சனி, 6 அக்டோபர், 2018

மாதா 608

 கனிந்திடும்     கண்களில்     கருணை     உண்டு   --உந்தன்
 கமலமலர்       பாதங்கள்   கதிதனை     யளிக்கும்
 நினைந்தவர்     நெஞ்சினில்     நீயே     வருவாய்   --நினை
 நித்தமும்     தொழுதால்       பலன்களும்    மிகுமே

 அழைத்திடும்    குரலுக்கு      ஆதரவு      தருவாய்  --உன்
 அடியவர்     நலமுற      அனைத்தும்      அளிப்பாய்
 பிழைகளை    மறந்திடும்    பேரருள்     நீயே    --உமை
பின்தொடர     வாழ்வில்      பெருகிடும்     பலமே

 எங்கும்      எதிலும்      எல்லாம்       இருப்பாய்   --உன்னால்
 இகபர     சுகங்கள்       என்றும்    கிடைக்கும்
 பொங்கும்     நிலவாய்    பூமியைக்    காப்பாய்  --தினம்
 போற்றிப்     பாடுவோம்       பொற்றாமரைச்    செல்வியே

 இயங்கிடும்    பொருள்களில்    இருப்பவள்     நீயே   --ஏழையர்
 துன்பங்கள்       போக்கிடும்       தாயே
 மயங்கிடும்    நிலையினை    மாற்றிட    வருவாய்  --எங்கள்
 மாதா      தேவி    நீயும்     மனம்    கனிவாயே

போற்றித்    தொழுவதால்    புண்ணியம்    அடைவோம்    --என்றும்
 புவனம்    காத்திடும்      புனித     ஜோதியே
ஏற்றம்      பெற்றிட    இனிதே     அருள்வாய்   ==எம்
ஈஸ்வரித்    தாயே    இறைஞசினோம்      உம்மையே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக