நினைவில் நிலையாய் இருப்பவள் --என்
நெஞ்சில் துணையாய் வசிப்பவள்
கனவினில் தினமும் கலப்பவள் -அந்த
கன்னி மயிலின் பேரென்னவோ
முல்லை மலராய் சிரிப்பவன் --காதல்
மோகத்தை அள்ளிக் கொடுப்பவள்
பள்ளி சுகத்தை தருபவள் --அந்த
பைங்கிளி என்பவள் பேரென்னவோ
மீனைப் போல் கண்கள் கொண்டவள் --பலரை
மின்சிடும் அழகினைக் கண்டவள்
தேனைப் போல் இனிமை ஆனவள் --அன்பு
தேவதை என்பவள் பேரென்னவோ
நிழலினைப் போலவே தொடர்பவள் --நெஞ்சம்
நிறைந்திட என்மேல் படர்பவள்
கழலினைக் கால்களில் அணிபவள் --அற்புத
காரிகை என்பவள் பேரென்னவோ
கவிதைக்குப் பொருளாய் வருபவள் --எனக்கு
காதலை அள்ளியே தருபவள்
உதயநிலைவாய் வானில் ஒளிர்பவள் --இந்த
உத்தமி என்பவள் பேரென்னவோ
நெஞ்சில் துணையாய் வசிப்பவள்
கனவினில் தினமும் கலப்பவள் -அந்த
கன்னி மயிலின் பேரென்னவோ
முல்லை மலராய் சிரிப்பவன் --காதல்
மோகத்தை அள்ளிக் கொடுப்பவள்
பள்ளி சுகத்தை தருபவள் --அந்த
பைங்கிளி என்பவள் பேரென்னவோ
மீனைப் போல் கண்கள் கொண்டவள் --பலரை
மின்சிடும் அழகினைக் கண்டவள்
தேனைப் போல் இனிமை ஆனவள் --அன்பு
தேவதை என்பவள் பேரென்னவோ
நிழலினைப் போலவே தொடர்பவள் --நெஞ்சம்
நிறைந்திட என்மேல் படர்பவள்
கழலினைக் கால்களில் அணிபவள் --அற்புத
காரிகை என்பவள் பேரென்னவோ
கவிதைக்குப் பொருளாய் வருபவள் --எனக்கு
காதலை அள்ளியே தருபவள்
உதயநிலைவாய் வானில் ஒளிர்பவள் --இந்த
உத்தமி என்பவள் பேரென்னவோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக