வியாழன், 26 செப்டம்பர், 2019

மயக்கம் 7 9 4

கண்ணால்         வருவது        காதல்   ---அது
காளை       கன்னிக்கு       மோதல்
பின்னால்      வருமே      ஊடல்   ---இனி
பின்னணியில்      உள்ளது      வாடல்

நீராய்        இருந்தால்      குளிரும்   ---அது
நெருப்பாய்      இருந்தால்      மலரும்
யாராய்    இருந்தால்      என்ன    ---இது
யாவர்க்கும்    பொதுவெனச்    சொல்வேன்

இளமை         தருவது      மயக்கம்   ---நமக்கு
எதிலும்       உள்ளது      தயக்கம்
பழகிடப்       பாலும்     புளிக்கும்   ---அது
பல்லினைக்     காட்டி    இளிக்கும்

கேட்டால்       கிடைப்பது      இல்லை   ---இங்கு
கேள்வி       பதிலுமே     தொல்லை
பாட்டால்       வருவது      அமைதி   ---நீ
படித்தால்      உயர்வது     உறுதி

நல்லன       என்பதை        நாடு   ----பிறர்
நலம்பெற     என்றுமே      பாடு
உள்ளவன்      ஒருவன்      உண்டு   ---அவனை
உணர்ந்திடு      இன்றேனும்       கண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக