ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஜெயம் 628

உன்னோடு      நான்சேர      ---ஒரு
உன்னதம்         உருவாகும்
தேனோடு       பால்  சேர     ---மனதில்
தெவிட்டாத     சுகமாகும்

மடி மீதில்      தலை சாய்ந்தால்    ---பல
மயக்கங்கள்     வரவாகும்
கொடி மீதில்    கனிகளாட   ---நெஞ்சில்
கோடி இன்பம்      நிறைவாகும்

இரண்டுமே     ஒன்றானால் ---புது
இன்னிசை    வெளியாகும்
இதயங்கள்     நன்றானால்    ---வாழ்வில்
ஏற்றங்கள்      தெளிவாகும்

கண்ணோடு      கண் சேர  ---பல
கவிதைகள்     பிறப்பாகும்
மண்ணோடு     மழை  சேர்ந்தால்    ---உழவர்க்கு
மகிழ்ச்சியே      நிலையாகும்

எண்ணங்கள்      நல்லதானால்   ---உலகில்
எல்லாமே      நலமாகும்
ஏந்திழை      துணை  வந்தால்    ---இங்கு
எந்நாளும்      ஜெயமாகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக