நிலவில் ஆடித் திரியலாம் ---நாம்
நினைக்கும் இடங்கள் போகலாம்
உலவும் காற்றில் மிதக்கலாம் ---நாம்
ஒருவர் என்றே ஆகலாம்
நாமும் நன்றாய் வாழலாம் ---நமக்கு
நல்ல பிள்ளை பிறக்கலாம்
தேனும் பாலும் ஆகலாம் ---என்றும்
திகட்டாத இன்பம் அடையலாம்
வானில் செல்லும் பறவையாய் ---நாம்
வட்டம் போட்டுப் பறக்கலாம்
காணும் உலகம் கையிலே ---என்றும்
காதல் வாழும் மண்ணிலே
நானும் நீயும் ஒன்றடி ----அது
நடக்கும் நாள்தான் என்றடி
மீனைப் போன்ற கண்களால் ---நீ
மீண்டும் மீண்டும் கொல்கிறாய்
வாழ எனக்கு வலுவில்லை ---வேறு
வழியில் போகவும் விதியில்லை
ஆள வருவாய் கண்மணி ---இந்த
அடிமைக்கு நீதான் பொன்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக