ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஸ்ரீ ரங்க நாதர் 622

அன்பர்கள்     மனதினை   ஆள்பவன்    ரங்கனம்மா    --அவனை
அனுதினம்   நினைத்தாலே   ஆனந்தம்   கோடியம்மா
துன்பம்     நீக்க  வரும்    தூய த்    தொண்டனம்மா    --நமக்கு
துணையாக    வந்துதவும்     நல்ல   துணைவனும்    அவனேயம்மா

கால்களைக்    கண்டாலே   நம் கண்கள்    சொரியுமம்மா   --அவனது
கண்விழி   பட்டாலே     கவலைகள்   பறக்குமம்மா
நால் வகை    வேதமும்    நாயகன்   உருவமம்மா    ---உலகில்
நம்பிய      பேர்களுக்கு     நற்கதி      அருள்வானம்மா

பாம்பணை    மெத்தையில்    படுப்பது     பரந்தாமன்    ---அவனை
பணிந்தவர்   இல்லம்      பாரினில்    ஜொலிக்குமம்மா
நம்பிய    ஏழைக்கும்     நல்வழி     கிடைக்குமம்மா    --உலக
நாயகன்    அருளாலே        நானிலம்     செழிக்குமம்மா

திருமால்     மார்பினில்    தேவியவள்     வாசம்    ---அவளை
தினமும்     துதித்தால்     சேர்ந்திடும்    திரவியமே
உருகாத    மனமெல்லாம்   உருகிடும்    நிச்சயமே    --அன்புடன்
உளமாற      நினைத்தாலோ    வரும்    உயர்வுகள்    சாத்தியமே

ஏகாதசி    நாளில்    நம்   இறைவனை     தொழுதிடுவோம்  ---இங்கு
இகபர      சுகங்களை    இன்றேனும்      பெற்றிடுவோம்
போகாத    வழியினில்   போகுதல்   தீதாகும்    --செய்யும்
புண்ணியம்    ஒன்றேதான்   நமக்கு   புனர்ஜென்மம்     அளிக்குமம்மா

பூலோக   வைகுந்தமான   திருவரங்கத்தில்   வைகுந்த   ஏகாதசி  வைபவத்தை
சிறப்பிக்க     அடியேனால்   இயற்றப்பட்டது ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக