கண்ணே உன்னைக் கண்டாலென்ன --நான்
காதல் அமுதம் உண்டாலென்ன
பின்னால் தொடர்ந்து வந்தாலென்ன ---எந்தன்
பேசும் கிளி பதில் சொன்னாலென்ன
அல்லி மலர்க் குளத்தில் கண்டேன் ---நான்
ஆசை நிறைய ஆவல் கொண்டேன்
பள்ளிப் பாடம் படிக்க வேண்டும் ---அன்பே
பருவப் பாடல் பாட வேண்டும்
அந்தி பகல் அலைந்து கெட்டேன் ---நானும்
அங்கும் இங்கும் தேடிப் பார்த்தேன்
பந்தி வைக்க மனம் இல்லையோ ---என்
பாரி ஜாத மலரே பதிலைச் சொல்லு
இரவு பகல் போனால் என்ன ----என்
இளமை பாடும் பாடல் கேட்பாய்
உறவு கொள்ள தினமும் கேட்கும் ---எந்தன்
உத்தமியே உனது மனதைத் திறவாய்
மண்ணில் வாழும் மாந்தரிடையில் ---என்றும்
மங்காக் காதல் எண்ணம் உண்டு
பெண்மேல் ஆசை நிறையக் கொண்டு ---நான்
பிதற்றுவதாக நீயும் எண்ணா ய்ப் பெண்ணே
காதல் அமுதம் உண்டாலென்ன
பின்னால் தொடர்ந்து வந்தாலென்ன ---எந்தன்
பேசும் கிளி பதில் சொன்னாலென்ன
அல்லி மலர்க் குளத்தில் கண்டேன் ---நான்
ஆசை நிறைய ஆவல் கொண்டேன்
பள்ளிப் பாடம் படிக்க வேண்டும் ---அன்பே
பருவப் பாடல் பாட வேண்டும்
அந்தி பகல் அலைந்து கெட்டேன் ---நானும்
அங்கும் இங்கும் தேடிப் பார்த்தேன்
பந்தி வைக்க மனம் இல்லையோ ---என்
பாரி ஜாத மலரே பதிலைச் சொல்லு
இரவு பகல் போனால் என்ன ----என்
இளமை பாடும் பாடல் கேட்பாய்
உறவு கொள்ள தினமும் கேட்கும் ---எந்தன்
உத்தமியே உனது மனதைத் திறவாய்
மண்ணில் வாழும் மாந்தரிடையில் ---என்றும்
மங்காக் காதல் எண்ணம் உண்டு
பெண்மேல் ஆசை நிறையக் கொண்டு ---நான்
பிதற்றுவதாக நீயும் எண்ணா ய்ப் பெண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக