வியாழன், 22 நவம்பர், 2018

உதயநிலவு 616

நினைவில்    நிலையாய்    இருப்பவள்   --என்
நெஞ்சில்     துணையாய்    வசிப்பவள்
கனவினில்    தினமும்    கலப்பவள்    -அந்த
கன்னி     மயிலின்     பேரென்னவோ

முல்லை   மலராய்    சிரிப்பவன்   --காதல்
மோகத்தை   அள்ளிக்   கொடுப்பவள்
பள்ளி      சுகத்தை    தருபவள்    --அந்த
பைங்கிளி     என்பவள்   பேரென்னவோ

மீனைப் போல்      கண்கள்    கொண்டவள்   --பலரை
மின்சிடும்      அழகினைக்    கண்டவள்
தேனைப் போல்    இனிமை    ஆனவள்   --அன்பு
தேவதை    என்பவள்     பேரென்னவோ

நிழலினைப்    போலவே    தொடர்பவள்   --நெஞ்சம்
நிறைந்திட    என்மேல்     படர்பவள்
கழலினைக்   கால்களில்    அணிபவள்   --அற்புத
காரிகை     என்பவள்    பேரென்னவோ

கவிதைக்குப்    பொருளாய்    வருபவள்   --எனக்கு
காதலை   அள்ளியே    தருபவள் 
உதயநிலைவாய்     வானில்   ஒளிர்பவள்    --இந்த
உத்தமி      என்பவள்     பேரென்னவோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக