செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பழரசம் 7 8 0

எந்தன்     மனம்          செண்டானதே    ---எதோ
புதிய           இன்பம்      வந்தாடுதே
பொன்னில்       செய்த     பூவையென்பேன்   ----இந்த
பூமிக்கு       வந்திட்ட  ப்     பாவை யென்பேன்

அன்பு       மலர்ச்       சரம்      தொடுத்தேன்   ---அவள்
கழுத்தில்      மாலையாய்     இட்டேன்
இன்பமுடன்     சிரித்து     நின்றாள்   ---தேன்
இதழ்களில்    முத்தமும்     கொடுத்தேன்

எட்டடுக்கு     மாளிகை     வசிப்பதற்கு   ---இரவில்
தூங்கிட      வண்ணப்      பஞ்சு  மெத்தை
அட்டியின்றி    சமையல்   வகை    ஆகாரம்   ---அவள்
அடையலாம்      என்வீட்டில்      வெகு  காலம்

நிலவு         கால          இரவுகள்    ---அதில்
நீளுமே        நெடு  நேரம்     இனிய    உறவுகள்
பழகிடுவோம்    காதலில்     பலரகம்   ---அவள்
பருகப்   பருக     திகட்டிடாத     பழ ரசம்

வாழும்       காலங்கள்    இன்னும்     நீளுமோ  ---அந்த
வனிதையின்     மனம்      ரொம்ப     ஆழமோ
சூழும்     வினைகள்    இனிமேல்    மாறலாம்  ---நாங்கள்
சுகமுடன்     என்றுமே     நன்றாய்    வாழலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக