தென்றலெனும் தேரேறி வந்தாள் -எனக்கு
தேனான விருந்தினை தந்தாள்
பெண்ணில் அவளே தலைவி --அவளை
பிரியாமல் இருப்பேனோ பழகி
கண்களில் வருவது புயல் --அவளது
கைகளில் காமனது வில்
பொன்னெனும் ஆடையை அணிந்தாள் --என்னை
புழுவாக்கி துடித்திட நினைந்தாள்
ஈரெட்டு வயதான இளமை --தினம்
எடுத்தாலும் புசித்தாலும் இனிமை
கார்வெட்கும் கூந்தலோ வெகு நீளம் --அவள்
கண்களில் உள்ளது கடலின் ஆழம்
இட்டாலும் நோகுமவள் பாதம் --காதல்
எல்லோர்க்கும் உரைப்பாளே வேதம்
தொட்டாலும் மனக்கின்ற வாசம் --அவள்
பின்னாலே தொடர்வேன் நேசம்
இரவிலும் பகலிலும் நினைவு -தினம்
ஏன்தானோ காணுகிறேன் பல கனவு
உறவுக்கு அவள்தான் மருந்து --நானும்
உலகினில் இருப்பேனோ மறந்து
தேனான விருந்தினை தந்தாள்
பெண்ணில் அவளே தலைவி --அவளை
பிரியாமல் இருப்பேனோ பழகி
கண்களில் வருவது புயல் --அவளது
கைகளில் காமனது வில்
பொன்னெனும் ஆடையை அணிந்தாள் --என்னை
புழுவாக்கி துடித்திட நினைந்தாள்
ஈரெட்டு வயதான இளமை --தினம்
எடுத்தாலும் புசித்தாலும் இனிமை
கார்வெட்கும் கூந்தலோ வெகு நீளம் --அவள்
கண்களில் உள்ளது கடலின் ஆழம்
இட்டாலும் நோகுமவள் பாதம் --காதல்
எல்லோர்க்கும் உரைப்பாளே வேதம்
தொட்டாலும் மனக்கின்ற வாசம் --அவள்
பின்னாலே தொடர்வேன் நேசம்
இரவிலும் பகலிலும் நினைவு -தினம்
ஏன்தானோ காணுகிறேன் பல கனவு
உறவுக்கு அவள்தான் மருந்து --நானும்
உலகினில் இருப்பேனோ மறந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக