புதன், 4 செப்டம்பர், 2019

மயக்கம் 7 8 2

கன்னி      மலர்ப்        பூசை    செய்வேன்    ---என் 
காதலி      உன்மேல்     ஆசை     வைத்தேன் 
என்னையே    உனக்கெனத்    தந்து   விட்டேன்   ---இனி 
எதிர்காலம்     உந்தன்    கைகளில்    இருக்கிறதே 

பொன்னி   பெற்ற       பூங்கொடியும்     நீதானோ   ---நீ 
பின்னிப்   பின்னி    நடக்கிற     பேரழகை    என்ன சொல்வேன் 
கண்களுக்கு  விருந்தான    கற்பகமே     வாழ்க     நீயே   ---நான் 
கன்னித்      தமிழினில்     கவிதை     மழை     பொழிந்திடுவேன் 

எட்டி நீ     நடக்கையில்      இளைஞர்கள்     மயக்கமடி   ---உன் 
பட்டு மலர்     மேனியோ   பளிங்காலே     செய்ததடி 
கட்டிக்   கரும்பல்லவோ    காமனின்  கை  வில்லல்லவோ  ---தினம் 
கட்டி   யணைத்திடவே     நெஞ்சில்     கள்வெறி    ஏறுதடி 

ஊரினைக்     கூட்டியே       உடனே       திருமணமாம்   ---இனி 
சீர்வரிசை      கோடி      தேடி வரும்      நாடி 
வேரிற்    பழுத்த     பலா    நீ     விண்ணிலே    வட்ட  நிலா   ---இந்த 
பாரினில்   உன்னைப்    போல      பார்த்தவர்கள்    யாருமில்லை 

மதனும்     ரதியும்     போல்    மகிழ்வோடு     வாழ்ந்திடலாம்   ---நம் 
மக்கள்      தொகை     பெறுக    மனது நீயும்     வைத்திடடி 
இதனைச்     சொல்லிடவே      இத்தனை      நாளாச்சு    ----எந்தன் 
எசமானி      நீயே     நன்கு      இசைவாகப்    பதிலைச்     சொல்லு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக