கருணை முகமோ ஜொலிக்கும் --அவள்
கண்கள் அருளினை கொழிக்கும்
அரிதினும் அரிதாம் அவளே --நாம்
அனுகினால் ஆயிரம் பலன்களே
ஏழை வீட்டிலும் இருப்பாள் --அவர்
இன்னலைத் தீர்த்தே சிரிப்பாள்
கோழையும் வீரனாய் ஆவான் --அவன்
குடும்பம் நல்வழி செல்லும்
கண்ணீர் மழையினில் நனைப்பாய் --நல்ல
கதி பெற அவளையே நினைப்பாய்
பன்னீர் தெளித்துமே பூசை --அவள்
பாதமலர் மேல்தான் ஆசை
இரவும் பகலாய் மாறும் --அவள்
நினைத்தால் எல்லாம் சேரும்
உறவினைப் பெருக்கிட வருவாள் --நாம்
உருப்பட நேர்வழி தருவாள்
திருநாள் இதுதான் என்பேன் --அம்மா
திருவடி பற்றியே கிடப்பேன்
வருவாள் எந்தன் மனவாசல் --அதனால்
வாழ்வினில் இல்லையே பூசல்
கண்கள் அருளினை கொழிக்கும்
அரிதினும் அரிதாம் அவளே --நாம்
அனுகினால் ஆயிரம் பலன்களே
ஏழை வீட்டிலும் இருப்பாள் --அவர்
இன்னலைத் தீர்த்தே சிரிப்பாள்
கோழையும் வீரனாய் ஆவான் --அவன்
குடும்பம் நல்வழி செல்லும்
கண்ணீர் மழையினில் நனைப்பாய் --நல்ல
கதி பெற அவளையே நினைப்பாய்
பன்னீர் தெளித்துமே பூசை --அவள்
பாதமலர் மேல்தான் ஆசை
இரவும் பகலாய் மாறும் --அவள்
நினைத்தால் எல்லாம் சேரும்
உறவினைப் பெருக்கிட வருவாள் --நாம்
உருப்பட நேர்வழி தருவாள்
திருநாள் இதுதான் என்பேன் --அம்மா
திருவடி பற்றியே கிடப்பேன்
வருவாள் எந்தன் மனவாசல் --அதனால்
வாழ்வினில் இல்லையே பூசல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக