சொந்தமென உலகில் யாருமில்லை ----அதனால்
சோர்வும் அடையத் தேவையில்லை
பந்தமென வந்திடும் பரந்தாமா ---உன்னை
பணிந்து தொழுகிறேன் பலகாலமா
ஆடு மாடுகள் மேய்ப்பவன் ---தன்
அடியவர் தம்மையும் காப்பவன்
பீடுநடை போடும் பெரியவன் ---நம்
பேதைமையைப் போக்க வந்த ஹரியவன்
மண்ணை யள்ளித் தின்றது வாயிலே ---பல
மாயங்கள் காட்டிடுவான் கண்ணிலே
கண்ணனாக வடிவெடுத்த கற்பகம் ---நாம்
காணக் கிடைக்காத அற்புதம்
மலையினைக் குடையாக்கிய மாதவன் ---நம்
மனக்குறையை தீர்க்கவந்த மாயவன்
அலைமகளின் துணைவனான தூயவன் ---தனது
அன்பினாலே அகிலமதை ஆள்பவன்
கண்ணனின் காலடி பற்றி விடு --உள்ள
கவலைகளை அவனிடத்தில் விட்டு விடு
நன்மையெல்லாம் அவன் தருவான் நெஞ்சமே ---அவனை
நம்பினார் கெடுவதில்லை எந்த நாளுமே
சோர்வும் அடையத் தேவையில்லை
பந்தமென வந்திடும் பரந்தாமா ---உன்னை
பணிந்து தொழுகிறேன் பலகாலமா
ஆடு மாடுகள் மேய்ப்பவன் ---தன்
அடியவர் தம்மையும் காப்பவன்
பீடுநடை போடும் பெரியவன் ---நம்
பேதைமையைப் போக்க வந்த ஹரியவன்
மண்ணை யள்ளித் தின்றது வாயிலே ---பல
மாயங்கள் காட்டிடுவான் கண்ணிலே
கண்ணனாக வடிவெடுத்த கற்பகம் ---நாம்
காணக் கிடைக்காத அற்புதம்
மலையினைக் குடையாக்கிய மாதவன் ---நம்
மனக்குறையை தீர்க்கவந்த மாயவன்
அலைமகளின் துணைவனான தூயவன் ---தனது
அன்பினாலே அகிலமதை ஆள்பவன்
கண்ணனின் காலடி பற்றி விடு --உள்ள
கவலைகளை அவனிடத்தில் விட்டு விடு
நன்மையெல்லாம் அவன் தருவான் நெஞ்சமே ---அவனை
நம்பினார் கெடுவதில்லை எந்த நாளுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக