கண்ணால் வருவது காதல் ---அது
காளை கன்னிக்கு மோதல்
பின்னால் வருமே ஊடல் ---இனி
பின்னணியில் உள்ளது வாடல்
நீராய் இருந்தால் குளிரும் ---அது
நெருப்பாய் இருந்தால் மலரும்
யாராய் இருந்தால் என்ன ---இது
யாவர்க்கும் பொதுவெனச் சொல்வேன்
இளமை தருவது மயக்கம் ---நமக்கு
எதிலும் உள்ளது தயக்கம்
பழகிடப் பாலும் புளிக்கும் ---அது
பல்லினைக் காட்டி இளிக்கும்
கேட்டால் கிடைப்பது இல்லை ---இங்கு
கேள்வி பதிலுமே தொல்லை
பாட்டால் வருவது அமைதி ---நீ
படித்தால் உயர்வது உறுதி
நல்லன என்பதை நாடு ----பிறர்
நலம்பெற என்றுமே பாடு
உள்ளவன் ஒருவன் உண்டு ---அவனை
உணர்ந்திடு இன்றேனும் கண்டு
காளை கன்னிக்கு மோதல்
பின்னால் வருமே ஊடல் ---இனி
பின்னணியில் உள்ளது வாடல்
நீராய் இருந்தால் குளிரும் ---அது
நெருப்பாய் இருந்தால் மலரும்
யாராய் இருந்தால் என்ன ---இது
யாவர்க்கும் பொதுவெனச் சொல்வேன்
இளமை தருவது மயக்கம் ---நமக்கு
எதிலும் உள்ளது தயக்கம்
பழகிடப் பாலும் புளிக்கும் ---அது
பல்லினைக் காட்டி இளிக்கும்
கேட்டால் கிடைப்பது இல்லை ---இங்கு
கேள்வி பதிலுமே தொல்லை
பாட்டால் வருவது அமைதி ---நீ
படித்தால் உயர்வது உறுதி
நல்லன என்பதை நாடு ----பிறர்
நலம்பெற என்றுமே பாடு
உள்ளவன் ஒருவன் உண்டு ---அவனை
உணர்ந்திடு இன்றேனும் கண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக