ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆவல் 7 7 9

திருநாள்        வந்தது     ---மனம்
தேனாய்       இனிக்குது
மணநாள்    வந்திடும்   ---புது
மகிழ்வினைத்     தந்திடும்

வழிமேல்      விழி வைத்தேன்   ----அவர்
வருகை    எதிர்பார்த்தேன்
அழகன்      வருவாரா    ---என்
ஆவல்       தணிப்பாரா

நிலவு        அழகாகும்   ---அவர்
நினைவு     சூடேற்றும்
பழகிட     மனம்   தேடும்  ---ஆனால்
பண்பு      தடுத்து விடும்

சேர்ந்து      மகிழ்வோமா  ---இந்த
செகத்தை    மறப்போமா
பார்க்கும்     இடமெல்லாம்  ---அவரின்
பதிவு        தெரிகிறதே

காலம்       எனக்காகும்     ---நாளும்
காதல்       வழிந்தோடும்
கோல      முருகனருள்   ----எனக்கு
குறையாது    நிறைந்திருக்கும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக