நெஞ்சினில் காதலி நீயா இல்லை --உன்னை
நினைக்க இன்பம் வருமே கொள்ளை
அஞ்சுதல் உனக்கு ஆகுமோ கண்ணே ---நாம்
அன்பிலே இணைந்து வாழுவோம் பெண்ணே
கண்களில் கனவுகள் உன்னால் கண்டேன் --உனது
கட்டழகெனும் அமுதினை நானே உண்டேன்
பெண்களின் பெருமை நீயே அன்றோ --நான்
பித்தனாய் திரிவது முறையோ நன்றோ
என்ன சொல்லி உந்தனை அழைப்பேன் --என்
இருவிழி கண்ணீரில் உன்னையும் நனைப்பேன்
கன்னல் தமிழும் கசந்திடும் நிலையே --வாழும்
காலம் முழுதும் கைவிடல் சரியோ
இரவும் பகலும் இனிமேல் ஏது ---வரும்
இன்பமோ துன்பமோ என்னுள் வேண்டேன்
உறவினை நினைத்து உலகில் வாழ்ந்தேன் --இங்கு
உன்மனம் வெறுத்திடில் எங்கே போவேன்
கால்கள் செல்லும் வழியில் நடப்பேன் --உனது
காதலை புனிதமாய் என்னுள் நினைப்பேன்
நாளினைக் கடந்து நல்வழி சேர்வேன் --எந்தன்
நாயகி உன்னையே நானே மணப்பேன்
நினைக்க இன்பம் வருமே கொள்ளை
அஞ்சுதல் உனக்கு ஆகுமோ கண்ணே ---நாம்
அன்பிலே இணைந்து வாழுவோம் பெண்ணே
கண்களில் கனவுகள் உன்னால் கண்டேன் --உனது
கட்டழகெனும் அமுதினை நானே உண்டேன்
பெண்களின் பெருமை நீயே அன்றோ --நான்
பித்தனாய் திரிவது முறையோ நன்றோ
என்ன சொல்லி உந்தனை அழைப்பேன் --என்
இருவிழி கண்ணீரில் உன்னையும் நனைப்பேன்
கன்னல் தமிழும் கசந்திடும் நிலையே --வாழும்
காலம் முழுதும் கைவிடல் சரியோ
இரவும் பகலும் இனிமேல் ஏது ---வரும்
இன்பமோ துன்பமோ என்னுள் வேண்டேன்
உறவினை நினைத்து உலகில் வாழ்ந்தேன் --இங்கு
உன்மனம் வெறுத்திடில் எங்கே போவேன்
கால்கள் செல்லும் வழியில் நடப்பேன் --உனது
காதலை புனிதமாய் என்னுள் நினைப்பேன்
நாளினைக் கடந்து நல்வழி சேர்வேன் --எந்தன்
நாயகி உன்னையே நானே மணப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக