கனிந்திடும் கண்களில் கருணை உண்டு --உந்தன்
கமலமலர் பாதங்கள் கதிதனை யளிக்கும்
நினைந்தவர் நெஞ்சினில் நீயே வருவாய் --நினை
நித்தமும் தொழுதால் பலன்களும் மிகுமே
அழைத்திடும் குரலுக்கு ஆதரவு தருவாய் --உன்
அடியவர் நலமுற அனைத்தும் அளிப்பாய்
பிழைகளை மறந்திடும் பேரருள் நீயே --உமை
பின்தொடர வாழ்வில் பெருகிடும் பலமே
எங்கும் எதிலும் எல்லாம் இருப்பாய் --உன்னால்
இகபர சுகங்கள் என்றும் கிடைக்கும்
பொங்கும் நிலவாய் பூமியைக் காப்பாய் --தினம்
போற்றிப் பாடுவோம் பொற்றாமரைச் செல்வியே
இயங்கிடும் பொருள்களில் இருப்பவள் நீயே --ஏழையர்
துன்பங்கள் போக்கிடும் தாயே
மயங்கிடும் நிலையினை மாற்றிட வருவாய் --எங்கள்
மாதா தேவி நீயும் மனம் கனிவாயே
போற்றித் தொழுவதால் புண்ணியம் அடைவோம் --என்றும்
புவனம் காத்திடும் புனித ஜோதியே
ஏற்றம் பெற்றிட இனிதே அருள்வாய் ==எம்
ஈஸ்வரித் தாயே இறைஞசினோம் உம்மையே
கமலமலர் பாதங்கள் கதிதனை யளிக்கும்
நினைந்தவர் நெஞ்சினில் நீயே வருவாய் --நினை
நித்தமும் தொழுதால் பலன்களும் மிகுமே
அழைத்திடும் குரலுக்கு ஆதரவு தருவாய் --உன்
அடியவர் நலமுற அனைத்தும் அளிப்பாய்
பிழைகளை மறந்திடும் பேரருள் நீயே --உமை
பின்தொடர வாழ்வில் பெருகிடும் பலமே
எங்கும் எதிலும் எல்லாம் இருப்பாய் --உன்னால்
இகபர சுகங்கள் என்றும் கிடைக்கும்
பொங்கும் நிலவாய் பூமியைக் காப்பாய் --தினம்
போற்றிப் பாடுவோம் பொற்றாமரைச் செல்வியே
இயங்கிடும் பொருள்களில் இருப்பவள் நீயே --ஏழையர்
துன்பங்கள் போக்கிடும் தாயே
மயங்கிடும் நிலையினை மாற்றிட வருவாய் --எங்கள்
மாதா தேவி நீயும் மனம் கனிவாயே
போற்றித் தொழுவதால் புண்ணியம் அடைவோம் --என்றும்
புவனம் காத்திடும் புனித ஜோதியே
ஏற்றம் பெற்றிட இனிதே அருள்வாய் ==எம்
ஈஸ்வரித் தாயே இறைஞசினோம் உம்மையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக