செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பாரிஜாதம் 7 8 1

கண்ணே       உன்னைக்      கண்டாலென்ன   --நான்
காதல்         அமுதம்       உண்டாலென்ன
பின்னால்    தொடர்ந்து    வந்தாலென்ன  ---எந்தன்
பேசும்  கிளி     பதில்      சொன்னாலென்ன

அல்லி     மலர்க்    குளத்தில்     கண்டேன்   ---நான்
ஆசை    நிறைய    ஆவல்     கொண்டேன்
பள்ளிப்     பாடம்     படிக்க    வேண்டும்   ---அன்பே
பருவப்     பாடல்     பாட     வேண்டும்

அந்தி      பகல்       அலைந்து     கெட்டேன்   ---நானும்
அங்கும்      இங்கும்     தேடிப்    பார்த்தேன்
பந்தி      வைக்க     மனம்      இல்லையோ  ---என்
பாரி  ஜாத    மலரே     பதிலைச்     சொல்லு

இரவு      பகல்       போனால்      என்ன   ----என்
இளமை     பாடும்    பாடல்     கேட்பாய்
உறவு      கொள்ள    தினமும்   கேட்கும்  ---எந்தன்
உத்தமியே    உனது    மனதைத்     திறவாய்

மண்ணில்      வாழும்      மாந்தரிடையில்   ---என்றும்
மங்காக்       காதல்      எண்ணம்     உண்டு
பெண்மேல்    ஆசை    நிறையக்    கொண்டு  ---நான்
பிதற்றுவதாக     நீயும்      எண்ணா ய்ப்    பெண்ணே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக