ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தாசன் 7 8 3

கானம்            பாடும்          வானம்பாடி   ---நான் 
காதல்        கொண்டேன்     உன்னைத்     தேடி 
கருணை கொண்டு     என்னை      நாடி   ---நாம் 
கலந்திடலாம்      தூய      அன்பில்     கூடி 

சரண்        அடைய      வேண்டுமோடி   ---நானே 
சண்டை    போட   உனக்கு    சரியான    ஜோடி 
அரண்மனையில்    வாழ     வைப்பேன்   ---உனக்கு 
ஆயிரம்   பேர்கள்     காவல்     நிற்பர் 

யாரும்       பறித்திடா        ரோஜா   ----அடியே 
நானே       உனக்கு     ஏற்ற     ராஜா 
திருவிழாவில்      வருகின்ற     தேரே   ---உன்னை 
திகைத்துப்       பார்த்திடும்    இந்த    ஊரே 

அங்கத்தில்     தங்கம்      வைத்தாய்    ---உனது 
அழகினில்     ஆசை      வைத்தேன் 
திங்களும்      வானமும்     சாட்சி   ---நம் 
திருமணம்      ஆனாலும்    தொடர்வது    உனது   ஆட்சி 

கொடுக்க        முடியாதத்தைத்   கொடுப்பேன்   ----அந்த 
கோவைக்      கனிகளை       ருசிப்பேன் 
தடுத்திட      முயலாதே      பெண்ணே    ----உனக்கு 
தாசனாய்      எந்நாளும்     இருப்பேன்    கண்ணே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக