இழந்தது போதும் எழுந்திடு --நீ
இரவு பகலாய் உழைத்திடு
பலம் பெறும் உடலினை அமைத்திடு --அதில்
பயனுள்ள வழியினில் சிறந்திடு
செல்வங்கள் நிறையவே சேர்த்திடு --அதை
சேமிக்கும் வழியினை அறிந்திடு
உள்ளத்தில் உண்மையை வளர்த்திடு --என்றும்
உத்தமன் எனும் பெயர் பெற்றிடு
பிறரை மதிக்கத் தெரிந்திடு --அது
பெருமையை தருமெனப் புரிந்திடு
மறந்தும் பிறரினை இகழாதே --தினம்
மனதில் மகிழ்வினை ப் பெருக்கிடு
எத்தனை மனிதர்கள் பிறந்தார்கள் --முடிவில்
எங்கோ சென்று மறைந்தார்கள்
புத்தனை உலகம் நினைக்கிறதே --அவரை
பொன்னென போற்றித் துதிக்கிறதே
நாளும் நமக்கென வாழ்ந்துவிடு --உன்னை
நம்பிய பேருக்கும் வாழ்வு கொடு
வீழ்ந்திடும் கண்ணீர் துடைத்துவிடு --நீயும்
வெற்றி வீரனாய் விளங்கி விடு
இரவு பகலாய் உழைத்திடு
பலம் பெறும் உடலினை அமைத்திடு --அதில்
பயனுள்ள வழியினில் சிறந்திடு
செல்வங்கள் நிறையவே சேர்த்திடு --அதை
சேமிக்கும் வழியினை அறிந்திடு
உள்ளத்தில் உண்மையை வளர்த்திடு --என்றும்
உத்தமன் எனும் பெயர் பெற்றிடு
பிறரை மதிக்கத் தெரிந்திடு --அது
பெருமையை தருமெனப் புரிந்திடு
மறந்தும் பிறரினை இகழாதே --தினம்
மனதில் மகிழ்வினை ப் பெருக்கிடு
எத்தனை மனிதர்கள் பிறந்தார்கள் --முடிவில்
எங்கோ சென்று மறைந்தார்கள்
புத்தனை உலகம் நினைக்கிறதே --அவரை
பொன்னென போற்றித் துதிக்கிறதே
நாளும் நமக்கென வாழ்ந்துவிடு --உன்னை
நம்பிய பேருக்கும் வாழ்வு கொடு
வீழ்ந்திடும் கண்ணீர் துடைத்துவிடு --நீயும்
வெற்றி வீரனாய் விளங்கி விடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக