வெள்ளி, 11 ஜனவரி, 2019

தேன் 623

கண்களில்       மின்னலைக்      கண்டேன்    --அதனால்
கவிதைகள்       பாடிடக்      கற்றேன்
தென்றலில்      ஏறியே      பறப்பேன்      ---எந்தன்
தேவியே        உன்னைத்தான்     மணப்பேன்

என்னடி       செய்தாய்       மாயம்      ---எனக்கு
ஏனடி        மனதில்      காயம்
பொன்னென       நினைத்தேன்      உன்னை     ---நீயும்
புரிந்து      கொள்வாயோ      என்னை

வேரினில்      பழுத்திட்டப்        பலா     ---நீ
நேரில்      வருவது      உலா
கூறுவேன்       கவிதைகள்       கோடி    ---உன்னை
கொஞ்சவா      அனுதினம்       நாடி

நால்வகை     குணங்கள்       கொண்டு   ---நீ
நடந்து     வருவது    அழகினை   மொண்டு
சேலையில்      பூத்திட்ட     மலரே    ---உன்
சிறப்பினை      அறிந்தவர்    பலரே

உன்னைப்      பார்ப்பது      சுகமே    ---வரும்
உறவுகள்     என்றும்    ஜெயமே 
கண்களில்    கலக்கம்     ஏனடி       --நமது
காதல்       வாழ்வு      தேனடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக