உன்னோடு நான்சேர ---ஒரு
உன்னதம் உருவாகும்
தேனோடு பால் சேர ---மனதில்
தெவிட்டாத சுகமாகும்
மடி மீதில் தலை சாய்ந்தால் ---பல
மயக்கங்கள் வரவாகும்
கொடி மீதில் கனிகளாட ---நெஞ்சில்
கோடி இன்பம் நிறைவாகும்
இரண்டுமே ஒன்றானால் ---புது
இன்னிசை வெளியாகும்
இதயங்கள் நன்றானால் ---வாழ்வில்
ஏற்றங்கள் தெளிவாகும்
கண்ணோடு கண் சேர ---பல
கவிதைகள் பிறப்பாகும்
மண்ணோடு மழை சேர்ந்தால் ---உழவர்க்கு
மகிழ்ச்சியே நிலையாகும்
எண்ணங்கள் நல்லதானால் ---உலகில்
எல்லாமே நலமாகும்
ஏந்திழை துணை வந்தால் ---இங்கு
எந்நாளும் ஜெயமாகும்
உன்னதம் உருவாகும்
தேனோடு பால் சேர ---மனதில்
தெவிட்டாத சுகமாகும்
மடி மீதில் தலை சாய்ந்தால் ---பல
மயக்கங்கள் வரவாகும்
கொடி மீதில் கனிகளாட ---நெஞ்சில்
கோடி இன்பம் நிறைவாகும்
இரண்டுமே ஒன்றானால் ---புது
இன்னிசை வெளியாகும்
இதயங்கள் நன்றானால் ---வாழ்வில்
ஏற்றங்கள் தெளிவாகும்
கண்ணோடு கண் சேர ---பல
கவிதைகள் பிறப்பாகும்
மண்ணோடு மழை சேர்ந்தால் ---உழவர்க்கு
மகிழ்ச்சியே நிலையாகும்
எண்ணங்கள் நல்லதானால் ---உலகில்
எல்லாமே நலமாகும்
ஏந்திழை துணை வந்தால் ---இங்கு
எந்நாளும் ஜெயமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக