புதன், 11 செப்டம்பர், 2019

வாகைமலர் 7 9 0

இரவோடு      வருகின்ற      நிலவே   ---என்
இனியவளெங்கே    நீ சொல்லு    நிலவே
உறவெனும்      அமுதமாய்    வந்தாள்   --உயிரோடு
உடலையும்     உத்தமி      தந்தாள்

கணைவிட்டுப்       பாய்கின்ற     கூரோ   ---என்
கண்ணீரும்     அவள் தந்த      நீரோ
துணையாகப்    பாய்கின்ற     வெள்ளம்   ---தோகை
எனக்காக      வாழ்ந்திடும்      உள்ளம்

சிந்தாமல்      சிதறாமல்      வந்தாள்   ---என்
சிந்தனைக்கு     ஊற்றாக     நின்றாள்
முந்தானைக்    கொடியினை    விரித்தாள்   ---கொடுக்கும்
முத்தத்தில்     உலகையே     மறைத்தாள்

அன்பாலே       அணைக்கின்ற      நெஞ்சம்   ---எனது
அழகியின்      காலடியில்     அடியேனும்     தஞ்சம்
கண்போல     வைத்தவளைக்    காப்பேன்   ---கடும்
உழைப்பாலே     காசுகளைச்     சேர்ப்பேன்

இளமை        அனுபவங்கள்      பலகோடி   ---என்றும்
அடைவேனே       அவளுடன்     அனுதினம்    கூடி
வளமான        எதிர் காலம்      எனக்கென    உண்டு   ---அவளெனை
வாழ்ந்திட      வைக்கிற      வாகை  மலர்ச்  செண்டு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக