தென்றலில் ஆடும் தேன்மலரே ---நீ
என் தேவன் வந்ததைக் கண்டாயா
அன்றவர் போனது வரவில்லையே ---நான்
அடைவது எல்லாம் பெரும் தொல்லையே
சிரித்துப் பேசியெனை மயக்கியவர் ---இந்த
சின்னஇடையாளை எனோ மறந்து விட்டார்
குறுக்கு வழிதனில் போவாரோ ---கோதை
என்னிடம் திரும்பி வருவாரோ
நீரும் நிலமுமாய் ஆனோமே ---என்
நெஞ்சினில் மஞ்சம் கொண்டாரே
வேறு யாரைச் தேடிச் சென்றார் ---அந்த
விவரம் அறிந்தால் தேவலையே
இரவு நேரம் தூக்கமில்லை ---அவர்
இதயத்தில் சிறிதும் இரக்கமில்லை
உறவை உதறிப் போனாரே ===என்
உயிரைக் கூட்டிச் சென்றாரே
காலம் முழுதும் கண்ணீரோ ----இளம்
கன்னியர் காதல் வெந்நீரோ
ஆலம் விழுதாய் வாழ்வதற்கு --அந்த
ஆண்டவன் அனுமதி தருவாரா
என் தேவன் வந்ததைக் கண்டாயா
அன்றவர் போனது வரவில்லையே ---நான்
அடைவது எல்லாம் பெரும் தொல்லையே
சிரித்துப் பேசியெனை மயக்கியவர் ---இந்த
சின்னஇடையாளை எனோ மறந்து விட்டார்
குறுக்கு வழிதனில் போவாரோ ---கோதை
என்னிடம் திரும்பி வருவாரோ
நீரும் நிலமுமாய் ஆனோமே ---என்
நெஞ்சினில் மஞ்சம் கொண்டாரே
வேறு யாரைச் தேடிச் சென்றார் ---அந்த
விவரம் அறிந்தால் தேவலையே
இரவு நேரம் தூக்கமில்லை ---அவர்
இதயத்தில் சிறிதும் இரக்கமில்லை
உறவை உதறிப் போனாரே ===என்
உயிரைக் கூட்டிச் சென்றாரே
காலம் முழுதும் கண்ணீரோ ----இளம்
கன்னியர் காதல் வெந்நீரோ
ஆலம் விழுதாய் வாழ்வதற்கு --அந்த
ஆண்டவன் அனுமதி தருவாரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக