கண்ணால் அவளைக் கண்டேன் ----பொங்கும்
காதல் அவள் மேல் கொண்டேன்
பொன்னால் செய்ததோ பூவை ----எனக்கு
புகலிடம் அவள்தான் தேவை
மின்னாமல் வருகின்ற மழையோ ----அவள்
மேனி எழில்வண்ணச் சிலையோ
கண்ணால் என்னையே வளைத்தாள் ----காதல்
கணைகளை என்மேல் தொடுத்தாள்
என்னையே மறந்து போனேன் ----அட
இரவே பகலாய்ப் போனது
தென்னை தருவது இளநீர் ---அவளை
தினமும் நினைத்திடப் பன்னீர்
உள்ளமோ அவளைச் சுற்றுது ----அவள்
உறவே நானும் கற்றது
கள்ளமில்லா காதலே வாழும் ----அவள்
காதலில் என்னுயிர் நீளும்
தமிழில் பாடியே ரசிப்பேன் ----அந்த
தையலை தினமும் ருசிப்பேன்
அமுதம் என்பது அவள்தான் -----அவளை
அள்ளிக் குடித்திடத் தேன்தான்
காதல் அவள் மேல் கொண்டேன்
பொன்னால் செய்ததோ பூவை ----எனக்கு
புகலிடம் அவள்தான் தேவை
மின்னாமல் வருகின்ற மழையோ ----அவள்
மேனி எழில்வண்ணச் சிலையோ
கண்ணால் என்னையே வளைத்தாள் ----காதல்
கணைகளை என்மேல் தொடுத்தாள்
என்னையே மறந்து போனேன் ----அட
இரவே பகலாய்ப் போனது
தென்னை தருவது இளநீர் ---அவளை
தினமும் நினைத்திடப் பன்னீர்
உள்ளமோ அவளைச் சுற்றுது ----அவள்
உறவே நானும் கற்றது
கள்ளமில்லா காதலே வாழும் ----அவள்
காதலில் என்னுயிர் நீளும்
தமிழில் பாடியே ரசிப்பேன் ----அந்த
தையலை தினமும் ருசிப்பேன்
அமுதம் என்பது அவள்தான் -----அவளை
அள்ளிக் குடித்திடத் தேன்தான்