கலையெழில் வடிவாக காட்சி தருபவளே --இங்கு
கற்பக வல்லி எம்மைக் காத்திட வருபவளே
நிலையாக வாழ்வதற்கு நீயருள் புரிவாயே --உனை
நினைந்தவர் நலம்பெற நிம்மதி அருள்வாயே
கைகளில் மலரெடுத்து காசினி ஆள்பவளே --தமிழ்
கவிஞர்கள் நாவினிலே கனிவாய் அமர்ந்தவளே
மயிலைப் பதிவாழும் மங்கலத் தாயல்லவோ --ஏழைகள்
மகிழ்ந்திட வரமருளும் மாதாவும் நீயல்லவோ
நெற்றியிலே குங்குமம் நிறைவான புன்னகையில் --இங்கு
பற்றிவந்த துயரமெல்லாம் பறந்தோடிப் போகுமம்மா
வெற்றி வெற்றியென்றே விண்ணதிற முழங்குதம்மா --வடி
வேலனை ஈன்றவளே விமலனின் சோதரியே
அலை பாயும் கடல்நடுவே உனதண்ணனின் குடியிருப்பு --எம்
அன்னையே உயிர்களுக்கு எந்நாளும் நீ காப்பு
நிலையான வாழ்வளிக்க நேரினில் வருபவளே --என்றும்
நித்தமும் தொழுதிடுவோம் நிர்மலன் தேவியே
ஏழை நெஞ்சில் இன்பம் நிலைத்திட வேண்டும் --எங்கள்
ஈஸ்வரி மனது வைத்தால் இன்பங்கள் தேடிவரும்
நாளினைக் கழிப்பதற்கு நாயகி துணையிரும்மா --நாங்கள்
நன்றியைப் பொங்கல் வைத்து நல்லபடி காட்டிடுவோம்
கற்பக வல்லி எம்மைக் காத்திட வருபவளே
நிலையாக வாழ்வதற்கு நீயருள் புரிவாயே --உனை
நினைந்தவர் நலம்பெற நிம்மதி அருள்வாயே
கைகளில் மலரெடுத்து காசினி ஆள்பவளே --தமிழ்
கவிஞர்கள் நாவினிலே கனிவாய் அமர்ந்தவளே
மயிலைப் பதிவாழும் மங்கலத் தாயல்லவோ --ஏழைகள்
மகிழ்ந்திட வரமருளும் மாதாவும் நீயல்லவோ
நெற்றியிலே குங்குமம் நிறைவான புன்னகையில் --இங்கு
பற்றிவந்த துயரமெல்லாம் பறந்தோடிப் போகுமம்மா
வெற்றி வெற்றியென்றே விண்ணதிற முழங்குதம்மா --வடி
வேலனை ஈன்றவளே விமலனின் சோதரியே
அலை பாயும் கடல்நடுவே உனதண்ணனின் குடியிருப்பு --எம்
அன்னையே உயிர்களுக்கு எந்நாளும் நீ காப்பு
நிலையான வாழ்வளிக்க நேரினில் வருபவளே --என்றும்
நித்தமும் தொழுதிடுவோம் நிர்மலன் தேவியே
ஏழை நெஞ்சில் இன்பம் நிலைத்திட வேண்டும் --எங்கள்
ஈஸ்வரி மனது வைத்தால் இன்பங்கள் தேடிவரும்
நாளினைக் கழிப்பதற்கு நாயகி துணையிரும்மா --நாங்கள்
நன்றியைப் பொங்கல் வைத்து நல்லபடி காட்டிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக