ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஒரு நாள் 7 7 7

நிலவினில்         ஆடிக்         களித்தேன்    ---ஓடும்
நீரினில்        மூழ்கித்      திளைத்தேன்
கலைகள்     கற்றும்     மகிழ்ந்தேன்    ---என்
கள்வன்       உன்னையேன்   காணேன்

வருவாய்        என்றொரு        ஏக்கம்   ---நீ
வந்தால்        பறந்திடும்       தூக்கம்
தருவாய்      அன்பெனும்     முத்தம்   ---பின்
தழுவிக்       கொள்வாயே   நித்தம்

உடலும்         துரும்பாய்ப்     போச்சு   ---எனக்கு
ஊரார்        பலரால்         பேச்சு
கடலாய்க்      கண்ணீர்       ஆச்சு   ---உன்னை
கண்டால்       துன்பம்        போச்சு

என்றும்         இணைவோம்        என்று   ---நீ
எனக்குச்       சொன்னாயே        அன்று
கண்ணா      வந்திடில்         நன்று    ---இல்லையேல்
நானும்        தாயினைப்    பிரிந்த     கன்று

மறவா         இன்பங்கள்       கொடுத்தேன்    ----இந்த
மலரின்       தேனையும்       குடித்தாய்
உறவை       எண்ணியே     துடிப்பேன்    ---ஒருநாளிலும்
வரவில்லை     என்றால்     மடிவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக