இரவோடு வருகின்ற நிலவே ---என்
இனியவளெங்கே நீ சொல்லு நிலவே
உறவெனும் அமுதமாய் வந்தாள் --உயிரோடு
உடலையும் உத்தமி தந்தாள்
கணைவிட்டுப் பாய்கின்ற கூரோ ---என்
கண்ணீரும் அவள் தந்த நீரோ
துணையாகப் பாய்கின்ற வெள்ளம் ---தோகை
எனக்காக வாழ்ந்திடும் உள்ளம்
சிந்தாமல் சிதறாமல் வந்தாள் ---என்
சிந்தனைக்கு ஊற்றாக நின்றாள்
முந்தானைக் கொடியினை விரித்தாள் ---கொடுக்கும்
முத்தத்தில் உலகையே மறைத்தாள்
அன்பாலே அணைக்கின்ற நெஞ்சம் ---எனது
அழகியின் காலடியில் அடியேனும் தஞ்சம்
கண்போல வைத்தவளைக் காப்பேன் ---கடும்
உழைப்பாலே காசுகளைச் சேர்ப்பேன்
இளமை அனுபவங்கள் பலகோடி ---என்றும்
அடைவேனே அவளுடன் அனுதினம் கூடி
வளமான எதிர் காலம் எனக்கென உண்டு ---அவளெனை
வாழ்ந்திட வைக்கிற வாகை மலர்ச் செண்டு
இனியவளெங்கே நீ சொல்லு நிலவே
உறவெனும் அமுதமாய் வந்தாள் --உயிரோடு
உடலையும் உத்தமி தந்தாள்
கணைவிட்டுப் பாய்கின்ற கூரோ ---என்
கண்ணீரும் அவள் தந்த நீரோ
துணையாகப் பாய்கின்ற வெள்ளம் ---தோகை
எனக்காக வாழ்ந்திடும் உள்ளம்
சிந்தாமல் சிதறாமல் வந்தாள் ---என்
சிந்தனைக்கு ஊற்றாக நின்றாள்
முந்தானைக் கொடியினை விரித்தாள் ---கொடுக்கும்
முத்தத்தில் உலகையே மறைத்தாள்
அன்பாலே அணைக்கின்ற நெஞ்சம் ---எனது
அழகியின் காலடியில் அடியேனும் தஞ்சம்
கண்போல வைத்தவளைக் காப்பேன் ---கடும்
உழைப்பாலே காசுகளைச் சேர்ப்பேன்
இளமை அனுபவங்கள் பலகோடி ---என்றும்
அடைவேனே அவளுடன் அனுதினம் கூடி
வளமான எதிர் காலம் எனக்கென உண்டு ---அவளெனை
வாழ்ந்திட வைக்கிற வாகை மலர்ச் செண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக