நெஞ்சினில் அவளைச் சுமந்தேன் ----அவள்
நினைவினில் மனமும் வெந்தேன்
வஞ்சி மகள் வருவாளா ---என்
வாழ்வினில் நலம் தருவாளா
கொஞ்சிடும் குரலோ கிளி ---அவளை
குலவிட எதுதான் வழி
பஞ்சினைப் போலொரு மேனி ---யாரும்
பறித்துத் தின்றிடா தீங்கனி
மெல்லென நடப்பது பாதம் ---அவள்
மேலோர் போற்றிடும் வேதம்
கொல்வது ஒன்றுதான் குறி ----அவள்
குடும்பத்தில் வாழ்கின்ற பொறி
சீறிப் பாய்வாள் சினந்து ----இந்த
செகத்தினை சற்று மறந்து
கூரிய அம்புகள் கொண்டாள் ---பலர்
குருதியில் பிரியமும் கொண்டாள்
ஏனிங்கு இவளைப் படைத்தார் ----அது
இதுவரை தெரிந்திடா விடைதான்
தேனினைப் போலவள் இனிக்க ----அந்த
தெய்வம் துணைசெய்ய வருமா
நினைவினில் மனமும் வெந்தேன்
வஞ்சி மகள் வருவாளா ---என்
வாழ்வினில் நலம் தருவாளா
கொஞ்சிடும் குரலோ கிளி ---அவளை
குலவிட எதுதான் வழி
பஞ்சினைப் போலொரு மேனி ---யாரும்
பறித்துத் தின்றிடா தீங்கனி
மெல்லென நடப்பது பாதம் ---அவள்
மேலோர் போற்றிடும் வேதம்
கொல்வது ஒன்றுதான் குறி ----அவள்
குடும்பத்தில் வாழ்கின்ற பொறி
சீறிப் பாய்வாள் சினந்து ----இந்த
செகத்தினை சற்று மறந்து
கூரிய அம்புகள் கொண்டாள் ---பலர்
குருதியில் பிரியமும் கொண்டாள்
ஏனிங்கு இவளைப் படைத்தார் ----அது
இதுவரை தெரிந்திடா விடைதான்
தேனினைப் போலவள் இனிக்க ----அந்த
தெய்வம் துணைசெய்ய வருமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக