கன்னி மலர்ப் பூசை செய்வேன் ---என்
காதலி உன்மேல் ஆசை வைத்தேன்
என்னையே உனக்கெனத் தந்து விட்டேன் ---இனி
எதிர்காலம் உந்தன் கைகளில் இருக்கிறதே
பொன்னி பெற்ற பூங்கொடியும் நீதானோ ---நீ
பின்னிப் பின்னி நடக்கிற பேரழகை என்ன சொல்வேன்
கண்களுக்கு விருந்தான கற்பகமே வாழ்க நீயே ---நான்
கன்னித் தமிழினில் கவிதை மழை பொழிந்திடுவேன்
எட்டி நீ நடக்கையில் இளைஞர்கள் மயக்கமடி ---உன்
பட்டு மலர் மேனியோ பளிங்காலே செய்ததடி
கட்டிக் கரும்பல்லவோ காமனின் கை வில்லல்லவோ ---தினம்
கட்டி யணைத்திடவே நெஞ்சில் கள்வெறி ஏறுதடி
ஊரினைக் கூட்டியே உடனே திருமணமாம் ---இனி
சீர்வரிசை கோடி தேடி வரும் நாடி
வேரிற் பழுத்த பலா நீ விண்ணிலே வட்ட நிலா ---இந்த
பாரினில் உன்னைப் போல பார்த்தவர்கள் யாருமில்லை
மதனும் ரதியும் போல் மகிழ்வோடு வாழ்ந்திடலாம் ---நம்
மக்கள் தொகை பெறுக மனது நீயும் வைத்திடடி
இதனைச் சொல்லிடவே இத்தனை நாளாச்சு ----எந்தன்
எசமானி நீயே நன்கு இசைவாகப் பதிலைச் சொல்லு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக