   ---அதை
நாளும்   காப்பது   பொறுப்பல்லவா
தேடும்   பொருளை    பொதுவிலாக்கு  --உனது
தேம்பும்    மனதைக்    கோவிலாக்கு

பள்ளிகள்   எங்கிலும்    கட்டுவாய்  --நல்ல
பணத்தை    அதிலே    கொட்டுவாய்
இல்லாதவர்க்கு   இடமும்   கொடுத்திடு   --நீயும்
இனிய    பெயரை  எடுத்திடு  

சனி, 18 ஆகஸ்ட், 2018

புளியஞ்சோலை 573

புளியஞ்     சோலை     அழகு   ---நீ
புனிதம்     கொண்டு   பழகு
மலையைப்  போன்ற   இடங்களே   ---உன்
மனதைக்    கவரும்   நல்ல  தடங்களே

அன்னைத்   தெய்வம்    நடுவிலே   ---அவள்
அழகுத்    தோழிகள்    அருகிலே
என்னைப்   படைத்தாள்   இறைவியே  --=எனக்கு
ஏற்றம்    தந்தாள்    வாழ்விலே

மந்திக்   கூட்டம்   குதிக்குமே   --நல்ல
மரத்தில்  தாவி    மகிழுமே
தொந்தி  வைத்த    பிள்ளையார்  --உடன்
தோகை   மயில்   வேலவன்

சலசலத்து   ஓடிடும்   ஆற்றிலே  --இனிய
சங்கீதம்  பாடும்   வெள்ளி  மீன்களே
பளபளக்கும்  சூரியக்    கதிர்களை  --அங்கு
பகலில்    மறைக்கும்   வான் மரங்களே

கால      காலங்கள்    போயினும் ---எங்கள்
கருணைத்    தாயை    மறப்பதோ
குல     தெய்வமெனும்   பெருமையில்  --அன்பு
குமரியவள்    எம்முள்    ஆள்கிறாள்

கன்னித்   தாயின்    மடியிலே   --தமிழ்
கவிதை   வைத்து    வணங்குவேன்
என்னில்   அவளும்   இருப்பதால்   ---நல்ல
இனிய    வாழ்வு   வாழ்கிறேன் 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

தீபங்கள் 572

நிலவில்   திண்டாடித்   திரிவேன்  --உன்னை
நெஞ்சில்    எந்நாளும்   சுமப்பேன்
பழகவே    வந்தாலும்    மகிழ்வேன்  --எனது
பாவை    உன்னை நான்   மறவேன்

நீயென்ன   சொன்னாலும்   இனிமை  --நீ
இறைவன்  செய்திட்ட    பதுமை
கண்ணால்  அழைப்பதும்   புதுமை  --பலரை
கவர்ந்து   இழுக்கின்ற   திறமை

கரும்பாய்   இனிக்கின்ற    பருவம்  ---பிறர்
கண்டால்   மயக்கமுறும்    உருவம்
அரும்பாய்  சிரிக்கின்ற   அழகே  ---என்
ஆசை     எந்நாளும்    உனக்கே

இரவைப்    பொன்னாக    மாற்று  --எனது
இல்லத்தில்   தீபங்கள்      ஏற்று
உறவைப்   பெரிதாக    எண்ணு  ---நீ
உயிருக்கு   மேலான  கண்ணு

சிரித்துக்   கொல்லாதே   என்னை --நீயோ
சீராய்      வளர்ந்துள்ள    தென்னை
பறித்துப்  பசியாற   வரவா    --உரிய
பதிலைச்  சொல்லிவிடு    உறவாய்

இருந்தால்   உன்னோடு    இருப்பேன் ---நீ
இல்லையெனில்  எங்கேயோ   பறப்பேன்
விருந்தாய்   வந்து விடு    பெண்ணே ---நல்ல
விவரம்     சொல்லிவிடு   கண்ணே  

கானம் பாடி 571

நிலவில்   ஆடும்   குமுதமே  ---என்
நெஞ்சில்  ஊறும்   அமுதமே
கலையில்  வாழும்   நளினமே  --இரும்பை
கவரும்   என்றும்    காந்தமே

பனியின்    வாடைக்   காற்றிலே  ---அந்த
பளிங்கு    மேடை    நடுவிலே
தனிமையில்   சுகமும்   எப்படி   --நீயும்
தள்ளிப்     போவதும்    தப்படி

கொடுத்துச்  சிவந்த   முகத்திலே   --உந்தன்
கொள்ளை   அழகு    சிரிப்பிலே
தவறியே    விழுந்தவன்   நானடி  ---நான்
தழுவி    யணைப்பதும்   தவறோடி

வானம்     நமக்கு    சாட்சியே ---இது
வசந்த    கால    ஆட்சியே
கானம்   பாடி    ஆடலாம்  ---நாமும்
காதல்    உறவில்    மகிழலாம்

இரவில்   பூக்கும்    உறவுகள்  ---அது
இளமை   செய்யும்   நினைவுகள்
வரவை    மீறும்    செலவுகள்  ---நம்
வாழ்வில்   நிறையக்   கனவுகள்

நல்ல     காலம்   வந்திடும் ---உலகில்
நன்றி  என்றும்  வாழ்ந்திடும்
கள்ளம்   மறந்து   ஆடலாம் ---தெய்வ
கருணை    நம்மைக்    காக்கலாம்

                                                                           
                                                                                    

வாழ்த்துக்கள் 570

பெயரன்     பெயர்த்தி  (கள்  ) இருவர்   ---நல்ல
பேறுகள்      அனைத்தும்     பெறுவர்
ஊ ரும்          இதனைச்   சொல்லும்  ---உலகில்
உண்மை      என்றுமே     வெல்லும்

                            -------- 

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

உறவு 569

உன்னை   நினைத்து   சிரிப்பேன்  --உன்
உறவை    எண்ணி    மலர்வேன்
என்னில்   அன்று    கலந்தாய்  --ஏன்
இதயம்   முழுதும்    நிறைந்தாய்

கன்னல்   தமிழும்    இனிமை  --உனது
காதல்   எனக்கு    அருமை
என்னில்   நீயும்   படர்வாய்  ---அந்த
இனிய    நிகழ்வு   தொடரும்

அன்ன    நடை   பயில்வேன்  --உன்
அகண்ட   மார்பில்   துயில்வேன்
 பின்னும்  இடையை   அசைப்பேன்  --நீயும்
மின்னலாய்   என்னுள்   புகுவாய்

கண்கள்   மயங்கிக்   கிடப்பேன்  --என்
காதில்    மெல்ல    அழைப்பாய்
பெண்மை  என்பதை  உணர்வேன்  --ஒரு
பேச்சும்  இன்றிக்    கிடப்பேன்

சிவந்த    உடலினை   வளைப்பாய்  --சின்ன
சிற்றுளி   கொண்டு   தகர்ப்பாய்
வசந்த    காலம்    இனிது    ---அந்த
வாழ்வு   பலர்க்கு   அரிது

உள்ளம்    இணைதல்   வேண்டும்  ---அதில்
உண்மை    நிறைதல்   வேண்டும்
கள்ளம்   மறைதல்    வேண்டும்  ---நல்ல
காதல்   அங்கே      மலரும்