சனி, 15 செப்டம்பர், 2018

vகணபதி 603

 உலகத்தின்     முதல்வன்    வருநாள்   --அந்த
 உத்தமத்    தலைவனின்    திருநாள்
 களங்கமில்லா   பிள்ளைக்கு   ஒருநாள்   --நம்மைக்
 காக்கும்      கணபதி    வரும்    நாள்

 பிரணவப்    பொருளாய்    வந்தார்  --நமக்கு
 பேரருள்     தினமும்    புரிவார்
 கருணையின்    உருவமும்    அவரே  --அவர்
 காலடி     தொழுவது      பலமே

 தம்பிக்கு    திருமணம்     முடித்தார்   --பெற்ற
 தாய்க்கும்     காவலாய்    நின்றார்
 நம்பிய    அடியவர்    காக்க     --இங்கு
 தும்பிக்கையால்     துன்பங்கள்    தீர்ப்பார்

 நினைத்தவர்    மனதில்   நிற்பார்  --தன்
 நீல விழியால்    நம்மையும்    அழைப்பார்
 களைய்க்கின்ற   பொழுதிலும்    காப்பார்   --வரும்
 கவலைகள்    மறந்திடச்      செய்வார்

 அவ்வைக்கு      அபயம்     தந்தார்   --அவரை
 அகிலமும்     வணங்கிட    வைத்தார்
 கொழுக்கட்டை    படைத்தால்    புசிப்பார்    --என்றும்
 குழந்தைகள்    நடுவினில்    இருப்பார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக