வெள்ளி, 11 ஜனவரி, 2019

மாரியம்மா 625

கண்ணனூர்        மாரியம்மா    --எம்மை
காத்திட       வாருமம்மா
உன்னைஎண்ணிப்      பாடுகிறோம்    --நீ
ஓடிவந்து      காருமம்மா

வேப்பிலையின்    சாற்றினிலே     --என்றும்
வீற்றிருக்கும்     திருமகளே
காப்பதற்கு    உன்னையன்றி    --எங்கள்
கண்களுக்கு     தெரியவில்லை

மஞ்சளைக்    காப்பத்ற்கு    ---மண்ணில்
மாதரசி      நீ துணையல்லவோ
அஞ்சலென்ற    சொல்லினிலே    ---தாயே
அகிலமதைக்      காத்திடம்மா

கண்ணுக்கு      கண்ணாவாய்  ---ஏழை
கண்களுக்குப்    பொன்னாவாய்
பெண்குலம்    வாழ்வதற்கு      ---உலகில்
பேருதவி     செய்திடுவாய்

மாரியம்மா    மனசு வைத்தால்    ---எல்லா
மாதங்களும்      மழை பொழியும்
கோரிக்குரல்   கொடுத்து விட்டால்    ---வந்த
கொடுவினைகள்     தீர்ந்துவிடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக