திங்கள், 9 செப்டம்பர், 2019

காவியம் 7 8 7

போராடிப்        போகுறியே         கோவமா   ---உன்னை
பொறுப்பாக    வாழவைப்பேன்      நானம்மா
நீராடும்        வேளையிலும்       மீனம்மா   ---என்
மனது       நெருப்பாகக்     கொதிக்குது     ஏனம்மா

கண்ணாலே      கண்டதிலே      கண்ணம்மா   ---எனக்கு
கவனமெங்கோ      போயிடுச்சே    பொன்னம்மா
உன்னாலே      துடிக்கிறேனே     குருவம்மா   ---உனக்கு
உள்ளதடி  இன்னும்   நிறையக்    குறும்பம்மா

பொன்னாலே     மாளிகையும்     கட்டுவேன்   ---மண
பெண்ணாய்     உன்னை வைச்சு     வாழுவேன்
கண்ணாலம்    செய்துகொள்ள     ஆசையா   ---உனக்கு
காலமெல்லாம்     செய்வேனே      பூசையே

வேண்டிய       செல்வங்கள்        உண்டடி    ---உன்னை
விரும்பியே      அலைபவன்      நானடி
தூண்டிலாகும்    உன்னழகு     தேனடி    ---தினம்
துடித்து      அழுபவன்      தானடி

அழகாகப்        பிள்ளைகள்       பிறந்திடும்   ----அவர்கள்
அறிவாலே       எந்நாளும்      சிறந்திடும்
கலையாடும்    கண்ணே   நீ      காவியம்   ---அந்த
கடவுளே        தீட்டி  வைத்த     உயிரோவியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக