கண்களில் தெரியும் காவியம் ---இரு
கலைஞர்கள் வரைந்த ஓவியம்
உன்னில் அழகி யாரு ---அது
உலகினில் உண்டோ கூறு
பின்னிப் பின்னியே நடப்பாய் ---உன்
பின்னலைக் கைகளால் இழுப்பாய்
மண்ணில் தெரியுமே வானம் ---உன்னை
மறக்க முடியுமோ நானும்
சிற்றிடை மெல்லென அசையும் ---முகம்
சீதள நிலவாய்ப் பொழியும்
பற்களில் மலர்கள் மலரும் ---உன்னை
பார்த்திட ஆசைகள் வளரும்
நிலவில் ஒளிர்வது நீயா ---உன்னை
நினைத்திடும் மனதில் தீயா
பழகிப் பார்த்திட வருவாய் ----நானோ
பாசத்தை யள்ளித் தருவேன்
வாழும் காலங்கள் வாழ்வோம் ---அதில்
வளர்கலை அனைத்தும் பயில்வோம்
சூழும் துயரங்கள் விலகும் ----மனதில்
தூய எண்ணம் மலரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக