புதன், 19 டிசம்பர், 2018

தென்றலெனும்         தேரேறி       வந்தாள்    --எனக்கு
தேனான         விருந்தினை       தந்தாள்
பெண்ணில்      அவளே      தலைவி      --அவளை
பிரியாமல்        இருப்பேனே     பழகி

கண்களில்     வருவது     புயல்     ---அவளது
கைகளில்       காமனது      வில்
பொன்னெனும்      ஆடையை      அணிந்தாள்   --என்னை
புழுவாக்கித்   துடித்திட      நினைந்தாள்

ஈரெட்டு        வயதான     இளமை    ---தினம்
எடுத்தாலும்    புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்     உள்ளது      கடலின் ஆழம்

இட்டாலும்    நோகுமவள்      பாதம்    --காதல்
எல்லார்க்கும்     உரைப்பாளே     புதுவேதம்
தொட்டாலும்     மணக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே    தொடர்வேனே    நேசம்

இரவிலும்    பகலிலும்    அவள் நினைவு    --தினம்
எனக்குள்      வருமே      பலகனவு
உறவுக்கு     அவள்தானே    மருந்து    --நானும்
உலகில்    இருப்பேனோ     மறந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக