திங்கள், 17 செப்டம்பர், 2018

மனவாசல் 605

 கருணை     முகமோ    ஜொலிக்கும்   --அவள்
 கண்கள்     அருளினை    கொழிக்கும்
 அரிதினும்   அரிதாம்     அவளே --நாம்
அனுகினால்     ஆயிரம்      பலன்களே

 ஏழை       வீட்டிலும்      இருப்பாள்  --அவர்
 இன்னலைத்     தீர்த்தே    சிரிப்பாள்
 கோழையும்    வீரனாய்    ஆவான்   --அவன்
 குடும்பம்      நல்வழி      செல்லும்

 கண்ணீர்     மழையினில்    நனைப்பாய்    --நல்ல
 கதி பெற      அவளையே    நினைப்பாய்
 பன்னீர்    தெளித்துமே      பூசை    --அவள்
 பாதமலர்     மேல்தான்      ஆசை

 இரவும்      பகலாய்      மாறும்   --அவள்
 நினைத்தால்      எல்லாம்     சேரும்
 உறவினைப்    பெருக்கிட    வருவாள்   --நாம்
 உருப்பட     நேர்வழி       தருவாள்

 திருநாள்    இதுதான்     என்பேன்    --அம்மா
 திருவடி    பற்றியே    கிடப்பேன்
 வருவாள்   எந்தன்     மனவாசல்  --அதனால்
 வாழ்வினில்      இல்லையே     பூசல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக