கானம் பாடும் வானம்பாடி ---நான்
காதல் கொண்டேன் உன்னைத் தேடி
கருணை கொண்டு என்னை நாடி ---நாம்
கலந்திடலாம் தூய அன்பில் கூடி
சரண் அடைய வேண்டுமோடி ---நானே
சண்டை போட உனக்கு சரியான ஜோடி
அரண்மனையில் வாழ வைப்பேன் ---உனக்கு
ஆயிரம் பேர்கள் காவல் நிற்பர்
யாரும் பறித்திடா ரோஜா ----அடியே
நானே உனக்கு ஏற்ற ராஜா
திருவிழாவில் வருகின்ற தேரே ---உன்னை
திகைத்துப் பார்த்திடும் இந்த ஊரே
அங்கத்தில் தங்கம் வைத்தாய் ---உனது
அழகினில் ஆசை வைத்தேன்
திங்களும் வானமும் சாட்சி ---நம்
திருமணம் ஆனாலும் தொடர்வது உனது ஆட்சி
கொடுக்க முடியாதத்தைத் கொடுப்பேன் ----அந்த
கோவைக் கனிகளை ருசிப்பேன்
தடுத்திட முயலாதே பெண்ணே ----உனக்கு
தாசனாய் எந்நாளும் இருப்பேன் கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக