திருநாள் வந்தது ---மனம்
தேனாய் இனிக்குது
மணநாள் வந்திடும் ---புது
மகிழ்வினைத் தந்திடும்
வழிமேல் விழி வைத்தேன் ----அவர்
வருகை எதிர்பார்த்தேன்
அழகன் வருவாரா ---என்
ஆவல் தணிப்பாரா
நிலவு அழகாகும் ---அவர்
நினைவு சூடேற்றும்
பழகிட மனம் தேடும் ---ஆனால்
பண்பு தடுத்து விடும்
சேர்ந்து மகிழ்வோமா ---இந்த
செகத்தை மறப்போமா
பார்க்கும் இடமெல்லாம் ---அவரின்
பதிவு தெரிகிறதே
காலம் எனக்காகும் ---நாளும்
காதல் வழிந்தோடும்
கோல முருகனருள் ----எனக்கு
குறையாது நிறைந்திருக்கும்
தேனாய் இனிக்குது
மணநாள் வந்திடும் ---புது
மகிழ்வினைத் தந்திடும்
வழிமேல் விழி வைத்தேன் ----அவர்
வருகை எதிர்பார்த்தேன்
அழகன் வருவாரா ---என்
ஆவல் தணிப்பாரா
நிலவு அழகாகும் ---அவர்
நினைவு சூடேற்றும்
பழகிட மனம் தேடும் ---ஆனால்
பண்பு தடுத்து விடும்
சேர்ந்து மகிழ்வோமா ---இந்த
செகத்தை மறப்போமா
பார்க்கும் இடமெல்லாம் ---அவரின்
பதிவு தெரிகிறதே
காலம் எனக்காகும் ---நாளும்
காதல் வழிந்தோடும்
கோல முருகனருள் ----எனக்கு
குறையாது நிறைந்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக