வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் --வீணை
கூட்டும் நல்லிசையாய் ஒளிர்வாள்
கள்ளமற்ற வெள்ளை மனது ---அவள்
கவிஞர்கள் நாவினில் உறையும் அமுது
பொங்கும் தமிழாய் புனலெடுப்பாள் --இங்கு
பொருநை வைகை பெருக்காய் வருவாள்
கங்கை காவிரி கற்பகக் கனியே --இந்த
காசினி வாழ்ந்திடக் கைத்தலம் கொடுப்பாள்
எல்லாக் கலைகளின் இருப்பிடம் அவளே --ஏழை
குடிசையில் நுழைபவள் இவள் தான்
நல்லோர் வாழ்ந்திட நலமே அருள்வாள் --உலகில்
நன்னெறி தழைத்திட இந்த நாயகி துணையே
கொற்றம் கொடிபடை குரலுக்கு அடிமை --குளிர்
முகம் கண்டால் விலகிடும் மடமை
கற்ற புலவர் தாயின் கருணையால் வாழ்வார் --இவள்
காலடி பணிந்தால் மலையென உயர்வார்
தாயைப் போற்றி தமிழினில் பாடு --அவள்
தயவினில் தானே சிறந்திடும் நாடு
ஆயகலைகள் அளிப்பவள் அன்னை --அகம்
மகிழ்ந்தாலே அடையலாம் பொன்னை
கூட்டும் நல்லிசையாய் ஒளிர்வாள்
கள்ளமற்ற வெள்ளை மனது ---அவள்
கவிஞர்கள் நாவினில் உறையும் அமுது
பொங்கும் தமிழாய் புனலெடுப்பாள் --இங்கு
பொருநை வைகை பெருக்காய் வருவாள்
கங்கை காவிரி கற்பகக் கனியே --இந்த
காசினி வாழ்ந்திடக் கைத்தலம் கொடுப்பாள்
எல்லாக் கலைகளின் இருப்பிடம் அவளே --ஏழை
குடிசையில் நுழைபவள் இவள் தான்
நல்லோர் வாழ்ந்திட நலமே அருள்வாள் --உலகில்
நன்னெறி தழைத்திட இந்த நாயகி துணையே
கொற்றம் கொடிபடை குரலுக்கு அடிமை --குளிர்
முகம் கண்டால் விலகிடும் மடமை
கற்ற புலவர் தாயின் கருணையால் வாழ்வார் --இவள்
காலடி பணிந்தால் மலையென உயர்வார்
தாயைப் போற்றி தமிழினில் பாடு --அவள்
தயவினில் தானே சிறந்திடும் நாடு
ஆயகலைகள் அளிப்பவள் அன்னை --அகம்
மகிழ்ந்தாலே அடையலாம் பொன்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக