வியாழன், 26 செப்டம்பர், 2019

கிளி 7 9 5

நெஞ்சினில்      அவளைச்       சுமந்தேன்   ----அவள்
நினைவினில்      மனமும்     வெந்தேன்
வஞ்சி         மகள்      வருவாளா   ---என்
வாழ்வினில்       நலம்     தருவாளா

கொஞ்சிடும்      குரலோ       கிளி   ---அவளை
குலவிட       எதுதான்       வழி
பஞ்சினைப்      போலொரு     மேனி    ---யாரும்
பறித்துத்     தின்றிடா     தீங்கனி

மெல்லென       நடப்பது        பாதம்    ---அவள்
மேலோர்      போற்றிடும்     வேதம்
கொல்வது      ஒன்றுதான்      குறி    ----அவள்
குடும்பத்தில்      வாழ்கின்ற     பொறி

சீறிப்        பாய்வாள்        சினந்து   ----இந்த
செகத்தினை      சற்று     மறந்து
கூரிய         அம்புகள்       கொண்டாள்   ---பலர்
குருதியில்      பிரியமும்    கொண்டாள்

ஏனிங்கு        இவளைப்     படைத்தார்   ----அது
இதுவரை       தெரிந்திடா      விடைதான்   
தேனினைப்       போலவள்     இனிக்க    ----அந்த
தெய்வம்       துணைசெய்ய      வருமா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக