திங்கள், 10 டிசம்பர், 2018

மன்னன் 618

கந்தன்     பெயரைச்      சொல்லு     ---வந்த
கவலையை       விட்டுத்     தள்ளு
எந்த       வினையும்     மாறும்    --அவன்
வரங்கள்      நம்மைச்     சேரும்

மலையினில்      குடியாய்      இருப்பான்   ---ஏழை
மனசில்         நிலையாய்        சிரிப்பான்
கலைகளில்    சிறந்த     மன்னன்     --தொந்தி
கணபதி      இவனுக்கு    அண்ணன்

தமிழும்       முருகனால்    வாழும்    --எதிர்க்கும்
தருக்கர்     படைகள்       மாளும்
அமிழ்தம்      போலவே    இனிப்பான    --தனது
அடியவர்      சுகம்பெற     நினைப்பான்

மனைவிகள்      இருவர்      உண்டு    ---அவனது
மனமோ         பிறருக்குத்      தொண்டு
துணையாய்     ஓடியே     வருவான்   ---என்றும்
சொக்கத்       தங்கமாய்    ஜொலிப்பான்

வாழும்       காலம்     அறிவாய்   --முருக
வள்ளல்      தன்னையே     நினைவாய்
வீழும்        கண்ணீர்      துடைப்பாய்   --உலகில்
வெற்றி      வீரனாய்      நடப்பாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக