புதன், 25 செப்டம்பர், 2019

எண்ணம் 7 9 3

கண்களில்       தெரியும்        காவியம்    ---இரு 
கலைஞர்கள்      வரைந்த    ஓவியம் 
உன்னில்     அழகி    யாரு    ---அது 
உலகினில்     உண்டோ   கூறு 

பின்னிப்     பின்னியே     நடப்பாய்   ---உன் 
பின்னலைக்     கைகளால்    இழுப்பாய் 
மண்ணில்      தெரியுமே     வானம்   ---உன்னை 
மறக்க      முடியுமோ     நானும் 

சிற்றிடை       மெல்லென       அசையும்   ---முகம் 
சீதள       நிலவாய்ப்     பொழியும் 
பற்களில்     மலர்கள்      மலரும்    ---உன்னை 
பார்த்திட      ஆசைகள்      வளரும் 

நிலவில்      ஒளிர்வது       நீயா   ---உன்னை 
நினைத்திடும்     மனதில்      தீயா 
பழகிப்       பார்த்திட      வருவாய்    ----நானோ 
பாசத்தை     யள்ளித்    தருவேன் 

வாழும்     காலங்கள்      வாழ்வோம்   ---அதில் 
வளர்கலை     அனைத்தும்     பயில்வோம் 
சூழும்       துயரங்கள்      விலகும்   ----மனதில் 
தூய       எண்ணம்       மலரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக