கண்ணனூர் மாரியம்மா --எம்மை
காத்திட வாருமம்மா
உன்னைஎண்ணிப் பாடுகிறோம் --நீ
ஓடிவந்து காருமம்மா
வேப்பிலையின் சாற்றினிலே --என்றும்
வீற்றிருக்கும் திருமகளே
காப்பதற்கு உன்னையன்றி --எங்கள்
கண்களுக்கு தெரியவில்லை
மஞ்சளைக் காப்பத்ற்கு ---மண்ணில்
மாதரசி நீ துணையல்லவோ
அஞ்சலென்ற சொல்லினிலே ---தாயே
அகிலமதைக் காத்திடம்மா
கண்ணுக்கு கண்ணாவாய் ---ஏழை
கண்களுக்குப் பொன்னாவாய்
பெண்குலம் வாழ்வதற்கு ---உலகில்
பேருதவி செய்திடுவாய்
மாரியம்மா மனசு வைத்தால் ---எல்லா
மாதங்களும் மழை பொழியும்
கோரிக்குரல் கொடுத்து விட்டால் ---வந்த
கொடுவினைகள் தீர்ந்துவிடும்
காத்திட வாருமம்மா
உன்னைஎண்ணிப் பாடுகிறோம் --நீ
ஓடிவந்து காருமம்மா
வேப்பிலையின் சாற்றினிலே --என்றும்
வீற்றிருக்கும் திருமகளே
காப்பதற்கு உன்னையன்றி --எங்கள்
கண்களுக்கு தெரியவில்லை
மஞ்சளைக் காப்பத்ற்கு ---மண்ணில்
மாதரசி நீ துணையல்லவோ
அஞ்சலென்ற சொல்லினிலே ---தாயே
அகிலமதைக் காத்திடம்மா
கண்ணுக்கு கண்ணாவாய் ---ஏழை
கண்களுக்குப் பொன்னாவாய்
பெண்குலம் வாழ்வதற்கு ---உலகில்
பேருதவி செய்திடுவாய்
மாரியம்மா மனசு வைத்தால் ---எல்லா
மாதங்களும் மழை பொழியும்
கோரிக்குரல் கொடுத்து விட்டால் ---வந்த
கொடுவினைகள் தீர்ந்துவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக