கண்ணில் உன்னைக் கண்டாலே போதும் --உடனே
காதல் எண்ணம் வந்தே தீரும்
என்னில் உன்னை இன்றே சேர்ப்பே ன் ---நீ
எந்தன் மனைவியென ஆக வேண்டும் பெண்ணே
கொஞ்சி வரும் தமிழும் நீயோ ---நான்
குலவ நினைக்கும் எனது ஆசைக் கிளியோ
அஞ்சுகத்தின் அழகை யள்ளி வரும் கண்ணே ---இனி
அள்ளித் தினம் அன்புக் காதல் செய்வேன்
காலங்கள் ஓடியே போனால் என்ன ---நம்
காதல் இங்கே என்றும் வாழும்
கோலமிகு மனையாளோடு கொஞ்சுவதே இன்பம் ---அவள்
குமிழசிரிப்பைக் காண கோடி நலம் தேடி வரும்
வாழ்வில் நீ வருவாயெனில் வல்லமை கூடி வரும் ---எனக்கு
வற்றாத செல்வங்கள் என் வாசலுக்கு வந்து சேரும்
ஆழ்மனதில் உன்னை வைத்து ஆராதனை செய்வேன் --நாமும்
ஆயிரம் காலங்கள் அன்பு செய்து அழகாக வாழ்ந்திடலாம்
இன்பம் இதுவே இன்பம் என்று என்றுமே மகிழ்ந்திடுவோம் ---உன்
இடை தொட்டுக் கடை விரித்து எல்லாமும் பெற்றிடுவேன்
துன்பம் என்னும் சொல் தொடராது அறிவாய்ப் பெண்ணே ---நமது
தூயக் காதல் ஒன்றே தொடர்ச்சியாக வெற்றி தரும்
காதல் எண்ணம் வந்தே தீரும்
என்னில் உன்னை இன்றே சேர்ப்பே ன் ---நீ
எந்தன் மனைவியென ஆக வேண்டும் பெண்ணே
கொஞ்சி வரும் தமிழும் நீயோ ---நான்
குலவ நினைக்கும் எனது ஆசைக் கிளியோ
அஞ்சுகத்தின் அழகை யள்ளி வரும் கண்ணே ---இனி
அள்ளித் தினம் அன்புக் காதல் செய்வேன்
காலங்கள் ஓடியே போனால் என்ன ---நம்
காதல் இங்கே என்றும் வாழும்
கோலமிகு மனையாளோடு கொஞ்சுவதே இன்பம் ---அவள்
குமிழசிரிப்பைக் காண கோடி நலம் தேடி வரும்
வாழ்வில் நீ வருவாயெனில் வல்லமை கூடி வரும் ---எனக்கு
வற்றாத செல்வங்கள் என் வாசலுக்கு வந்து சேரும்
ஆழ்மனதில் உன்னை வைத்து ஆராதனை செய்வேன் --நாமும்
ஆயிரம் காலங்கள் அன்பு செய்து அழகாக வாழ்ந்திடலாம்
இன்பம் இதுவே இன்பம் என்று என்றுமே மகிழ்ந்திடுவோம் ---உன்
இடை தொட்டுக் கடை விரித்து எல்லாமும் பெற்றிடுவேன்
துன்பம் என்னும் சொல் தொடராது அறிவாய்ப் பெண்ணே ---நமது
தூயக் காதல் ஒன்றே தொடர்ச்சியாக வெற்றி தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக