எந்தன் மனம் செண்டானதே ---எதோ
புதிய இன்பம் வந்தாடுதே
பொன்னில் செய்த பூவையென்பேன் ----இந்த
பூமிக்கு வந்திட்ட ப் பாவை யென்பேன்
அன்பு மலர்ச் சரம் தொடுத்தேன் ---அவள்
கழுத்தில் மாலையாய் இட்டேன்
இன்பமுடன் சிரித்து நின்றாள் ---தேன்
இதழ்களில் முத்தமும் கொடுத்தேன்
எட்டடுக்கு மாளிகை வசிப்பதற்கு ---இரவில்
தூங்கிட வண்ணப் பஞ்சு மெத்தை
அட்டியின்றி சமையல் வகை ஆகாரம் ---அவள்
அடையலாம் என்வீட்டில் வெகு காலம்
நிலவு கால இரவுகள் ---அதில்
நீளுமே நெடு நேரம் இனிய உறவுகள்
பழகிடுவோம் காதலில் பலரகம் ---அவள்
பருகப் பருக திகட்டிடாத பழ ரசம்
வாழும் காலங்கள் இன்னும் நீளுமோ ---அந்த
வனிதையின் மனம் ரொம்ப ஆழமோ
சூழும் வினைகள் இனிமேல் மாறலாம் ---நாங்கள்
சுகமுடன் என்றுமே நன்றாய் வாழலாம்
புதிய இன்பம் வந்தாடுதே
பொன்னில் செய்த பூவையென்பேன் ----இந்த
பூமிக்கு வந்திட்ட ப் பாவை யென்பேன்
அன்பு மலர்ச் சரம் தொடுத்தேன் ---அவள்
கழுத்தில் மாலையாய் இட்டேன்
இன்பமுடன் சிரித்து நின்றாள் ---தேன்
இதழ்களில் முத்தமும் கொடுத்தேன்
எட்டடுக்கு மாளிகை வசிப்பதற்கு ---இரவில்
தூங்கிட வண்ணப் பஞ்சு மெத்தை
அட்டியின்றி சமையல் வகை ஆகாரம் ---அவள்
அடையலாம் என்வீட்டில் வெகு காலம்
நிலவு கால இரவுகள் ---அதில்
நீளுமே நெடு நேரம் இனிய உறவுகள்
பழகிடுவோம் காதலில் பலரகம் ---அவள்
பருகப் பருக திகட்டிடாத பழ ரசம்
வாழும் காலங்கள் இன்னும் நீளுமோ ---அந்த
வனிதையின் மனம் ரொம்ப ஆழமோ
சூழும் வினைகள் இனிமேல் மாறலாம் ---நாங்கள்
சுகமுடன் என்றுமே நன்றாய் வாழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக