வியாழன், 20 டிசம்பர், 2018

தென்றல் 620

தென்றலெனும்      தேரேறி      வந்தாள்    -எனக்கு
தேனான      விருந்தினை   தந்தாள்
பெண்ணில்    அவளே    தலைவி    --அவளை
பிரியாமல்     இருப்பேனோ    பழகி

கண்களில்    வருவது   புயல்     --அவளது
கைகளில்   காமனது   வில்
பொன்னெனும்    ஆடையை    அணிந்தாள்  --என்னை
புழுவாக்கி     துடித்திட    நினைந்தாள்

ஈரெட்டு    வயதான    இளமை   --தினம்
எடுத்தாலும்   புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்    உள்ளது   கடலின்  ஆழம்

இட்டாலும்   நோகுமவள்     பாதம்    --காதல்
எல்லோர்க்கும்    உரைப்பாளே    வேதம்
தொட்டாலும்    மனக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே   தொடர்வேன்    நேசம்

இரவிலும்   பகலிலும்    நினைவு   -தினம்
ஏன்தானோ   காணுகிறேன்    பல கனவு
உறவுக்கு    அவள்தான்    மருந்து   --நானும்
உலகினில்   இருப்பேனோ    மறந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக