வெள்ளி, 19 அக்டோபர், 2018

சரஸ்வதி 611

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருப்பாள்   --வீணை
கூட்டும்         நல்லிசையாய்        ஒளிர்வாள்
கள்ளமற்ற       வெள்ளை       மனது   ---அவள்
கவிஞர்கள்       நாவினில்       உறையும்      அமுது

பொங்கும்       தமிழாய்       புனலெடுப்பாள்   --இங்கு
பொருநை       வைகை     பெருக்காய்      வருவாள்
கங்கை       காவிரி         கற்பகக்     கனியே     --இந்த
காசினி      வாழ்ந்திடக்      கைத்தலம்      கொடுப்பாள்

எல்லாக்      கலைகளின்   இருப்பிடம்      அவளே  --ஏழை
குடிசையில்     நுழைபவள்      இவள்  தான்
நல்லோர்     வாழ்ந்திட      நலமே      அருள்வாள்   --உலகில்
நன்னெறி      தழைத்திட      இந்த நாயகி     துணையே

கொற்றம்    கொடிபடை       குரலுக்கு     அடிமை     --குளிர்
முகம்        கண்டால்       விலகிடும்     மடமை
கற்ற புலவர்     தாயின்      கருணையால்    வாழ்வார்    --இவள்
காலடி      பணிந்தால்    மலையென     உயர்வார்

தாயைப்     போற்றி     தமிழினில்     பாடு    --அவள்
தயவினில்     தானே      சிறந்திடும்   நாடு
ஆயகலைகள்    அளிப்பவள்     அன்னை    --அகம்
மகிழ்ந்தாலே     அடையலாம்     பொன்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக