கண்ணில் வரும் காட்சியெல்லாம் --இங்கே
எந்தன் கண்ண பெருமானே
கருணை மழை பொழிய வேணும் --நித்தம்
எந்தன் கண்ண பெருமானே
உன்னிடத்தில் ஆசை வைத்தேன் --நான்
எந்தன் கண்ண பெருமானே
உள்ள மெல்லாம் சிலிர்க்குதய்யா --என்றும்
எந்தன் கண்ண பெருமானே
மின்னலெனத் நீயும் தோன்றுகிறாய் --வானில்
எந்தன் கண்ண பெருமானே
மேனி யெங்கும் இன்பமய்யா -நலமே
எந்தன் கண்ண பெருமானே
நாவினில் இனிப்பவன் நீ --நாளும்
எந்தன் கண்ண பெருமானே
நல்லவரைக் காத்து நிற்பாய் -உலகில்
எந்தன் கண்ண பெருமானே
வளமையெலாம் பொங்க வேணும் --வாழ்வில்
எந்தன் கண்ண பெருமானே
வானம் மாரி பெய்ய வேணும் --சுகமாய்
எந்தன் கண்ண பெருமானே
எங்கும் இன்பம் நிறைய வேணும் -நிறைவாய்
எந்தன் கண்ண பெருமானே
ஏழை சனம் வாழ்வெனும் --இனிதாய்
எந்தன் கண்ண பெருமானே
எந்தன் கண்ண பெருமானே
கருணை மழை பொழிய வேணும் --நித்தம்
எந்தன் கண்ண பெருமானே
உன்னிடத்தில் ஆசை வைத்தேன் --நான்
எந்தன் கண்ண பெருமானே
உள்ள மெல்லாம் சிலிர்க்குதய்யா --என்றும்
எந்தன் கண்ண பெருமானே
மின்னலெனத் நீயும் தோன்றுகிறாய் --வானில்
எந்தன் கண்ண பெருமானே
மேனி யெங்கும் இன்பமய்யா -நலமே
எந்தன் கண்ண பெருமானே
நாவினில் இனிப்பவன் நீ --நாளும்
எந்தன் கண்ண பெருமானே
நல்லவரைக் காத்து நிற்பாய் -உலகில்
எந்தன் கண்ண பெருமானே
வளமையெலாம் பொங்க வேணும் --வாழ்வில்
எந்தன் கண்ண பெருமானே
வானம் மாரி பெய்ய வேணும் --சுகமாய்
எந்தன் கண்ண பெருமானே
எங்கும் இன்பம் நிறைய வேணும் -நிறைவாய்
எந்தன் கண்ண பெருமானே
ஏழை சனம் வாழ்வெனும் --இனிதாய்
எந்தன் கண்ண பெருமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக