ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

இனியவர் 7 7 6

கனிந்திடும்        உள்ளம்     ---நம் 
கண்களில்     வெள்ளம் 
கலியுக     தெய்வமன்றோ    ---அவர் 
காண்கையில்    அழகரன்றோ 

வறியவர்       வாழவும்    ---எங்கும் 
வளமைகள்     சூழவும் 
வகுப்பது     நீதியப்பா   ---இந்த 
வழியென்றும்     நன்மையப்பா 

நினைத்தவர்       வாழ்வினில்    ---நல்ல 
நிம்மதி        சேரும் 
அணைத்திடும்     கரங்கள்   ---நமக்கு 
ஆறுதல்        அளித்திடுமே 

ஆற்றாது       அழுதால்    --அதனை
துடைத்திட    அண்ணல் வருவாரே  
அன்பினை     யள்ளித்தருவாரே   ---நமக்கு 
அடைக்கலம்    கொடுப்பாரே 

இனியவர்        அவரே   ---என்றும் 
ஏழையர்         தலைவன் 
எம்மையும்      காப்பாரே    ---கண்ணன் 
இதயத்தில்       வாழ்வாரே   



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக