நிலவினில் ஆடிக் களித்தேன் ---ஓடும்
நீரினில் மூழ்கித் திளைத்தேன்
கலைகள் கற்றும் மகிழ்ந்தேன் ---என்
கள்வன் உன்னையேன் காணேன்
வருவாய் என்றொரு ஏக்கம் ---நீ
வந்தால் பறந்திடும் தூக்கம்
தருவாய் அன்பெனும் முத்தம் ---பின்
தழுவிக் கொள்வாயே நித்தம்
உடலும் துரும்பாய்ப் போச்சு ---எனக்கு
ஊரார் பலரால் பேச்சு
கடலாய்க் கண்ணீர் ஆச்சு ---உன்னை
கண்டால் துன்பம் போச்சு
என்றும் இணைவோம் என்று ---நீ
எனக்குச் சொன்னாயே அன்று
கண்ணா வந்திடில் நன்று ---இல்லையேல்
நானும் தாயினைப் பிரிந்த கன்று
மறவா இன்பங்கள் கொடுத்தேன் ----இந்த
மலரின் தேனையும் குடித்தாய்
உறவை எண்ணியே துடிப்பேன் ---ஒருநாளிலும்
வரவில்லை என்றால் மடிவேன்
நீரினில் மூழ்கித் திளைத்தேன்
கலைகள் கற்றும் மகிழ்ந்தேன் ---என்
கள்வன் உன்னையேன் காணேன்
வருவாய் என்றொரு ஏக்கம் ---நீ
வந்தால் பறந்திடும் தூக்கம்
தருவாய் அன்பெனும் முத்தம் ---பின்
தழுவிக் கொள்வாயே நித்தம்
உடலும் துரும்பாய்ப் போச்சு ---எனக்கு
ஊரார் பலரால் பேச்சு
கடலாய்க் கண்ணீர் ஆச்சு ---உன்னை
கண்டால் துன்பம் போச்சு
என்றும் இணைவோம் என்று ---நீ
எனக்குச் சொன்னாயே அன்று
கண்ணா வந்திடில் நன்று ---இல்லையேல்
நானும் தாயினைப் பிரிந்த கன்று
மறவா இன்பங்கள் கொடுத்தேன் ----இந்த
மலரின் தேனையும் குடித்தாய்
உறவை எண்ணியே துடிப்பேன் ---ஒருநாளிலும்
வரவில்லை என்றால் மடிவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக