ஞாயிறு, 11 நவம்பர், 2018

அழகன் 614

வருவாய்     முருகா     மயில்  மீதினிலே   --நல் 
வரமே       அருள்வாய்     இகவாழ்வினிலே 
குருவாய்     அமர்ந்தாய்   சுவாமிமலையில்   --திரு 
குமரா     மறவேன்      எனது    வாழவில் 

அலைசூழ்     செந்தூர்     அழகிய      வேலா     --ஏழை 
அகமே    நிறைவாய்      அன்பெனும்    பாலா 
கலைசூழ்     குகனே     கதிர்வேலன்    நீயே   --நினது 
கருணை    பொழிந்து      காத்திடு     உலகையே 

தமிலெனும்      மொழியில்      தலைமகன்       நீதான்   --உனது 
தாளடி      பணிந்தால்     சகலமும்      ஜெயம்தான் 
அமிழ்தினும்     இனித்திடும்     ஆறுமுக   பாலா    --தேம்பும் 
அடியவர்    நலம்பெற      அருளிடும்      சீலா 

பழத்தினால்    அன்று    பழனியில்     நின்றாய்    --சிவ
பழமாய்க்    கனிந்தே     பக்தரைக்    காப்பாய் 
களைத்திடும்    மாந்தர்     களித்திட    வைப்பாய்    --மண்ணில் 
காலம்     முழுதும்    கருணையில்    ஜொலிப்பாய் 

தமிழினில்      பாடி    தலைவனைப்      பணிவோம்   --அவன் 
தாளடி      தொழுது   இந்த    தரணியில்    உயர்வோம் 
அழகா     முருகா     எங்கள்    அருகினில்     வா     வா   --உன்னை 
அனுதினம்       தொழுவோம்      அன்பினைத்       தா    தா  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக