புதன், 25 செப்டம்பர், 2019

அனுமதி 791

தென்றலில்       ஆடும்      தேன்மலரே     ---நீ
என்   தேவன்      வந்ததைக்     கண்டாயா
அன்றவர்      போனது     வரவில்லையே    ---நான்
அடைவது      எல்லாம்     பெரும்   தொல்லையே

சிரித்துப்        பேசியெனை     மயக்கியவர்   ---இந்த
சின்னஇடையாளை     எனோ     மறந்து விட்டார்
குறுக்கு      வழிதனில்     போவாரோ   ---கோதை
என்னிடம்     திரும்பி      வருவாரோ

நீரும்      நிலமுமாய்       ஆனோமே    ---என்
நெஞ்சினில்      மஞ்சம்     கொண்டாரே
வேறு      யாரைச்      தேடிச்      சென்றார்   ---அந்த
விவரம்      அறிந்தால்      தேவலையே

இரவு       நேரம்      தூக்கமில்லை  ---அவர்
இதயத்தில்    சிறிதும்     இரக்கமில்லை
உறவை     உதறிப்      போனாரே    ===என்
உயிரைக்      கூட்டிச்      சென்றாரே

காலம்      முழுதும்       கண்ணீரோ    ----இளம்
கன்னியர்      காதல்     வெந்நீரோ
ஆலம்     விழுதாய்      வாழ்வதற்கு    --அந்த
ஆண்டவன்     அனுமதி     தருவாரா

                                                                                                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக