வருவாய் முருகா மயில் மீதினிலே --நல்
வரமே அருள்வாய் இகவாழ்வினிலே
குருவாய் அமர்ந்தாய் சுவாமிமலையில் --திரு
குமரா மறவேன் எனது வாழவில்
அலைசூழ் செந்தூர் அழகிய வேலா --ஏழை
அகமே நிறைவாய் அன்பெனும் பாலா
கலைசூழ் குகனே கதிர்வேலன் நீயே --நினது
கருணை பொழிந்து காத்திடு உலகையே
தமிலெனும் மொழியில் தலைமகன் நீதான் --உனது
தாளடி பணிந்தால் சகலமும் ஜெயம்தான்
அமிழ்தினும் இனித்திடும் ஆறுமுக பாலா --தேம்பும்
அடியவர் நலம்பெற அருளிடும் சீலா
பழத்தினால் அன்று பழனியில் நின்றாய் --சிவ
பழமாய்க் கனிந்தே பக்தரைக் காப்பாய்
களைத்திடும் மாந்தர் களித்திட வைப்பாய் --மண்ணில்
காலம் முழுதும் கருணையில் ஜொலிப்பாய்
தமிழினில் பாடி தலைவனைப் பணிவோம் --அவன்
தாளடி தொழுது இந்த தரணியில் உயர்வோம்
அழகா முருகா எங்கள் அருகினில் வா வா --உன்னை
அனுதினம் தொழுவோம் அன்பினைத் தா தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக