கனிந்திடும் உள்ளம் ---நம்
கண்களில் வெள்ளம்
கலியுக தெய்வமன்றோ ---அவர்
காண்கையில் அழகரன்றோ
வறியவர் வாழவும் ---எங்கும்
வளமைகள் சூழவும்
வகுப்பது நீதியப்பா ---இந்த
வழியென்றும் நன்மையப்பா
நினைத்தவர் வாழ்வினில் ---நல்ல
நிம்மதி சேரும்
அணைத்திடும் கரங்கள் ---நமக்கு
ஆறுதல் அளித்திடுமே
ஆற்றாது அழுதால் --அதனை
துடைத்திட அண்ணல் வருவாரே
அன்பினை யள்ளித்தருவாரே ---நமக்கு
அடைக்கலம் கொடுப்பாரே
இனியவர் அவரே ---என்றும்
ஏழையர் தலைவன்
எம்மையும் காப்பாரே ---கண்ணன்
இதயத்தில் வாழ்வாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக