கண்களில் மின்னலைக் கண்டேன் --அதனால்
கவிதைகள் பாடிடக் கற்றேன்
தென்றலில் ஏறியே பறப்பேன் ---எந்தன்
தேவியே உன்னைத்தான் மணப்பேன்
என்னடி செய்தாய் மாயம் ---எனக்கு
ஏனடி மனதில் காயம்
பொன்னென நினைத்தேன் உன்னை ---நீயும்
புரிந்து கொள்வாயோ என்னை
வேரினில் பழுத்திட்டப் பலா ---நீ
நேரில் வருவது உலா
கூறுவேன் கவிதைகள் கோடி ---உன்னை
கொஞ்சவா அனுதினம் நாடி
நால்வகை குணங்கள் கொண்டு ---நீ
நடந்து வருவது அழகினை மொண்டு
சேலையில் பூத்திட்ட மலரே ---உன்
சிறப்பினை அறிந்தவர் பலரே
உன்னைப் பார்ப்பது சுகமே ---வரும்
உறவுகள் என்றும் ஜெயமே
கண்களில் கலக்கம் ஏனடி --நமது
காதல் வாழ்வு தேனடி
கவிதைகள் பாடிடக் கற்றேன்
தென்றலில் ஏறியே பறப்பேன் ---எந்தன்
தேவியே உன்னைத்தான் மணப்பேன்
என்னடி செய்தாய் மாயம் ---எனக்கு
ஏனடி மனதில் காயம்
பொன்னென நினைத்தேன் உன்னை ---நீயும்
புரிந்து கொள்வாயோ என்னை
வேரினில் பழுத்திட்டப் பலா ---நீ
நேரில் வருவது உலா
கூறுவேன் கவிதைகள் கோடி ---உன்னை
கொஞ்சவா அனுதினம் நாடி
நால்வகை குணங்கள் கொண்டு ---நீ
நடந்து வருவது அழகினை மொண்டு
சேலையில் பூத்திட்ட மலரே ---உன்
சிறப்பினை அறிந்தவர் பலரே
உன்னைப் பார்ப்பது சுகமே ---வரும்
உறவுகள் என்றும் ஜெயமே
கண்களில் கலக்கம் ஏனடி --நமது
காதல் வாழ்வு தேனடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக