புதன், 18 டிசம்பர், 2019

பன்னீர் 8 1 4

கண்ணால்           அவளைக்       கண்டேன்    ----பொங்கும்
காதல்       அவள்  மேல்       கொண்டேன்
பொன்னால்      செய்ததோ     பூவை   ----எனக்கு
புகலிடம்       அவள்தான்      தேவை

மின்னாமல்         வருகின்ற      மழையோ   ----அவள்
மேனி        எழில்வண்ணச்      சிலையோ
கண்ணால்      என்னையே     வளைத்தாள்    ----காதல்
கணைகளை      என்மேல்     தொடுத்தாள்

என்னையே       மறந்து       போனேன்   ----அட
இரவே       பகலாய்ப்       போனது
தென்னை      தருவது        இளநீர்   ---அவளை
தினமும்      நினைத்திடப்     பன்னீர்

உள்ளமோ       அவளைச்      சுற்றுது    ----அவள்
உறவே        நானும்       கற்றது
கள்ளமில்லா     காதலே        வாழும்   ----அவள்
காதலில்       என்னுயிர்       நீளும்

தமிழில்     பாடியே       ரசிப்பேன்    ----அந்த
தையலை     தினமும்     ருசிப்பேன்
அமுதம்      என்பது       அவள்தான்  -----அவளை
அள்ளிக்      குடித்திடத்      தேன்தான்






சனி, 30 நவம்பர், 2019

மலைத்தேன் 8 1 3

கண்ணால்          கவிதை         சொன்னாய்     ----உனது
காதலால்            என்னை        வளைத்தாய்
பொன்னில்      செய்த      பூவே      ----உன்னை
புகழும்        கவிஞன்        நானே

அன்பைத்        தேடி        வந்தேன்     ---உனது
அழகில்        மயங்கி      நின்றேன்
எண்ணி      ஏங்கி       இளைத்தேன்   ----நீயோ
என்றும்        இனிக்கும்      மலைத்தேன்

உலவும்        காற்றும்         சொல்லும்    ----உன்
உறவு         எதையும்        வெல்லும்
பருகும்       பாலும்       புளிக்கும்    ---உனது
பார்வை      உலகை       மயக்கும்

நிலவை       நினைக்க       கொதிக்கும்    ----என்
நெஞ்சம்      நிதமும்        நினைக்கும்
களவைக்       கற்க      துடிக்கும்      ----உனது
கருணை       என்னை      இழுக்கும்

அன்பில்         வாழ்வோம்         கூடி     ---இந்த
அகிலம்        முழுதும்        ஓடி
நண்பர்         போல        வாழ்வோம்     ---வரும்
நாளில்        உலகை       ஆள்வோம்  

வெள்ளி, 15 நவம்பர், 2019

கோயில் 8 1 2

அறிவோம்        அண்ணலே      உம் பெருமை    ----அதனை
அனுதினம்      போற்றுதல்     எம்கடமை
தெரியாத      பொருளைத்    தெரிய      வைப்பாய்    ----வரும்
தீமைகள்      அனைத்தையும்      போக்கி    வைப்பாய்

மனதினில்      கோயிலும்       உனக்காக    ---தமிழ்
மலர்கள்       சொரிவேன்       கணக்காக
கனவையும்      நனவாய்      மாற்றிடுவாய்   ---எங்களை
காலம்      முழுதும்      நன்றாய்      வாழ  வைப்பாய்

கடலைப்       போன்றது      உம்   மனது    ---உன்
காலடி      ஒன்றுதான்      பெரும் பேறு
மடமை      நீங்கிட     மனம்    கனிவாய்    ----தமிழ்
மண்ணகம்       ஆண்டிட     உதவி    செய்வாய்

மங்கையர்       மகிழ்ந்திட     வரம்    கொடுப்பாய்   ---நன்
மக்களாய்       வாழ்ந்திட       வழி   வகுப்பாய்
சிங்கமாய்ச்       சீறிட       வீரம்    கொடு    ---அவர்
சிறப்புடன்      விளங்கிட      உன்  வாளை      எடு

என்னையும்      எந்நாளும்         எழுத    விடு    ----இந்த
ஏழையின்      வாழ்விலே       ஒளியைக்    கொடு
மண்ணையும்     மக்களையும்     காத்து     நில்லு   ---வரும்
மாயங்கள்      யாவையும்      தூரத்   தள்ளு 

ஆனந்த ஜோதி 8 1 1

கார்     முகில்       வண்ணா    ---உலகில்
ஏழையைக்      காத்திட       வருவாய்
பார்த்தனுக்கு     சாரதியாய்     பணி  புரிந்தாயே   ---அவர்
பாரதப்     போரில்     ஜெயித்திடவே     துணை    புரிந்தாயே

நீக்கமற       நிறைந்து நிற்கும்      நிர்மல      ஜோதி    ----உன்னை
நித்தமும்      நினைப்பவர்க்கு      ஆனந்த  ஜோதி
பார்க்கின்ற    கண்களுக்குப்     பரவசம்     நீயே    ----உன்னை
பணிந்து     நிற்கும்     பக்தர்க்கு     தரிசனம்     தருவாய்

கன்னியவள்   மானம்     காக்க     கருணை      செய்தவன்   ----கோபி
கன்னிகைகள்     மனதிலே     நன்கு     கலந்து      விட்டவன்
எண்ணி ஏங்கி    அழுத      பேர்களிடம்      எதிரில்    வந்தவன்    ---அன்று
இணையில்லாக்      கீதை     தந்து      இதயம்     வென்றவன்

ஆநிரையை    மேய்க்க     வந்த       ஆயர்    பாலகன்   ===கொடிய
அரக்கர்களைக்        கொன்று      நல்ல     அமைதி      காத்தவன்
தேனைப்      போல      இனிக்கின்ற         தெய்வம்     நீயப்பா   ---உன்னை
தினமும்       தொழுதாலே    மனிதர்க்கு     தீரும்     நோயப்பா

காப்பதற்கு       எங்களுக்கு   மீண்டும்     கண்ணன்     வேண்டுமே   ---அவர்
கருணையினால்      மக்களுக்கு   வரும்    கவலை    தீருமே
பாக்களெல்லாம்    போற்றுகின்ற    எங்கள்   பரந்தாமனே   ----உன்னை
பாடி  தினம்      நாங்கள்     மகிழ்ந்திட     நல்வரங்கள்      தாருமே 

கருணை 8 1 0

இமையாக         வந்தாய்     ----இன்று
எமைக்         காத்து      நின்றாய்
உமையென்றும்        மறவேனே     ஐயா     ---மனதில்
உள்ளதைச்       சொல்கிறேனே      மெய்யாய்

ஐயா         நின்கருணை        ஆழ்கடலாகும்   ----இந்த
அடியேனின்      சேவை      சிறுமடலாகும்
பையவே      காத்திட   எங்கள்     பரமனே     வருவாய்    ----உலகில்
பாபங்கள்        நீக்கி      நற்பதம்        அருள்வாய்

ஏழையென்ற       சொல்        இல்லாது       போக    ---மண்ணில்
இருப்பதை       வைத்து      இன்பமாய்      வாழ
நாளைய        பொழுது       நன்மையாய்      வேண்டும்   ---எங்கள்
நாயகன்        அருளால்       நலமெய்த     வேண்டும்

மங்கல        மங்கையர்        மகிழ்வாக      வேண்டும்   ---எங்கள்
மனைகளில்      செல்வங்கள்       மலையாக     வேண்டும்
பங்கமிலா       வாழ்வு        பரிசாக       வேண்டும்    ----எம்
பாரதத்தின்     பெருமைகள்      பலர்      அறிய  வேண்டும்

மாதம்      மும்மாரி       மண்ணிற்கு       வேண்டும்   ----எம்
மக்களின்       உழைப்பு    மதிக்கப்பட     வேண்டும்
பேதமில்லா    வாழ்வு  ஏழைக்கும்     வேண்டும்   ---எங்கள்
பெம்மானே       நீவிர்     பிழை    பொறுத்தல்   வேண்டும்  

வெள்ளி, 8 நவம்பர், 2019

அன்பு 8 0 9

நின்றேன்        நடந்தேன்         நெடும்     தூரம்     ---உன்
நினைவே        எனக்கு       வழிகாட்டும்
அன்பால்        இணைவோம்      பலகாலம்   ---மன
அமைதி        நிலவுமே       எக்காலம்

அன்பால்       இணைந்து      கட்டுண்டோம்    ---நம்
மனதில்       கோவில்      கட்டி    வைப்போம்
இன்பம்       இனிமேல்      வரவாகும்  ----நமது
இதயம்       துடிப்பது      உறவாகும்

மணநாள்       வருமே        மகிழ்வாக    ----பின்
மழலைகள்     வரலாம்     துணையாக
கணமும்       நாமும்      பிரியோமே    ----நம்
காதல்       உலகிற்கு    நல்விடையாகும்

இறைவன்      கருணை       நமக்குண்டு    ---அவர்
இதயத்தில்     நமக்கொரு     இடமுண்டு
கரையும்       பொழுதும்       ஓடிவிடும்    ---உயர்
காதல்        என்றுமே       வாழ்ந்துவிடும்

நன்றியே        நமக்கு        நினைவாகும்    ----பிறர்
நன்மையே     வாழ்வில்     சுவையாகும்
அன்பெனும்    நிலையினில்      ஆடுகிறோம்    ----அந்த
ஆண்டவன்       அருளால்      வாழுகிறோம் 

நல்ல காலம் 8 0 8

கலை        ஞா ன          வடிவிலே     ----என்
கண்களில்         நீயும்      தெரிகிறாய்
விலையே      யிலாப்      பொருளே     ---உன்னை
வேண்டித்       தினமும்      வணங்குவேன்

அள்ளித்          தரும்        வள்ளலே   ---உனது
அழகில்          நானும்      மயங்குவேன்
கள்ள      மில்லாச்        சிரிப்பிலே     ---நான்
கவிதைகள்        கோடி      எழுதுவேன்

கள்ளம்       தெரியாப்       பிள்ளையாய்   ---என்னை
காவல்       காக்க        வேண்டுமே
உள்ளமதில்      கோவிலாய்    தினம்    ---நான்
உன்னைப்        பூசை       செய்குவேன்

ஊற்று         போல       செல்வமும்     ----எனக்கு
உயர்ந்த        கல்வி       ஞானமும்
சேர்த்து       நிறையத்       தாருங்கள்    ---இந்த
சேயைக்        காத்திட      வாருங்கள்

காலம்        ஓடி        மறையலாம்    ----உயர்
கருணை         அன்பு      மறையுமோ
நாளும்        இனி        நல்ல நாள்   ----உனக்கு
நன்றி        சொல்லி       வாழ்கிறேன் 

புதன், 23 அக்டோபர், 2019

தீபாவளி 8 0 7

தீப    வொளி           குலுங்கும்         தீபாவளி   ---நம்
தேவி        அருள்   கூடும்       தீபாவளி
பாப        இருள்      போக்கும்     தீபாவளி    ---நம்
பாரதம்        சிறப்பாகும்    தீபாவளி

நரகாசுரன்       என்றால்      தீபாவளி   ---அவனை
நாயகி        கொன்ற    கதை     தீபாவளி
உறவின்    பெருமை      சொல்லும்     தீபாவளி   ---மண்ணில்
உயர்ந்த      நெறி    வளர்க்கும்     தீபாவளி

கலைகள்     சிறந்தோங்கும்      தீபாவளி    ----ஏழை
கண்களில்     மகிழ்ச்சி நாள்      தீபாவளி
விலைகள்      குறையட்டும்      தீபாவளி    ---எங்கும்
விளைச்சல்    பெருகட்டும்     தீபாவளி

பகைமை       அழித்த   நாள்      தீபாவளி    ---பட்ட
பாட்டிற்கு      நல்ல பலன்       தீபாவளி
உவமை      சொல்லவொண்ணா      தீபாவளி   ----நம்
உயரிய        பண்டிகையே      தீபாவளி

நாடு        நலமாகும்        தீபாவளி    ----என்றும்   
நன்மை        அரசாளும்      தீபாவளி
வீடு         விளங்கட்டும்      தீபாவளி    ---நமக்கு
வெற்றித்       திருநாளே       தீபாவளி 

உறவென்று 8 0 6

கற்பனை        கோயில்         செய்தேன்   ----உனக்கு
கவிதையில்       மாலை     செய்தேன்
அற்புதம்       அடைய      வேண்டி    ---உன்
அழகிய        பாதம்       தொட்டேன்

நிற்பதும்       நடப்பதும்     நின்செயல்  ---என்று
அற்புத       வரிகள்        சொன்னார்
அவர்  பெயர்     உலகில்     நிற்க    ---உள்ள
அனைத்தையும்     செய்தாய்     முருகா

கண்ணனோ        மாயம்       செய்தான்    ---அந்த
காளியோ      ஞாணம்         தந்தாள்
சொன்னதை      நானும்      தந்தேன்    ----இந்த
சுகத்தினில்      வாழ்வாய்      நெஞ்சே

எழுதிட         வலிமை        தருக    ---இங்கு
எண்ணற்ற       கவிதை    வருக
பழுதிலா          புலமை       பெறுக   ----அந்த
பரம்பொருள்      உலகைக்       காக்க

உறவென்று        ஒருவர்         இல்லை    ----உன்
மனம்          எனது          எல்லை
அறிதுயில்         கொள்ளும்         மாலே    ---உந்தன்
அன்பு      தான்        எனக்குக்       காவல் 

அற்புதம் 8 9 5

ஏட்டினில்        எழுத         வைத்தாய்    ----நீ
என்குரல்       தெரிய      வைத்தாய்
பாட்டினைப்       பாட     வைத்தாய்    ---உந்தன்
பாதத்தில்       தலையை    வைத்தேன்

நாட்டினில்      உள்ள     துன்பம்   ----வரும்
நாளிலே       தீர்தல்    வேண்டும்
வீட்டிலும்     அமைதி     வேண்டும்    ---என்றும்
வெற்றிகள்     தொடர     வேண்டும்

வயலிலே      விளைச்சல்       காண  ---இங்கு
வான்   மழை      பெய்ய    வேண்டும்
சொல்லிலே      உண்மை      வேண்டும்   ---உலகை
செயித்திடும்     திறமை       வேண்டும்

கற்பினைக்        காக்க      வேண்டும்   ----எங்கும்
கவிதைகள்       வாழ        வேண்டும்
அற்புதம்        நிகழ்த்த      வேண்டி    ----எங்கள்
அய்யனே       நின் வருகை     வேண்டும்

கண்ணிலே       காந்தம்        வேண்டும்  ----சொல்லும்
கருத்திலே        தெளிவு        வேண்டும்
மண்ணிலே       வானம்        வேண்டும்    ----ஏழை
மனமெல்லாம்      குளிர      வேண்டும் 

கத்தரிப்பூ 8 0 4

வாழ          வயது           இருக்கு     ---நாம
வாழ்ந்து        விட      வெகு   நாளிருக்கு
கோல         முகம்         இருக்கு   ----இனி
கொஞ்சி     நிற்க       இடமிருக்கு

இன்னும்      என்னடியோ      என்  செல்லக்கண்ணே   ---உன்னை
நினைத்து      நானும்      உருகித்      தவிக்கிறேண்டி
கண்ணுக்கு    இனியவளே    காதலுக்கு   நல்லவளே   ---அடி
இன்னும்      புரியலையா     இந்த    ஏழையோட     மனசு

வட்ட       நிலாவும்      வாவெனக்      கூப்பிடுதே   ---உன்னை
தொட்டுச்     சுவைக்க      துடிக்குது     என்  இளமை
விட்டுப்       பிரிந்தாலே      விரகம்     கொல்லுமடி   ---என்னை
அட்டியின்றி     நீயும்    சற்று     அணைத்து      மகிழ்ந்திடடி

கத்தரிபூ     சேலை      காதோலை     கருகமணி   ---உனக்கு
நித்தமும்      பூட்டி      எந்தன்     நெஞ்சில்      சுமப்பேனடி
முத்த    மழை      பொழிஞ்சு      மோகத்தில்     நீராடு   ----என்
பத்தினிப்      பெண்ணே     என்   பக்கம்     வரக்கூடாதா

நாலு     பேரை      வச்சு       நமக்குக்     கல்யாணம்  ----பின்னே
நல்லபடி      விருந்து       நாமும்      தரவேணும்
வேளை      வந்ததென     நீயும்     விரைந்து     வருவாயடி   ---நாம
வெற்றிக்      கனி  பறிக்க      வேண்டுவோம்     கடவுளையே 

திங்கள், 21 அக்டோபர், 2019

ரோஜா 8 0 3

கோண         வளவுப்           பாதையில்    ----ஒரு
குமரிப்         பொண்ணு      போகிறாள்
தேனைப்       போல       இனிக்கிறாள்   ----அவளை
தினமும்       பார்த்து      ரசிக்கிறேன்

கள்ளில்       ஊறிய          விழிகள்   ----பேச
கரும்பைப்       போன்ற      மொழிகள்
முள்ளில்       மலர்ந்த       ரோஜா    ----அவளை
முகரத்         துடிக்கும்        ராஜா

சிலையைப்       போன்ற       உருவம்    -----அதில்
சீதளமாய்த்      தோன்றும்      பருவம்
விலையைச்      சொல்லிட     முடியுமா    ----அவளிடம்
விரும்பிச்       சென்றால்       படியுமா

வாழைத்        தண்டாய்க்        கால்கள்    ----அவள்
வனப்போ       கொல்லும்      வேல்கள்
பாளை         வெடித்த       சிரிப்பு    ----யாரும்
பார்க்க       நினைக்க       இனிப்பு

எனக்கு        வந்தது        மயக்கம்    ----இனி
இரவில்        வருமோ      உறக்கம்
கனியைப்      பார்த்ததில்      கிறக்கம் -----அது
காலம்        முழுதும்       இருக்கும் 

முத்துக்கள் 8 0 2

கண்ணில்      வைத்துக்        காத்திருந்தேன்    ----உன்னை
காலம்        முழுதும்        பார்த்திருந்தேன்
உன்னில்       என்னை       வைத்திருந்தேன்  ----உன்னை
உயிராய்         நானும்      நினைத்திருந்தேன்

சிரித்தால்    உதிர்வது      முத்துக்களோ   ---அது
சீதனமாய்ப்       பெற்ற      சொத்துக்களோ
பிரித்தால்      பிரியும்       உறவல்லவே   ----நமக்குள்
பின்னிப்       பிணைந்த      சுகமல்லவா

கண்கள்       மூடினால்       தூக்கமில்லை    ----இந்த
காதல்        செய்வதும்      பெருந்தொல்லை
மண்ணை       மறந்த       மழை   போல    ---உந்தன்
மனமும்        வறண்டுப்      போனதடி

என்ன        தவறுகள்         செய்தேனோ    ----எனோ
பிரிந்து         சென்று       விட்டாய்
அன்னக்       கொடியே      அழகரசி    ----உன்னை
அடைந்தும்      அடையா      மாபாவி

என்னைத்       தேடி நீ         வருவாயா  ----உன்
இதயத்தில்     எனக்கிடம்    தருவாயா
புண்ணினைப்     போக்கும்     அருமருந்தே    ----இந்த
பூமியில்      வாழ்வோம்     என்றும்      நலமாக 

ஏழுமலை 8 0 1

ஏழுமலை          ஏறி          வந்தேன்    ----உன்னிடம்
எந்தன்        மனக்குறை      சொல்ல      வந்தேன்
சூழும்  வினை     போக்க  வந்தேன்   ---உனது
சுந்தர      முகம்     காண     வந்தேன்

தாய்         தந்தை       இல்லை   ----இங்கே
தக்கத்      துணை      ஒருவருமில்லை
வாய்   விட்டு     கதருமெனை   ---நீதான்
வாரி     என்னையும்    அணைக்கலாதோ

நின்றது       நெடிய        கோலம்    ----தினம்
நிகழ்வது       வர்ண       ஜாலம்
கன்றினை     தாய்ப்    பசு    காப்பது  போல்   ---என்னை
காத்திட       வருவாய்      அய்யா

கண்களால்       கவலை        போக்கு    ---உன்
கனிமொழி        அமுத       வாக்கு
மண்ணினை      அளந்த      மாலே   ----என்
மனமிருள்        போக்கு       நாளே

கேட்டதைக்        கொடுக்க      வந்தாய்    ---எங்கள்
கேள்விக்குப்       பதிலும்        ஆனாய்
பாட்டினைப்        பாட        வந்தேன்    ----உனது
பாதமே        துணையாய்க்      கொண்டேன் 

சனி, 5 அக்டோபர், 2019

மஹா விஷ்ணு 8 0 0

மலை மீதில்         வாழ்கின்ற        மாலவா   ---ஏழை
மனங்களை         எந்நாளும்       ஆளவா
சிலையாக        நிற்பாயே        நேரிலே    ----என்
சிரம் தாழ்த்தி    வணங்குவேன்     பாரிலே

அலர்மேலு         மங்கையோ       அடிவாரம்    ----தன்
அடியாரைக்        காப்பது        அவள் பாரம்
புலர்கின்ற         காலையில்     பூபாளம்  ----அன்னை
பொன்னான       உள்ளமோ      தாராளம்

பத்மாவதித்        தாயார்        அருகிருக்க   ---உந்தன்
பாதார         விந்தங்கள்    என்றும்      பரவசமே
சத்திய   நெறி      வழங்கும்       சாயுஜ்யனே   ---உனது
சன்னதி        எந்நாளும்    எமக்கு     வைபோகமே

மலையேறி       வந்தார்க்கு       நிறையப்      பலனுமுண்டு   ----எங்கள்
மாதவா        உன்னைக் காணப்      பொருள்     குவியும்
விலையில்லாப்       பொருளான      விஷ்ணுமூர்த்தி    ---நீ
வேண்டுவோர்க்கு      வரமருளும்      வெங்கடேசனே

கோவிந்தா       வெனச் சொல்ல      வினை தீருமே   ---உன்
கோமள      முகத்திலோ        நல்லருள்   வெள்ளமே
வாரி       வழங்குகின்ற        எங்கள்        வரதராஜனே    ----உன்னை
வணங்கிடக்      கிடைப்பது      அமைதி       ஆனந்தமே 

வெள்ளி, 4 அக்டோபர், 2019

முன்னணி 7 9 9

என்ன          நடக்குது           உலகிலே   ----இதிலே
எதுவும்        எனக்கு        விளங்கலே
சொன்னதை      மாத்திப்     பேசுறான்   ----தான்
சுகப்பட         பிறரையும்        ஏய்க்கிறான்

பேரைக்         கெடுத்துக்        கொள்கிறான்    ---நல்ல
பெரிய       மனுஷன் போல்     திரிகிறான்
ஊரினை      வளைச்சிப்       பிடிக்கிறான்    ----நாளும்
உத்தமன்      போலவே       நடிக்கிறான்

வள்ளலாய்      வேஷம்       போடுறான்   ---பணத்தை
வாரிச்        சுருட்டியே       அமுக்கிறான்
கள்ளமே      மூச்சாய்     வாழ்கிறான்   ----அந்த
கடவுளை      நினைத்திட     மறக்கிறான்

கொள்ளைகள்        அடிக்கிறான்        கூட்டிலே  ---இவன்
கொடுமை         தீருமோ        நம்நாட்டிலே
நல்லவர்        வாழ்ந்திட       வேண்டுமே    ----சற்று
நாமும்        இதை       நினைத்தால்     போதுமே

ஒன்றாய்        சேர்ந்திங்கு       கூடுவோம்   ----இந்த
உலுத்தரை     தினமும்        சாடுவோம்
நன்மைகள்       அதிகம்        செய்குவோம்    ----நம்
நாட்டினை        முன்னணி       ஆக்குவோம் 

வியாழன், 3 அக்டோபர், 2019

சரஸ்வதி 7 9 8

கவிஞர்கள்        நாவினில்        குடியிருப்பாள்    ---அவர்
கற்பனைக்கு      உயிர்       கொடுப்பாள்
புவியினைக்      காப்பது      அவள்  பாரம்   ----தோன்றும்
புதுமைகள்       எல்லாம்       அவள்  சாரம்

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருந்து   ----பல
விந்தைகள்      செய்திடும்       தாயல்லவா
பிள்ளைத்      தமிழின்      பாடல்களில்  ---தினம்
பின்னிப்      பிணைபவள்     அவளல்லவா

ஏடுகளில்       எல்லாம்      இருக்கின்றாள்   ---அவளே
இயல்    இசை      நாடகமென்றாவாள்
பாடும்       என்னுள்ளும்      இருக்கின்றாள்   ----அவளை
பணிவதும்      புகழ்வதும்       என்பணியே

கல்விக்       கண்ணைத்      திறப்பவளாம்  ---உலகில்
கவிதைகள்     தோன்றிடக்      காரணமாம்
வெள்ளை நிற     ஆடைகள்      அணிபவளாம்   ---நாம்
வேண்டிடில்       அனைத்தும்     அளிப்பவளாம்

சரஸ்வதி         என்பது        அவள்      பெயராம்    ---உயர்
சாத்திரங்கள்       சொல்லிடும்       கருப்பொருளாம்
அமைதி        என்பது        அவள்       உருவம்    ---அவளது
அருளினைப்      பெற்றவர்க்கு     கிடைப்பது     யானை பலம்

[நவராத்திரி    வைபவத்     திருநாளில்   அன்னை  சரஸ்வதியைப்
போற்றி     துதி    செய்வதாய்    அமைக்கப்பட்டது  இந்தப்  பாடல் ]

கருணாநிதி 7 9 7

கண்ணா         மணியே         கருணாநிதி    ---உந்தன்
காலடி          ஒன்றே       எனக்குக்    கதி
எந்நாளும்       உன்னை      மறவேன்  ---இந்த
ஏழையைக்     காப்பது      நினது     செயல்

மேடு பள்ளம்      கடந்து      வந்தேன்   ---உனது
மேன்மையைத்     தினமும்      பாடுகிறேன்
பாடும்        என்னையும்       நீயறிவாய்    ---உன்
பாசமுகம்      தன்னையும்     நானறிவேன்

ஊரும்         உலகமும்       உன்னாலே   ---என்றும்
உண்மை      வென்றிடும்     தன்னாலே
பேரும்        புகழும்      நீ      கொடுப்பாய்  ----உலகில்
பேதங்கள்       இல்லாதப்       பெரும்பொருளே

அன்னையும்      தந்தையும்      நீயல்லவா   ---நீ
அன்பினில்       விளைந்த    அமுதல்லவா
பண்புகள்       தந்திட்ட       பரமகுரு     ----உன்னை
பணிவதும்     புகழ்வதும்      எனது பணி

கருணை      மழைதனைப்     பொழியவிடு   ---மண்ணில்
கவலைகள்      எல்லாம்      மறையவிடு
அருமை         அண்ணலைப்      பாடுகிறேன்   ----நான்
அனுதினம்       அவரைப்       போற்றுகிறேன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

காந்தி 7 9 6

அண்ணல்          காந்தியே     ----எங்கள்
அமர             ஜோதியே
கன்னல்      தமிழிலே   ---நாங்கள்
புதுக்   கவிதை      பாடுவோம்

வெள்ளைக்       கொக்கினை   ----அன்று
விரட்டி       யடித்தவர்
கொள்ளை     நடப்பதைக்   ---கண்டு
கொதித்து      எழுந்தவர்

நல்ல      எண்ணங்களை    ---இந்திய
நாட்டில்     விதைத்தவர்
வெள்ளை       மனத்தவர்    ----ஏழை
மனங்களில்     நிலைத்தவர்

காலம்        மாறினும்    ---அவரின்
கருணை      மறக்குமோ
ஏழையாய்      வாழ்ந்த    ---அந்த
எளிமை       போற்றுவோம்

அடிமை      விலங்கினை    ---அன்று
அகற்றிக்      காத்தவர்
மடமை       நீங்குவோம்    ---இந்தியா
மதிப்பை      உயர்த்துவோம்

[   02--10 --2019 அன்று    காந்திஜி     பிறந்த    நாள்  ]

வியாழன், 26 செப்டம்பர், 2019

கிளி 7 9 5

நெஞ்சினில்      அவளைச்       சுமந்தேன்   ----அவள்
நினைவினில்      மனமும்     வெந்தேன்
வஞ்சி         மகள்      வருவாளா   ---என்
வாழ்வினில்       நலம்     தருவாளா

கொஞ்சிடும்      குரலோ       கிளி   ---அவளை
குலவிட       எதுதான்       வழி
பஞ்சினைப்      போலொரு     மேனி    ---யாரும்
பறித்துத்     தின்றிடா     தீங்கனி

மெல்லென       நடப்பது        பாதம்    ---அவள்
மேலோர்      போற்றிடும்     வேதம்
கொல்வது      ஒன்றுதான்      குறி    ----அவள்
குடும்பத்தில்      வாழ்கின்ற     பொறி

சீறிப்        பாய்வாள்        சினந்து   ----இந்த
செகத்தினை      சற்று     மறந்து
கூரிய         அம்புகள்       கொண்டாள்   ---பலர்
குருதியில்      பிரியமும்    கொண்டாள்

ஏனிங்கு        இவளைப்     படைத்தார்   ----அது
இதுவரை       தெரிந்திடா      விடைதான்   
தேனினைப்       போலவள்     இனிக்க    ----அந்த
தெய்வம்       துணைசெய்ய      வருமா




மயக்கம் 7 9 4

கண்ணால்         வருவது        காதல்   ---அது
காளை       கன்னிக்கு       மோதல்
பின்னால்      வருமே      ஊடல்   ---இனி
பின்னணியில்      உள்ளது      வாடல்

நீராய்        இருந்தால்      குளிரும்   ---அது
நெருப்பாய்      இருந்தால்      மலரும்
யாராய்    இருந்தால்      என்ன    ---இது
யாவர்க்கும்    பொதுவெனச்    சொல்வேன்

இளமை         தருவது      மயக்கம்   ---நமக்கு
எதிலும்       உள்ளது      தயக்கம்
பழகிடப்       பாலும்     புளிக்கும்   ---அது
பல்லினைக்     காட்டி    இளிக்கும்

கேட்டால்       கிடைப்பது      இல்லை   ---இங்கு
கேள்வி       பதிலுமே     தொல்லை
பாட்டால்       வருவது      அமைதி   ---நீ
படித்தால்      உயர்வது     உறுதி

நல்லன       என்பதை        நாடு   ----பிறர்
நலம்பெற     என்றுமே      பாடு
உள்ளவன்      ஒருவன்      உண்டு   ---அவனை
உணர்ந்திடு      இன்றேனும்       கண்டு 

புதன், 25 செப்டம்பர், 2019

எண்ணம் 7 9 3

கண்களில்       தெரியும்        காவியம்    ---இரு 
கலைஞர்கள்      வரைந்த    ஓவியம் 
உன்னில்     அழகி    யாரு    ---அது 
உலகினில்     உண்டோ   கூறு 

பின்னிப்     பின்னியே     நடப்பாய்   ---உன் 
பின்னலைக்     கைகளால்    இழுப்பாய் 
மண்ணில்      தெரியுமே     வானம்   ---உன்னை 
மறக்க      முடியுமோ     நானும் 

சிற்றிடை       மெல்லென       அசையும்   ---முகம் 
சீதள       நிலவாய்ப்     பொழியும் 
பற்களில்     மலர்கள்      மலரும்    ---உன்னை 
பார்த்திட      ஆசைகள்      வளரும் 

நிலவில்      ஒளிர்வது       நீயா   ---உன்னை 
நினைத்திடும்     மனதில்      தீயா 
பழகிப்       பார்த்திட      வருவாய்    ----நானோ 
பாசத்தை     யள்ளித்    தருவேன் 

வாழும்     காலங்கள்      வாழ்வோம்   ---அதில் 
வளர்கலை     அனைத்தும்     பயில்வோம் 
சூழும்       துயரங்கள்      விலகும்   ----மனதில் 
தூய       எண்ணம்       மலரும் 

மாதவன் 7 9 2

சொந்தமென       உலகில்       யாருமில்லை    ----அதனால்
சோர்வும்       அடையத்      தேவையில்லை
பந்தமென      வந்திடும்     பரந்தாமா   ---உன்னை
பணிந்து       தொழுகிறேன்    பலகாலமா

ஆடு         மாடுகள்       மேய்ப்பவன்   ---தன்
அடியவர்     தம்மையும்      காப்பவன்
பீடுநடை       போடும்     பெரியவன்   ---நம்
பேதைமையைப்    போக்க  வந்த    ஹரியவன்

மண்ணை  யள்ளித்     தின்றது   வாயிலே   ---பல
மாயங்கள்     காட்டிடுவான்    கண்ணிலே
கண்ணனாக     வடிவெடுத்த     கற்பகம்   ---நாம்
காணக்      கிடைக்காத      அற்புதம்

மலையினைக்      குடையாக்கிய      மாதவன்   ---நம்
மனக்குறையை    தீர்க்கவந்த       மாயவன்
அலைமகளின்     துணைவனான     தூயவன்    ---தனது
அன்பினாலே       அகிலமதை      ஆள்பவன்

கண்ணனின்      காலடி       பற்றி   விடு   --உள்ள
கவலைகளை     அவனிடத்தில்     விட்டு விடு
நன்மையெல்லாம்      அவன் தருவான்     நெஞ்சமே  ---அவனை
நம்பினார்      கெடுவதில்லை      எந்த நாளுமே 

அனுமதி 791

தென்றலில்       ஆடும்      தேன்மலரே     ---நீ
என்   தேவன்      வந்ததைக்     கண்டாயா
அன்றவர்      போனது     வரவில்லையே    ---நான்
அடைவது      எல்லாம்     பெரும்   தொல்லையே

சிரித்துப்        பேசியெனை     மயக்கியவர்   ---இந்த
சின்னஇடையாளை     எனோ     மறந்து விட்டார்
குறுக்கு      வழிதனில்     போவாரோ   ---கோதை
என்னிடம்     திரும்பி      வருவாரோ

நீரும்      நிலமுமாய்       ஆனோமே    ---என்
நெஞ்சினில்      மஞ்சம்     கொண்டாரே
வேறு      யாரைச்      தேடிச்      சென்றார்   ---அந்த
விவரம்      அறிந்தால்      தேவலையே

இரவு       நேரம்      தூக்கமில்லை  ---அவர்
இதயத்தில்    சிறிதும்     இரக்கமில்லை
உறவை     உதறிப்      போனாரே    ===என்
உயிரைக்      கூட்டிச்      சென்றாரே

காலம்      முழுதும்       கண்ணீரோ    ----இளம்
கன்னியர்      காதல்     வெந்நீரோ
ஆலம்     விழுதாய்      வாழ்வதற்கு    --அந்த
ஆண்டவன்     அனுமதி     தருவாரா

                                                                                                 


புதன், 11 செப்டம்பர், 2019

வாகைமலர் 7 9 0

இரவோடு      வருகின்ற      நிலவே   ---என்
இனியவளெங்கே    நீ சொல்லு    நிலவே
உறவெனும்      அமுதமாய்    வந்தாள்   --உயிரோடு
உடலையும்     உத்தமி      தந்தாள்

கணைவிட்டுப்       பாய்கின்ற     கூரோ   ---என்
கண்ணீரும்     அவள் தந்த      நீரோ
துணையாகப்    பாய்கின்ற     வெள்ளம்   ---தோகை
எனக்காக      வாழ்ந்திடும்      உள்ளம்

சிந்தாமல்      சிதறாமல்      வந்தாள்   ---என்
சிந்தனைக்கு     ஊற்றாக     நின்றாள்
முந்தானைக்    கொடியினை    விரித்தாள்   ---கொடுக்கும்
முத்தத்தில்     உலகையே     மறைத்தாள்

அன்பாலே       அணைக்கின்ற      நெஞ்சம்   ---எனது
அழகியின்      காலடியில்     அடியேனும்     தஞ்சம்
கண்போல     வைத்தவளைக்    காப்பேன்   ---கடும்
உழைப்பாலே     காசுகளைச்     சேர்ப்பேன்

இளமை        அனுபவங்கள்      பலகோடி   ---என்றும்
அடைவேனே       அவளுடன்     அனுதினம்    கூடி
வளமான        எதிர் காலம்      எனக்கென    உண்டு   ---அவளெனை
வாழ்ந்திட      வைக்கிற      வாகை  மலர்ச்  செண்டு  

வேட்டை 7 8 9

கண்கள்        மூடிப்       படுத்தேன்   ---ஒரு
கள்வன்       வந்தானே     நிலவில்
பெண்கள்    மீதில்    அவனுக்கென்ன    பாசம்   ---அது
பின்னாளில்     தெரிந்தது     படுமோசம்
எண்ணாமல்   இடமும்     கொடுத்தேன்   ---என்னோடு
இணைந்திட    சம்மதம்     அளித்தேன்
கண்மணி     என்றவன்     சொன்னான்   ---முடிவில்
கண்ணீரில்    என்கதை     முடித்தான்
சுவைத்தானே     பலமுறை     தோழி  ---அந்த
சொர்க்கத்தில்    எத்தனையோ     நாழி
அமைத்தானே    அன்பெனும்     கோட்டை  ---ஆனால்
அவன்   ஆடியது    என்னுடலில்    வேட்டை
உறவினில்      ஏற்றம்     கண்டேன்  ---அவன்
உறவாலே     புது உயிர்    கொண்டேன்
மறவாமல்     வருவேன்     என்றான்   ---நானும்
மகிழ்வோடு     அனுப்பி    வைத்தேன்
வருவானென    எண்ணிக்     களைத்தேன்   ---தினம்
வளர்கின்ற      சிசுவாலே     இளைத்தேன்
மறுவாழ்வு     வருமாவென    மலைத்தேன்   --அந்த
மாதவன்       அருளாலே    உயிர்    பிழைத்தேன்
ஆணாகப்       பிறந்தவர்கள்      அழட்டும்    ---என்
அலறல்      அவர்கள்      காதுகளில்     விழட்டும்
வீணாக     பெண்களிடம்    என்ன      விளையாட்டு   ---இந்த
வினைகள்    தீர்ந்திட     இறைவா  நீ     நல்வழி    காட்டு 

திங்கள், 9 செப்டம்பர், 2019

பேசும் சிலை 7 8 8

வானிலாடும்        நிலவைக்       கேட்டேன்    ---அங்கு
வட்டமிடும்     பறவையைக்      கேட்டேன்
தேனிலாடும்     மலரைக்     கேட்டேன்    ---என்
தேவி எங்கு       போனாள்     என்றே

கண்கள்      தேடியும்      காணவில்லை   ---அவள்
கனிமொழியை    நானும்     கேட்கவில்லை
 பெண்களில்    தெய்வம்     அவளல்லவா   ---அந்த
பேசும்        சிலை       எங்கே     போனாள்

ஊர்        அடங்கியும்      நானும்     உறங்கவில்லை   ---என்
உள்மனதில்      பொங்குது      எரிமலை
பேர்     சொல்ல      இங்கு     பிள்ளையில்லை  ---இதுவே
பெரும்      சுமையாய்        ஆகும்      தொல்லை

கன்னியால்         நான்       வளர்ந்தேன்   ---அவளது
கருத்தினால்       செல்வம்       சேர்த்தேன்
எண்ணி       இன்பம்       சேரும்போது  ---எனோ
எங்கேயோ       சென்று      விட்டாள்

தேடித்      தேடியே    தினம்     அலைகிறேனே   ----நான்
தெய்வங்களைத்      தொழுது      கேட்கிறேன்
நாடியவளே       என்னிடம்      வருவாளென்பேன் ----எனக்கும்
நல்ல வாழ்வு     இனிமேல்      கிடைக்கு     மென்பேன் 

காவியம் 7 8 7

போராடிப்        போகுறியே         கோவமா   ---உன்னை
பொறுப்பாக    வாழவைப்பேன்      நானம்மா
நீராடும்        வேளையிலும்       மீனம்மா   ---என்
மனது       நெருப்பாகக்     கொதிக்குது     ஏனம்மா

கண்ணாலே      கண்டதிலே      கண்ணம்மா   ---எனக்கு
கவனமெங்கோ      போயிடுச்சே    பொன்னம்மா
உன்னாலே      துடிக்கிறேனே     குருவம்மா   ---உனக்கு
உள்ளதடி  இன்னும்   நிறையக்    குறும்பம்மா

பொன்னாலே     மாளிகையும்     கட்டுவேன்   ---மண
பெண்ணாய்     உன்னை வைச்சு     வாழுவேன்
கண்ணாலம்    செய்துகொள்ள     ஆசையா   ---உனக்கு
காலமெல்லாம்     செய்வேனே      பூசையே

வேண்டிய       செல்வங்கள்        உண்டடி    ---உன்னை
விரும்பியே      அலைபவன்      நானடி
தூண்டிலாகும்    உன்னழகு     தேனடி    ---தினம்
துடித்து      அழுபவன்      தானடி

அழகாகப்        பிள்ளைகள்       பிறந்திடும்   ----அவர்கள்
அறிவாலே       எந்நாளும்      சிறந்திடும்
கலையாடும்    கண்ணே   நீ      காவியம்   ---அந்த
கடவுளே        தீட்டி  வைத்த     உயிரோவியம் 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

அடிமை 7 8 6

கற்றாழைக்       காட்டிலே       நின்றவளே   ---என்னை
கண்ணாலே       வலைவீசி      வென்றவளே
நற்றாமரை     மலரோ     நறுந்தேனோ   ---உன்னை
நம்பி      வந்ததற்கு      பலன்    இதுதானோ

அம்பாலே       என்னை      அடித்தாய்   ---இந்த
அடிமையின்     கதையினை   முடித்தாய்
அன்பாலே      காதல்      சொன்னேன்   ---என்னை
அடித்துத்      துரத்தி       விட்டாய்

வாலிப        வயது      அல்லவா   ---உன்னோடு
வாழத்        துடிப்பது     நானல்லவா
கேலிகள்     செய்து     வெறுத்தாய்   ----இந்த
கிளி  வேண்டி      நானும்    பொறுத்தேன்

வாசலில்       வந்து        நிற்பேன்   ---உள்ளதை
வாரியே       உனக்குத்     தந்திடுவேன்
பாசத்தில்      அன்றோ    புலம்புகிறேன்   ---எந்தன்
பத்தினியே   உன்னையின்னும்    நம்புகிறேன்

காதல்      மொழி பேசிக்     கட்டி யணைத்து  விடு   ---உனது
கனியிதழாலே      காயத்திற்கு     மருந்து யிடு
சோதனை      போதும்    சுந்தரியே    வந்துவிடு   ---எனக்கு
சொர்கத்தைக்     காட்டி     சுகமாக    வாழவிடு 

பொன்மணி 7 8 5

நிலவில்       ஆடித்         திரியலாம்    ---நாம் 
நினைக்கும்     இடங்கள்    போகலாம் 
உலவும்       காற்றில்     மிதக்கலாம்    ---நாம் 
ஒருவர்      என்றே      ஆகலாம் 

நாமும்       நன்றாய்      வாழலாம்   ---நமக்கு 
நல்ல        பிள்ளை     பிறக்கலாம் 
தேனும்     பாலும்      ஆகலாம்    ---என்றும் 
திகட்டாத      இன்பம்  அடையலாம் 

வானில்       செல்லும்     பறவையாய்   ---நாம் 
வட்டம்      போட்டுப்     பறக்கலாம் 
காணும்     உலகம்     கையிலே   ---என்றும் 
காதல்       வாழும்      மண்ணிலே 

நானும்        நீயும்      ஒன்றடி    ----அது 
நடக்கும்      நாள்தான்   என்றடி 
மீனைப்      போன்ற    கண்களால்   ---நீ 
மீண்டும்    மீண்டும்     கொல்கிறாய் 

வாழ        எனக்கு       வலுவில்லை    ---வேறு 
வழியில்      போகவும்    விதியில்லை 
ஆள        வருவாய்     கண்மணி   ---இந்த 
அடிமைக்கு       நீதான்    பொன்மணி 

நம் நாடு 7 8 4

அவள் ---   சின்னப்        பையன்       சிங்காரம்   ----நீ
                   சிரிச்சு        விட்டா       ஒய்யாரம்
                   பண்ணைப்     பக்கம்    போகலாம்  ---நாம
                  பள்ளிப்      பாடம்      படிக்கலாம்

அவன் --ஆளை     விடுங்க       அம்மாளு   ---நீங்க
                 அதிகம்     போடுறே     கும்மாளம்
                தோளைக்    குலுக்கி     சிரிக்கிறே   ---என்னை
               சொக்க       வைக்க     நினைக்கிறே

அவள் --கண்ணால்     கண்டால்     பாபமா   ---நீயும்
               காதல்        அறியாத       மூடமா
              பொண்ணு     எதுவும்     செய்யலாம்   ---எங்கும்
             புடவை யே     ஜெயிக்கும்     புரியுமா

அவன் ---உலகம்       அறிந்திடாத      வயசு    ---அதில்
                உள்ளது       வெள்ளை     மனசு
              கலக        விதைகளைத்     தூவுறே   ---என்னை
            காலை      வாரி விடப்      பார்க்கிறே

இருவரும் ---போட்ட      சண்டைகள்     போதுமே   ---இனிமேல்
                         புரிந்து        ஒன்றாய்       வாழுவோம்
                        நாட்டைக்       காக்க    நாமும்    உழைக்கணும்   ---நமது
                      இந்தியா       உலகினில்      சிறந்து     விளங்கணும்   

தாசன் 7 8 3

கானம்            பாடும்          வானம்பாடி   ---நான் 
காதல்        கொண்டேன்     உன்னைத்     தேடி 
கருணை கொண்டு     என்னை      நாடி   ---நாம் 
கலந்திடலாம்      தூய      அன்பில்     கூடி 

சரண்        அடைய      வேண்டுமோடி   ---நானே 
சண்டை    போட   உனக்கு    சரியான    ஜோடி 
அரண்மனையில்    வாழ     வைப்பேன்   ---உனக்கு 
ஆயிரம்   பேர்கள்     காவல்     நிற்பர் 

யாரும்       பறித்திடா        ரோஜா   ----அடியே 
நானே       உனக்கு     ஏற்ற     ராஜா 
திருவிழாவில்      வருகின்ற     தேரே   ---உன்னை 
திகைத்துப்       பார்த்திடும்    இந்த    ஊரே 

அங்கத்தில்     தங்கம்      வைத்தாய்    ---உனது 
அழகினில்     ஆசை      வைத்தேன் 
திங்களும்      வானமும்     சாட்சி   ---நம் 
திருமணம்      ஆனாலும்    தொடர்வது    உனது   ஆட்சி 

கொடுக்க        முடியாதத்தைத்   கொடுப்பேன்   ----அந்த 
கோவைக்      கனிகளை       ருசிப்பேன் 
தடுத்திட      முயலாதே      பெண்ணே    ----உனக்கு 
தாசனாய்      எந்நாளும்     இருப்பேன்    கண்ணே 

புதன், 4 செப்டம்பர், 2019

மயக்கம் 7 8 2

கன்னி      மலர்ப்        பூசை    செய்வேன்    ---என் 
காதலி      உன்மேல்     ஆசை     வைத்தேன் 
என்னையே    உனக்கெனத்    தந்து   விட்டேன்   ---இனி 
எதிர்காலம்     உந்தன்    கைகளில்    இருக்கிறதே 

பொன்னி   பெற்ற       பூங்கொடியும்     நீதானோ   ---நீ 
பின்னிப்   பின்னி    நடக்கிற     பேரழகை    என்ன சொல்வேன் 
கண்களுக்கு  விருந்தான    கற்பகமே     வாழ்க     நீயே   ---நான் 
கன்னித்      தமிழினில்     கவிதை     மழை     பொழிந்திடுவேன் 

எட்டி நீ     நடக்கையில்      இளைஞர்கள்     மயக்கமடி   ---உன் 
பட்டு மலர்     மேனியோ   பளிங்காலே     செய்ததடி 
கட்டிக்   கரும்பல்லவோ    காமனின்  கை  வில்லல்லவோ  ---தினம் 
கட்டி   யணைத்திடவே     நெஞ்சில்     கள்வெறி    ஏறுதடி 

ஊரினைக்     கூட்டியே       உடனே       திருமணமாம்   ---இனி 
சீர்வரிசை      கோடி      தேடி வரும்      நாடி 
வேரிற்    பழுத்த     பலா    நீ     விண்ணிலே    வட்ட  நிலா   ---இந்த 
பாரினில்   உன்னைப்    போல      பார்த்தவர்கள்    யாருமில்லை 

மதனும்     ரதியும்     போல்    மகிழ்வோடு     வாழ்ந்திடலாம்   ---நம் 
மக்கள்      தொகை     பெறுக    மனது நீயும்     வைத்திடடி 
இதனைச்     சொல்லிடவே      இத்தனை      நாளாச்சு    ----எந்தன் 
எசமானி      நீயே     நன்கு      இசைவாகப்    பதிலைச்     சொல்லு 

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பாரிஜாதம் 7 8 1

கண்ணே       உன்னைக்      கண்டாலென்ன   --நான்
காதல்         அமுதம்       உண்டாலென்ன
பின்னால்    தொடர்ந்து    வந்தாலென்ன  ---எந்தன்
பேசும்  கிளி     பதில்      சொன்னாலென்ன

அல்லி     மலர்க்    குளத்தில்     கண்டேன்   ---நான்
ஆசை    நிறைய    ஆவல்     கொண்டேன்
பள்ளிப்     பாடம்     படிக்க    வேண்டும்   ---அன்பே
பருவப்     பாடல்     பாட     வேண்டும்

அந்தி      பகல்       அலைந்து     கெட்டேன்   ---நானும்
அங்கும்      இங்கும்     தேடிப்    பார்த்தேன்
பந்தி      வைக்க     மனம்      இல்லையோ  ---என்
பாரி  ஜாத    மலரே     பதிலைச்     சொல்லு

இரவு      பகல்       போனால்      என்ன   ----என்
இளமை     பாடும்    பாடல்     கேட்பாய்
உறவு      கொள்ள    தினமும்   கேட்கும்  ---எந்தன்
உத்தமியே    உனது    மனதைத்     திறவாய்

மண்ணில்      வாழும்      மாந்தரிடையில்   ---என்றும்
மங்காக்       காதல்      எண்ணம்     உண்டு
பெண்மேல்    ஆசை    நிறையக்    கொண்டு  ---நான்
பிதற்றுவதாக     நீயும்      எண்ணா ய்ப்    பெண்ணே 

பழரசம் 7 8 0

எந்தன்     மனம்          செண்டானதே    ---எதோ
புதிய           இன்பம்      வந்தாடுதே
பொன்னில்       செய்த     பூவையென்பேன்   ----இந்த
பூமிக்கு       வந்திட்ட  ப்     பாவை யென்பேன்

அன்பு       மலர்ச்       சரம்      தொடுத்தேன்   ---அவள்
கழுத்தில்      மாலையாய்     இட்டேன்
இன்பமுடன்     சிரித்து     நின்றாள்   ---தேன்
இதழ்களில்    முத்தமும்     கொடுத்தேன்

எட்டடுக்கு     மாளிகை     வசிப்பதற்கு   ---இரவில்
தூங்கிட      வண்ணப்      பஞ்சு  மெத்தை
அட்டியின்றி    சமையல்   வகை    ஆகாரம்   ---அவள்
அடையலாம்      என்வீட்டில்      வெகு  காலம்

நிலவு         கால          இரவுகள்    ---அதில்
நீளுமே        நெடு  நேரம்     இனிய    உறவுகள்
பழகிடுவோம்    காதலில்     பலரகம்   ---அவள்
பருகப்   பருக     திகட்டிடாத     பழ ரசம்

வாழும்       காலங்கள்    இன்னும்     நீளுமோ  ---அந்த
வனிதையின்     மனம்      ரொம்ப     ஆழமோ
சூழும்     வினைகள்    இனிமேல்    மாறலாம்  ---நாங்கள்
சுகமுடன்     என்றுமே     நன்றாய்    வாழலாம்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆவல் 7 7 9

திருநாள்        வந்தது     ---மனம்
தேனாய்       இனிக்குது
மணநாள்    வந்திடும்   ---புது
மகிழ்வினைத்     தந்திடும்

வழிமேல்      விழி வைத்தேன்   ----அவர்
வருகை    எதிர்பார்த்தேன்
அழகன்      வருவாரா    ---என்
ஆவல்       தணிப்பாரா

நிலவு        அழகாகும்   ---அவர்
நினைவு     சூடேற்றும்
பழகிட     மனம்   தேடும்  ---ஆனால்
பண்பு      தடுத்து விடும்

சேர்ந்து      மகிழ்வோமா  ---இந்த
செகத்தை    மறப்போமா
பார்க்கும்     இடமெல்லாம்  ---அவரின்
பதிவு        தெரிகிறதே

காலம்       எனக்காகும்     ---நாளும்
காதல்       வழிந்தோடும்
கோல      முருகனருள்   ----எனக்கு
குறையாது    நிறைந்திருக்கும்  

வெற்றி 7 7 8

கண்ணில்       உன்னைக்       கண்டாலே      போதும்  --உடனே
காதல்         எண்ணம்        வந்தே       தீரும்
என்னில்      உன்னை       இன்றே        சேர்ப்பே ன்  ---நீ
எந்தன்      மனைவியென    ஆக  வேண்டும்    பெண்ணே

கொஞ்சி       வரும்       தமிழும்        நீயோ   ---நான்
குலவ        நினைக்கும்     எனது     ஆசைக்   கிளியோ
அஞ்சுகத்தின்     அழகை    யள்ளி  வரும்    கண்ணே   ---இனி
அள்ளித்      தினம்      அன்புக்       காதல்      செய்வேன்

காலங்கள்       ஓடியே       போனால்       என்ன   ---நம்
காதல்         இங்கே         என்றும்       வாழும்
கோலமிகு      மனையாளோடு  கொஞ்சுவதே    இன்பம்   ---அவள்
குமிழசிரிப்பைக்       காண      கோடி     நலம்    தேடி    வரும்

வாழ்வில்       நீ வருவாயெனில்     வல்லமை      கூடி  வரும்   ---எனக்கு
வற்றாத        செல்வங்கள்    என் வாசலுக்கு    வந்து    சேரும்
ஆழ்மனதில்   உன்னை  வைத்து     ஆராதனை    செய்வேன்  --நாமும்
ஆயிரம்      காலங்கள்       அன்பு    செய்து    அழகாக     வாழ்ந்திடலாம்

இன்பம்      இதுவே     இன்பம்     என்று    என்றுமே   மகிழ்ந்திடுவோம்   ---உன்
இடை     தொட்டுக்     கடை    விரித்து     எல்லாமும்     பெற்றிடுவேன்
துன்பம்      என்னும்      சொல் தொடராது     அறிவாய்ப்    பெண்ணே   ---நமது
தூயக்     காதல்   ஒன்றே       தொடர்ச்சியாக      வெற்றி     தரும்

ஒரு நாள் 7 7 7

நிலவினில்         ஆடிக்         களித்தேன்    ---ஓடும்
நீரினில்        மூழ்கித்      திளைத்தேன்
கலைகள்     கற்றும்     மகிழ்ந்தேன்    ---என்
கள்வன்       உன்னையேன்   காணேன்

வருவாய்        என்றொரு        ஏக்கம்   ---நீ
வந்தால்        பறந்திடும்       தூக்கம்
தருவாய்      அன்பெனும்     முத்தம்   ---பின்
தழுவிக்       கொள்வாயே   நித்தம்

உடலும்         துரும்பாய்ப்     போச்சு   ---எனக்கு
ஊரார்        பலரால்         பேச்சு
கடலாய்க்      கண்ணீர்       ஆச்சு   ---உன்னை
கண்டால்       துன்பம்        போச்சு

என்றும்         இணைவோம்        என்று   ---நீ
எனக்குச்       சொன்னாயே        அன்று
கண்ணா      வந்திடில்         நன்று    ---இல்லையேல்
நானும்        தாயினைப்    பிரிந்த     கன்று

மறவா         இன்பங்கள்       கொடுத்தேன்    ----இந்த
மலரின்       தேனையும்       குடித்தாய்
உறவை       எண்ணியே     துடிப்பேன்    ---ஒருநாளிலும்
வரவில்லை     என்றால்     மடிவேன் 

இனியவர் 7 7 6

கனிந்திடும்        உள்ளம்     ---நம் 
கண்களில்     வெள்ளம் 
கலியுக     தெய்வமன்றோ    ---அவர் 
காண்கையில்    அழகரன்றோ 

வறியவர்       வாழவும்    ---எங்கும் 
வளமைகள்     சூழவும் 
வகுப்பது     நீதியப்பா   ---இந்த 
வழியென்றும்     நன்மையப்பா 

நினைத்தவர்       வாழ்வினில்    ---நல்ல 
நிம்மதி        சேரும் 
அணைத்திடும்     கரங்கள்   ---நமக்கு 
ஆறுதல்        அளித்திடுமே 

ஆற்றாது       அழுதால்    --அதனை
துடைத்திட    அண்ணல் வருவாரே  
அன்பினை     யள்ளித்தருவாரே   ---நமக்கு 
அடைக்கலம்    கொடுப்பாரே 

இனியவர்        அவரே   ---என்றும் 
ஏழையர்         தலைவன் 
எம்மையும்      காப்பாரே    ---கண்ணன் 
இதயத்தில்       வாழ்வாரே   



   

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இளமை 7 7 5

கண்ணில்         ஆடும்       கனியே   ---என் 
கருத்தில்       வாழும்     கிளியே 
பொன்னில்     செய்த     மனமே   ---உனக்கு 
பூசை       செய்வேன்    அனுதினமே 

எண்ண க்      கனவுகள்      கோடி   ---நாம் 
இணைந்து    மகிழ்ந்திட     வாடி 
கன்னல்        மொழியோ  கவிதை   ---என்றும் 
கலந்து       உண்போம்     அமுதை 

வானம்       தேடிப்       பறப்போம்     ---பேசும் 
வார்த்தை      மறந்து     ரசிப்போம் 
கானம்      பாடித்      திரிவோம்    ----வீசும் 
காற்றில்     உலவியே    வருவோம் 

ஒன்றில்        சேருமே       ஒன்று     ---அந்த 
உணர்ச்சி      வருவது      என்று 
அன்றில்    பறவைகள்    ஆவோம்   ---இந்த 
அகிலம்       சிறக்க      வாழ்வோம் 

இளமை        அழகு       இனிமை   ---இதனை 
இருவரும்      ரசிப்பது    திறமை 
களவுப்        பாடங்கள்     சொல்லு    ---உன் 
காதலில்       என்னையே    வெல்லு 

புள்ளி மான் 7 7 4

கண்ணில்      பாராய்ப்        பெண்ணே    ---என்
காதல்        இன்பத்     தேனே
உன்னில்     பாதி       நானே   ---நானும்
உயிரைத்     தருவேன்    அன்பே

தென்றல்      காற்று      வீசும்   ---அது
தேனை      யள்ளி    போடும்
ஒன்று      ஆவோம்     இன்று  ---நீ
உதவி     செய்தால்    நன்று

பள்ளி       சொல்லும்    பாடம்   ---அதை
படிக்க     மனமும்     ஓடும்
புள்ளி     மானாய்த்     துள்ளி  ---நீ
புறப்பட்டு    வாயேன்    கள்ளி

இன்பம்      இங்கே       கோடி   ---நா ம்
இருவரும்   ஒன்றாய்    கூடி
அன்பில்    ஆடிப்     பார்ப்போம்  ---இனி
அணைத்துக்    கலைகளைக்   கற்போம்

எண்ண        எண்ண        இனிப்பு    ---அடி
ஏனடி         இன்னும்      வெறுப்பு
கண்ணே       மணியே      வாடி    ---நம்
காதற்      பண்ணைப்     பாடி 

பதிவுகள் 7 7 3

அன்பே     அழகியே    ---என்
ஆருயிர்ச்     செல்வியே
என்னை    அணைத்திட   --நீயும்
இன்றே     நெருங்கிடு

காற்றில்      ஏறுவாய்   --பெரும்
கடலிலும்     நீந்துவாய்
பார்க்கும்      இடங்களில்  ---உன்
பதிவுகள்      தெரியுமே

இளமையின்    இலக்கணம்   ---நான்
உன்னிடையினைச்   சுமக்கணும்
புலமை     பெருகனும்    ---உன்னால்
புதுமைகள்     அறியணும்
காதல்      வந்தது   ---அது
உந்தன்    கண்களிலாடுது
மோகச்    சிலையடி    ---நீதான்
முக்தி      அளிப்பவள்
இரவில்     வருபவள்   ---நீ
இளமைக்குப்    பெரும்தீனி
உறவால்     மலர்ச்சியே  ---இனி
உயர்வேன்     வளர்ச்சியில்
வானின்     அமுதம்  நீ  ---என்றும்
வற்றாக்      குமுதம் நீ
தேனின்     சுவையும்    நீ  ---திகட்டா
திருக்குறள்    உரையும்   நீ


திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மோகினி 7 7 2

முன்னாலே          நடந்பாரம்மா தது          நியாயமா   ---என்
மோகினியே     நீ போடும்      வேசமா
பின்னாலே     அலையுறேனே    தெரியுமா    ---நானும்
பித்தாகிப்      போனதுவும்      புரியுமா

கண்ணாலம்     கட்டிக்கொள்ள      ஆசையா  ---என்
கண்ணாட்டி     உனக்குத்   தினம்    பூசையே
உண்ணாமல்     தவிக்கிறேனே   பாரம்மா    --நீயும்
உகந்த   பதில்    நல்லபடி     கூறம்மா

கண்ணாடி      போன்ற     எந்தன்     மனசிலே   ---நல்ல
கச்சிதமாய்ப்      பதிந்தது      உன்   உருவமே
பொன்னாலே    செய்து  வைத்த     வீட்டிலே   ---நல்ல
பொறுப்போடு    வாழ்ந்திடுவாய்    என்  கூட்டிலே

கண்ணாலே     என்னைக்    கொஞ்சம்   நீ  பாரம்மா   ---உன்னை
காலமெல்லாம்  வாழ  வைப்பேன்     கேளம்மா
சொன்னாலே     நம்பிவிடு     எந்தன்     தோழியே   ---உனது
தோளினில்       சாய  வேண்டும்    சில  நாழியே

தேனோடு        பாலாகும்     நமது     திருமணம்   ---அது
தினம்தோறும்     வீசிடுமே    புதிய  நறுமணம்
ஊனோடு      உயிராக    ஒன்று     கலக்கலாம்   ---நாமும்
ஒற்றுமையாய்ப்     பலகாலம்     உலகில்     வாழலாம் 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

ஆலயம் 7 7 1

நிலவு     வரும்    நேரத்திலே     நீந்திடலாமா   ---நீயும்
நானும்     ஒன்றாக     அங்கே    மகிழ்ந்திடலாமா
களவுமுறை   அத்தனையும்   நாம்  கற்றிடலாமா   --என்
கண்மணி    உந்தன்  மனதில்  நானும்  இடம்  பெறலாமா

வட்ட  நிலவை    உனக்காக    வளைக்கப்    போகிறேன்  ---என்
வடிவழகி      உன்னழகை     ரசிக்கப்     போகிறேன்
தொட்டு      உன்னை    நானும்     தூக்கப்    போகிறேன்   ---உன்
துடியிடையில்     நானுமின்று     துயிலப்   போகிறேன்

இதழில்   ஊறும்    கனிரசத்தை    ருசிக்கப்   போகிறேன்   ---உன்
இடை வளைத்து     புது விருந்து    படைக்கப்    போகிறேன்
குழலான    உனது  கூந்தல்      விரிக்கப்     போகிறேன்  --அதில்
கோடி மலர்கள்    தினம்     சொரிந்து    படுக்கப்   போகிறேன்

நடந்து    வரும்     நடையினிலே    பரத  நாட்டியம்    கண்டேன்   ---எனது
நாயகி    உன்னசைவில்     காதல்      மோகமும்    கொண்டேன்
கடக்கப்   போகும்     காலங்களை    கணக்கில்   கொள்ளுவேன்  ---எந்தன்
கற்பகமே     உன்னை யள்ளிச்    சுமக்கப்     போகிறேன்

வாழ்க்கையே    உன்னைச்     சுற்றி      வட்டம்   போடுது  ---நீ
வழங்கப்      போகும்    பரிசுகளை     வாங்கத்    துடிக்குது
ஆழ்மனதில்     உனக்கென   ஒரு    ஆலயம்     அமைப்பேன்   ---அதில்
அழகாக     உன்னை    வைத்துப்    பூசைகள்     செய்வேன் 

மானினம் 7 7 0

எந்நாளும்          நீவருக       என்னிடம்   ---என்
இதயமே       உள்ளது       உன்னிடம்
மின்னாமல்     வருகின்ற     மேகமே  --உன்மேல்
நான்      கொண்டேன்     புது  மோகமே

தண்ணீரில்      நீந்துவது      மீனினம்  ---என்
தையலின்       ஜாதியோ     மானினம்
கண்ணீரில்      ஆடுதம்மா    என்மனம்   ---நீ
கண்ணசைக்க      ஆகுமடி   நம் திருமணம்

பொன்னையே      பூவாக்கிப்    பூசை  செய்யவா   --உன்
பொங்கி   வரும்     அழகினிலே    மையல்    கொள்ளவா
தன்னாலே    சொன்னதால்    தள்ளி     விடாதே   ---என்
தங்கமே     உன்னை  நானும்     மறந்திட  மாட்டேன்

இனிதாக       புது வாழ்வு     நமக்காகுமே   ---நம்
இருவருக்கும்     புது வரவு    உருவாகுமே
கனிதாங்கும்   இடையோடு    படை  கொள்ளுவாய்  ---என்
கண்ணாட்டி  எனைவென்று   காதல்  சுகம்   ஊட்டுவாய்

நீரோடும்     அருவியிலே     நாமும்     நீந்திடலாமா  ---உன்
நெற்றியில்     குளிர் முத்தம்    நான்  தந்திடலாமா
பாரோர் கள்   முன்னிலையில்   நம்  பதிவுத்   திருமணம்   --நீயும்
பாசத்துடன்     இசைந்திடனும்    பருவப்     பைங்கிளி 

மின்னல் 7 6 9

அவன் -- கண்டாலே        நழுவுரியே     கண்ணம்மா   --என்
                  காதலைச்      சொல்கிறேன்    கேளம்மா
                  கண்ணாலம்    செய்துக்க     வாரியா    ---உன்
                 கட்டழகை     எனக்கள்ளித்     தாரியா               

அவள் --தண்டால்      எடுக்க   வேணும்    மைனரே   ---உன்னை
                 தாளிச்சுக்     கொட்டிடுவேன்     தைரியமா
                 பெண்டாள     நினைக்கிறியா     பேதையே   ---நீயும்
                 பிதற்றுவது    உனக்கேறும்       போதையே

அவன் --ஒழுங்காகக்     கேட்டாலே       சொல்லிடு   --இல்லை
                 உதை       வாங்க    முடியாமல்     ஓடிடு
                கிழங்காட்டம்    உன்னை   விடவும்    முடியுமா  ---நீயோ
               கிணத்தில்     உள்ள     தண்ணியின்னு    தெரியுமா

அவள் --ஊரு    சனம்      கூட்டி     வைப்பேன்   ---உனக்கு
                உதை       கொடுத்து      ஓட    செய்வேன்
              யாரு       கிட்டே    பேசறேன்னு    தெரியுமா  ---என்
              அப்பன்       சேதி     உனக்கேதும்   புரியுமா

அவன் --ஆசையோடு     கேட்டதுக்கு     கோவமா    ---என்
                அத்தை       மவ     நீதான்னு     தெரியுமே
               மீசை   வைச்ச      ஆம்பிள    நான்    புரியுதா   ---அடி
               மின்னல்     போல     வெட்டுறியே    விவரமா 

சனி, 24 ஆகஸ்ட், 2019

வாராய் 7 6 8

பொன்னில்          செய்த        பூவே    ---உன்னை
பூசை        செய்வேன்      நானே
கண்ணில்     நின்றாய்      அன்று    ---நாம்
காதல்          செய்தல்      நன்று

உன்னை       எண்ணி       வாழ்வேன்   ---நீ
உதறிப்       போனால்     வீழ்வேன்
பண்ணில்     ஸ்வரங்கள்     இனிமை    ---என்னை
பரிதவிக்க     விடுதல்      கொடுமை

வானில்        நிலவை       ரசிப்பேன்    ---உன்னை
வாரி        யணைத்து     ருசிப்பேன்
கானம்      காதில்      இசைப்பேன்   ---பொங்கும்
காதல்        கடலில்     மிதப்பேன்

அங்கம்      முழுதும்      தங்கம்   ---அதில்
அழகு      வழியும்     எங்கும்
திங்கள்     வானம்     சாட்சி    ---அடியே
தினமும்      உனது      ஆட்சி

அள்ளிக்      கொடுக்க     வாராய்   ---எனக்கு
ஆசை       முத்தம்   நீ      தாராய்
சொல்லிக்      கொடுப்பது     நீயல்லவா   ---அந்த
சொர்க்கம்      நீ  தரும்     வரமல்லவா 

காவல் 7 6 7

அவன்   ;  கண்ணாலே        பேசுறியே       கண்ணம்மா   --நாம
                    கண்ணாலம்     செஞ்சாலே      என்னம்மா
                    உன்மேல      ஆசை  வச்சேன்    நில்லம்மா   --எனக்கு
                    உசந்த      பதிலை     நீயுமினி     சொல்லம்மா


அவள்  ;  முண்டாசை        தலையில        கட்டி  ---நல்ல
                  முழுக்கையில்    சட்டையப்   போட்டு
                  கண்டவரை     வம்பிழுக்கும்     கண்ணையா  --உன்
                  கவனம்      என்மேல்       வந்தது    என்னய்யா

அவன் ;  பழுத்துக்      குலுங்கும்       பழத்தோட்டம்     ---நானும்
                  பறித்துத்       தின்பேன்     கிளியாட்டம்
                  அழுத்தமான     பொண்ணு நீயி   அன்னம்மா   ---நா
                  ஆசை       வச்சா      தப்பில்லே     பொன்னம்மா

அவள் ;  வக்கணையாப்     பேசி      வாரே    ---உனக்கு
                 வாய்த்    துடுக்கு      ரொம்ப     நீளம்
                 அக்கா     மகளா     நானுனக்கு    சின்னய்யா  --நீயும்
                அதட்டி    உருட்டி      மிரட்டிடாதே      கேணையா

அவன் ;கோவம்      வேண்டாம்      கன்னி  மானே   ---நான்
                கொட்டித்     தாறேன்     தங்கம்     தானே
               ஆவலுடன்     கேட்டதும்     தப்பு தான்    --நீ
               அன்பு    காட்டினா    எனக்கென்றும்    ஜாலி  தான்

இருவரும் ;; கண்ணும்   கண்ணும்   சேர    காதலாச்சு   --இது
                         கண்ணாலம்     வரையிலும்    நீண்டு  போச்சு
                        பொண்ணும்  ஆணும்     சேர்ந்து   போச்சு   ---நமக்கு
                         பெரியவங்க     இனிமேல்     காவலாச்சு  

சாரதி 7 6 6

ஆயர்   பாடிக்         கண்ணனே  ---தூய
அன்பு      கொண்ட     மன்னனே
வாயினில்     உலகினைக்    காட்டினாய்   ---உன்
வல்லமையால்     உயிர்களைக்     காக்கிறாய்

வெண்ணெய்     திருடித்      தின்றவா    ---தினம்
வேடிக்கை       நிறையச்     செய்தவா
அன்னை      யசோதை     மடியிலே  ---எங்கள்
அன்புக்       கண்ணனே     சிரிக்கிறாய்

காளிங்க      நர்த்தனம்      ஆடினாய்  ---கொடிய
கம்சனையும்    வதம்  செய்து     முடித்தனை
பாற் கடல்   தன்னில்     உறங்கினை    ---உன்
பக்கத்தில்    திருமகள்    இருந்தனள் --

பார்த்தனுக்கு      சாரதி      யாகினாய்   ---பெரும்
பாரதப்       போர்தனை      முடித்தனை
பார்த்திடும்     கண்களுக்கோ     எளியவன்   ---ஆனால்
பகைவரை      அழிப்பதில்       வலியவன்

கண்ணனின்    பேரைச்      சொல்லுவோம்   ---வரும்
கவலைகள்     எல்லாவையும்     வெல்லுவோம்
மன்னவன்       புகழினைப்        பாடுவோம்    --அவரை
மனதில்        நினைத்து       மகிழுவோம்

(23-08-2019   வெள்ளிக்  கிழமை     கோகுலாஷ்டமி      தினம் )



புதன், 21 ஆகஸ்ட், 2019

கன்னித் தமிழ் 7 6 5

தமிழராக        உலகில்         வாழுங்கள்   ---நம்
தாய்த்      தமிழில்      எங்கும்    பேசுங்கள்
அமுதமான      மொழி     நமதல்லவா   ---அதனை
அகிலமெங்கும்   பரவச்   செய்தல்   முறையல்லவா

முன்னாள் முதல்     முழங்கிவரும்     மொழியல்லவா   ---நம்
மூவேந்தர்       செய்து  வைத்த       வழியல்லவா
இந்நாளில்      வெறுத்து விடல்    நியாயமில்லையே   ---இங்கு
தமிழை      விட்டால்      உங்களுக்கு     கதியில்லையே

சிவனாரின்     திருமகனாம்   செந்தில்  வேலன்    ---அவர்
சீரிளமை    முயற்சியினால்    செழுமை     பெற்றது
அரணாக      காப்பதற்கு    அணியாகச்   சேருங்கள்   ---நம்
அன்னைத்    தமிழ்      வாழ்கவென   நீங்கள்   கூறுங்கள்

பேசப்      பேச     தமிழென்று ம்    இனிமையானது  ---மன
வேதனையை     தீர்க்க     என்றும்     மருந்தானது
சோதனைகள்     வந்த    போதும்    வென்று   நிலைத்தது   ---மதுரை
சோமசுந்தரர்    தலைமையிலே  தமிழ்  சங்கம்    கண்டது

உலக நூலாம்      திருக்குறளே      தமிழில்   உள்ளது   ---அதனை
உணர்ந்து     கொண்ட     உலகமே    வியந்து    போனது
கலக  எண்ணம்     கொண்டவர்கள்    காற்றில்    ஓடுவார்   ---நம்
கன்னித்    தமிழ்    வாழ்கவெனக்     களிப்பில்லாடுவோம்