வியாழன், 20 டிசம்பர், 2018

கண்கள் 621

நெஞ்சினில்    காதலி     நீயா    இல்லை  --உன்னை
நினைக்க    இன்பம்   வருமே   கொள்ளை
அஞ்சுதல்    உனக்கு    ஆகுமோ    கண்ணே ---நாம்
அன்பிலே   இணைந்து    வாழுவோம்    பெண்ணே

கண்களில்   கனவுகள்   உன்னால்    கண்டேன்   --உனது
கட்டழகெனும்    அமுதினை   நானே    உண்டேன்
பெண்களின்   பெருமை   நீயே    அன்றோ   --நான்
பித்தனாய்   திரிவது    முறையோ   நன்றோ

என்ன   சொல்லி    உந்தனை  அழைப்பேன்   --என்
இருவிழி    கண்ணீரில்   உன்னையும்    நனைப்பேன்
கன்னல்    தமிழும்    கசந்திடும்   நிலையே   --வாழும்
காலம்   முழுதும்   கைவிடல்      சரியோ

இரவும்   பகலும்   இனிமேல்     ஏது   ---வரும்
இன்பமோ   துன்பமோ   என்னுள்   வேண்டேன்
உறவினை    நினைத்து    உலகில்    வாழ்ந்தேன்  --இங்கு
உன்மனம்      வெறுத்திடில்    எங்கே    போவேன்

கால்கள்    செல்லும்    வழியில்    நடப்பேன்   --உனது
காதலை      புனிதமாய்     என்னுள்    நினைப்பேன்
நாளினைக்    கடந்து   நல்வழி   சேர்வேன்    --எந்தன்
நாயகி   உன்னையே     நானே   மணப்பேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக